Wednesday, November 17, 2021

 

கதையும் சிந்தனையும்  

விருப்பம் 

 

அல்லி படிப்பில் கெட்டிக்காரி. ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை மிகவும் அக்கறையுடன் படிப்பவள். அவள் புரியாத பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை உடையவள். அல்லி பாடத்தைப் பற்றிய தொடர் விளக்கங்களை இணையப் பக்கங்களிலும் படித்துத் தெரிந்துகொள்வாள்.

அல்லி, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னரே ஒருசில பாடங்களைப் பற்றிய  விளக்கங்களை இணையப் பக்கங்களின் மூலம் படித்துத் தெரிந்து கொள்வாள். இவை எல்லாம் அவளுடைய கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உதவிசெய்து வந்தன. அல்லி மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள். அதனால், அவள் அறிவியல் பாடத்தை மிகவும் விரும்பிப் படித்து வந்தாள்.

அல்லி விரும்பியது போல் மருத்துவராகச் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட அல்லி ஒரு மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மருத்துவத் துறையில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். அதனால், மாணவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பேராசியராக அல்லி விளங்கினார்.  அல்லி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனையும் செய்து வந்தார். அதனால் அவர் ஏழைகளின் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். 

  

 (சொற்களின் எண்ணிக்கை 112)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகத்தான தொண்டு.

No comments:

Post a Comment