Thursday, September 7, 2023

 


கவிதை - கூடியகம் மகிழ


சின்ன சின்ன பறவை

சிறகை விரிக்கும் பறவை

வண்ண வண்ண பறவை

வடிவம் மின்னும் பறவை


வட்டமிட்ட மிட்டுப் பறக்குதே 

வாழ நினைத்துப் பறக்குதே

காலால் பிடித்துப் பறக்குதே

காட்டில் போய் நிற்குதே!


துள்ளித் துள்ளிப் பறக்குதே

துயரம் மறந்து பறக்குதே

தன்னை மறந்து பறக்குதே

தன்வாழ்வு சிறக்கப் பறக்குதே!


அங்கும் இங்கும் பறக்குதே

அழகாய் விரித்துப் பறக்குதே

அலகால் கொத்தி எடுக்குமே

அளவாய் உண்டு மகிழுமே!


குஞ்சை நினைத்துப் பறக்குதே

கூட்டை நோக்கிப் பறக்குதே

கூடியகம் மகிழப்  பறக்குதே  

கொள்ளை இல்லா இன்பத்தாலே!

                                                 - சிகுரு

Thursday, August 24, 2023

 

அலுவலக மின்னஞ்சல்

ஒரு பிரிவு 

பாராட்டு மின்னஞ்சல்


எழுதுபவர் பற்றிய விவரம் 

கடிதம் எழுதுவதன் நோக்கம்

பாராட்டுக்குப் பொருத்தமான தகவல்களை அளித்தல்

எடுத்துக்காட்டு

சாதனைசெய்த மேதைகள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், குடும்ப வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள்,  நடுவு நிலைதவறாத தீர்ப்பு வழங்குபவர்கள், ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்கள், அன்பான குணம் படைத்தவர்கள், சிறந்த பண்பு நிறைந்தவர்கள், 

இயற்கைப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணத்தால் பாராட்டுதல், ஏழை நாடுகளுக்கு உதவி செய்ததால் பாராட்டுதல், முற்போக்குச் சிந்தனை வளர்ச்சி உடையவராக இருந்தால் பாராட்டுதல்

உழைப்பால் உயர்ந்த நல்வழிகாட்டியைப் பாராட்டுதல், அறிவியல் சிந்தனையாளர்களைப் பாராட்டுதல், பாராட்டும் வண்ணம் சிறப்புப் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரைப் பாராட்டுதல், இலக்கியச் சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் பாராட்டுதல், நல்வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்.


Tuesday, August 15, 2023

 

ஒலிப்பதிவு செய்யவும்

ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் வசித்தன. அவை இரண்டும் நன்றாகப் பழகும் குணமுடையவை. எப்போதும் மற்ற விலங்குகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்ளும். ஆனால், நாள்தோறும் பசிக்கும்போது தனக்குப் பிடித்த விலங்குகளை மட்டும் கொன்று தங்களுடைய பசியைப் போக்கிக்கொள்ளும்.


அதனால், மற்ற விலங்குகளுக்குச் சிங்கங்களைப் பிடிக்காது. அவை சிங்கத்தைப் பார்த்தாலே ஒழிந்துகொள்ளும். இந்தச் செயல் சிங்கங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அவை பசி இல்லாமல் இருந்தால் மற்ற விலங்குகளைக் கொல்லும் நிலை ஏற்படாது. அந்த இனமும் அழியாது என்று நினைத்தது. அதனால், அவ்வப்போது அவை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.  ஆனால், இயற்கை விலங்குகளைக் கொன்று தின்னும் பழக்கத்தை விலங்குகளுக்குக் கொடுத்ததன் ரகசியத்தை அவை புரிந்துகொள்ளவில்லை. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் அவை மகிழ்ச்சியுடன் வாழும்.  

சிகுரு

Monday, August 14, 2023

  பிழை நீக்கம்  

விலக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கறுத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாக புரியவில்லை என்றாலும் அதனை வக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுறுக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெலிவாகப் புரிந்துகொள்ளும் வன்னம்  இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாரும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் செல்லாகவும் கொள்ளலாம்.


பிழை நீக்கம் 

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கறுத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்கு  சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன்  பொருல் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பல்லமாக இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்கு காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமைநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 


 வாக்கியம் (சொற்றொடர்) 

விளக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கருத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாகப் புரியவில்லை என்றாலும் அதனை வாக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாறும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் சொல்லாகவும் கொள்ளலாம்.


கருத்துமாறா வாக்கியங்கள்

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கருத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன் பொருள் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பள்ளம் இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்குக் காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 



 

பிழை நீக்கம்


கோபாலும் அவனுடைய நண்பர்களும் காடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றனர். அவர்களைக் கண்ட கடைக்காரர் வருக வருக என்று கூறினார். இதைக் கேட்ட கோபாலுக்கு ஆச்சரியமாக இருந்தன. அவனுடைய நண்பர்களுக்குப் புதுமையா இல்லை. அதனால், அவர்கள் அக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அனுபவம் உடையவர்கள். கடைக்காரர் இப்படித்தான் பேசுவார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவிட்டு விட்டிற்குத் திரும்பிச் சென்றனர். 

அவர் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். பின்னர், வீட்டிற்குச் சென்றனர். அவர்களை கண்டவுடன் கோபாலன் அம்மாவுக்கு வறுத்தம் ஏற்பட்டது. அதனால், அவர் மதிய உணவு தயாரிக்க வேண்டிய நிலையில் இருந்தார். மதிய உணவு உன்பதற்கு நேரம் அதிகம் ஆகிவிடும் என்று நினைத்தார்.  ஆனால், அவர் வேகமாகச் சமைத்து உறிய நேரத்தில் அனைவருக்கும் விருந்தளித்தார். வீட்டிற்கு வந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். 


Thursday, August 3, 2023

 

சிறு கதை - புத்துணர்ச்சி


அதற்குக் கோபி, `அது ஒன்றும் இல்லை அம்மா, இன்று பள்ளிக்கூடம் போவதற்குச் சலிப்பாக இருக்கிறது. மனம் சோர்ந்துவிட்டது. சில நேரங்களில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியமாட்டங்கு. அதை மீண்டும் படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது. தேர்வும் வரப்போவதாக ஆசிரியர் சொன்னார் அதுதாம்மா நினைத்தாலே பயமாக இருக்கிறது`

இதற்கெல்லாம் சோர்வாகிவிடாதே இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் வரும் நாம் அவற்றை எல்லாம் சமாளித்துப் பழகிக்கொள்ளவேண்டும். எப்போதும் பிரச்சினையைப் பார்த்துப் பயப்படக்கூடாது. அதை எப்படிச் சரி செய்வது என்பதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் கோபி. நீ பள்ளிக்கூடம் போய்வா. நானும் அப்பாவும் இன்று இரவு உன்னிடம் சில யோசனைகளைச் சொல்கிறோம். எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார் அம்மா. 

கோபியின் மனத்தில் சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பலவீனமான மனம் பதட்டமில்லாமல் இருந்தது. அம்மா சொல்லிய ஆறுதல் கருத்துகளைப் பற்றி யோசித்துக்கொண்டே கோபி சாலையின் ஓரத்தில் நடந்து சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த அவனுடைய மாமாவைச் சந்தித்தான். அவனுடைய மாமாவும் கோபியைப் பார்க்க அவனுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னார். 


மாமாவைக் கண்டதும் கோபிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. மனக்கவலை காற்றில் பறந்துசெல்லும் இலையைப்போல் பறந்து சென்றது. அன்று முழுவதும் கோபி வகுப்பறையில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. 

பள்ளிமுடிந்து தன்னுடைய நண்பன் அரவிந்தனுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரவிந்தன் கோபியின் படிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றான். அரவிந்தன் படிக்கும் முறையைப் பற்றிக் கோபியிடம் சொல்லிக்கொண்டே சென்றேன். அவன் சொல்லிய கருத்துகளை எல்லாம் ஆழமாகப் புரிந்துகொண்டான் கோபி. 

கோபியை எதிர்பார்த்து வீட்டினர் காத்திருந்தனர். கோபி மகிழ்ச்சியுடன் வந்ததை நினைத்து பெற்றோர்களும் அவனுடைய மாமாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு நேரம் அனைவரும் அமர்ந்து கோபிக்குப் படிக்கும் முறை பற்றி எடுத்துக்கூறினர். கோபியின் மனத்தில் இருந்த சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைத்தது. மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றான் கோபி. 

Monday, July 31, 2023

 


         நேரம்

நம்மைக் கணிக்கும் நேரம்

நாம் கணிக்கும் நேரம்

நன்மை தரும் நேரம்

நலம் காக்கும் நேரம்


நல்லோர் சொல்லும் நேரம்

நலம்பாடி வரும்நல் நேரம்

நன்மையே  தருமின்ப நேரம் 

நாளெல்லாம்  காக்கும் நேரம். 


நாம் மகிழும் அகநேரம்

நலங்காக்க உதவும் நேரம்

கண்ணைப்போல் காக்க வேண்டும் 

காலமெல்லாம்  காக்கும் நேரமே!

                                                          - சிகுரு


Sunday, July 30, 2023

 


பொருத்தமான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.  


ஒருநாள் ஒரு செடியில் பூத்த மலர் மறுநாள் வாடிப்போய்விடும். அதற்காக அந்தச் செடி வருந்துவது கிடையாது. ஏனென்றால்  மறுநாள் புதிய மலர் பூக்கத்தொடங்கிவிடும். பூத்த மலர்களைக் கண்ட நம் உள்ளம் பூரிப்படைகிறது. அந்தச் செடியும் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும். மேலும், அது அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சி பெறத்தொடங்கிவிடுகிறது. ம ம அதுபோலதான் மனிதனுடைய வாழ்க்கையும் நாள்தோறும் பல மாற்றங்களை அடைந்துகொண்டே செல்கிறது. 

இந்த மாற்றங்கள் நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்கிறது. நாள்தோறும் புதுப்புது சிந்தனை ஏற்படுகிறது. இந்தச் சிந்தனையின் மூலம் நாம் தொடர் வளர்ச்சி பெறுகிறோம். இந்த வளர்ச்சி  குடும்ப வளர்ச்சியாகத்  தோன்றிச் சமூக  வளர்ச்சியாக மாறுகிறது.  இன்னும் சொல்லப்போனால்  ஒரு நாட்டின்  வளர்ச்சியாக மலர்கிறது. பல நாடுகளின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

வினாக்கள்.


அடைப்புக் குறிக்குள் சரியான விடையின் எண்ணைத்

தேர்ந்தெடுத்து எழுதவும்


எப்போது நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது?


1 பூத்த மலர் வாடிவிடும்போது

2 புதிய மலர்களைக் கண்டபோது

3 செடி வருந்தாமல் இருக்கும்போது

4 செடி அழகாகத் தோன்றும்போது               (           )



2 மனிதனுடைய வாழ்க்கை என்ன செய்து கொண்டிருக்கிறது?


1 அடுத்த கட்டத்தை நோக்கி வளர்கிறது

2 அழகாகத் தோற்றமளிக்கிறது

3 நாள்தோறும் பல மாற்றங்களைப் பெறுகிறது

4  எப்போதும் வருந்தாமல் இருக்கிறது           (            )



3 எப்போது நாம் தொடர்வளர்ச்சியைப் பெறுகிறோம்?


1 புதுப் புது சிந்தனை ஏற்படும்போது

2 குடும்பம் வளர்ச்சி அடையும்போது

3 சமூகம் வளர்ச்சி அடையும்போது

4 உலகம் வளர்ச்சிக்கு வித்திடும்போது        (            )



சுயவிடைக் கருத்தறிதல். 



1 மனிதனுடைய வாழ்க்கையை எதனோடு ஒப்பிடுகிறோம்? ஏன்?


_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ 


2 இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு எவை எல்லாம் காரணங்களாக விளங்குகின்றன?


______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________




 


2 முன்னுணர்வுக் கருத்தறிதல்      

ஐந்து கோடிட்ட இடங்களுக்கு உரிய ஐந்து விடைகளை உதவிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுத்தல்.

 

ஒருநாள் ஒரு செடியில் பூத்த மலர் மறுநாள் வாடிப்போய்விடும். அதற்காக அந்தச் செடி வருந்துவது கிடையாது. ஏனென்றால்  மறுநாள் புதிய மலர் பூக்கத்தொடங்கிவிடும். பூத்த மலர்களைக் கண்ட நம் (Q1)__________  பூரிப்படைகிறது. அந்தச் செடியும் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும். மேலும், அது அடுத்த (Q2)__________  நோக்கி வளர்ச்சி பெறத்தொடங்கிவிடுகிறது.  அதுபோலதான் மனிதனுடைய வாழ்க்கையும் நாள்தோறும் பல மாற்றங்களை அடைந்துகொண்டே செல்கிறது. இந்த மாற்றங்கள் நம்மை அடுத்த கட்ட (Q3)__________ அழைத்துச் செல்கிறது. நாள்தோறும் புதுப்புது சிந்தனை ஏற்படுகிறது. இந்தச் சிந்தனையின் (Q4)__________  நாம் தொடர் வளர்ச்சி பெறுகிறோம். இந்த வளர்ச்சி  குடும்ப வளர்ச்சியாகத்  தோன்றிச் சமூக  வளர்ச்சியாக  (Q5)__________. இன்னும் சொல்லப்போனால்  ஒரு நாட்டின்  வளர்ச்சியாக மலர்கிறது. பல நாடுகளின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

(1)  கட்டத்தை              (2) உடம்பு

(3) மூலம்               (4) ஓட்டத்திற்கு

(5) மாறுகிறது            (6) இருக்கிறது

(7) உள்ளம்               (8) கட்டடத்தை

(9)  நகர்வுக்கு            (10) ஓட்டம்


 


1 பிழை திருத்தம் 

ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ள ஐந்து பிழைகளைச் சரி செய்ய வேண்டும்

மனிதர்களில் பல குணம் படைத்தவர்கள்  இருப்பார்கள். அவர்களைப் பற்றிப் (1) புறிந்துகொள்வதற்கு நமக்கு அனுவம் மிகவும் தேவைப்படும். இந்த அனுபவத்தை நாம் (2) பெருவதற்குப் பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் படிக்கும் பள்ளியிலிருந்து (3) பனியாற்றும்  அலுவலகம் வரை அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகத்திற்குச் சமம். ஒரு புத்தகத்தை (4) மேலொட்டமாகப் படித்தால் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதுபோல ஒரு மனிதனிடம் பட்டும் படாமலும் (5) பலகினால் அவரைப் பற்றி முழுமையாகப்  புரிந்துகொள்ள முடியாது. ஒருவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவரிடம் பல கோணத்தில் பழகிப் பார்க்க வேண்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


பிழை நீக்கம்

ஒரு சில நேரங்களில் நமக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு. இதற்குச் சில முக்கியக் காரணங்கள் அடிப்படையாக (1) விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று அவசர அவசரமாக ஒரு செயலைச் செய்வது. எந்த ஒரு (2) செயல்களையும் முன் கூட்டியே திட்டமிடாமல் செய்யும் போது அவசரச் சூழல் ஏற்படுகிறது. அவசரச் (3) சூழலை சமாளிக்கும்போது குழப்பம் ஏற்படுகிறது. 

குழப்பத்தில் சில தவறுகள் ஏற்படலாம். இந்தத் தவறுகளின் மூலம் சில (4) பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம். (5) ஆனால் குழப்பமாக இருக்கும்போது ஒரு செயலில் ஈடுவதை முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது ஆகும். (6) நமக்கு தெளிவு ஏற்பட்ட பின்னர் எடுத்துக்கொண்ட செயலில் ஈடுபடுவது மிகவும் நல்லது. இதனால் நமக்கு நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும். 



Thursday, July 27, 2023

 

பிழை நீக்கம் - தேர்வுக்குரியது. அறிந்துகொள்வோம்.

நம்மில் பலர் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம். கதைகளில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற கேள்வியும் நமக்குள்  (1) எலும். கதைகள் மனிதர்களைச் செதுக்கும் சிற்றுளிகளாக விளங்குகின்றன என்று சொன்னால் மிகையாகாது. கதைகளைக் கேட்கக் கேட்க, கதைப்புத்தகங்களைப் படிக்கப்படிக்க நம் (2) சிந்தணை தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றது. சிந்தனை வளர்ச்சி (3) பெறுகும்போது இவ்வுலகில் சிறப்பாக வாழும் முறையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.  ஏற்படும். கதைகளைச் செவிவழிக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள், நம்முடைய         (4) முண்னோர்களின் வாழ்க்கைக் கதைகள், (5) வரலாற்றுகதைகள், புராணக்கதைகள், இதிகாசக்கதைகள், மந்திரவாதிகள் சொல்லும்  கதைகள், படக்கதைகள்,  கோட்டுக்கதைகள், பூனை, எலி, கிளி, காகம் போன்ற உயிரினங்கள் சொல்லும் கதைகள் என்று பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 பிழை நீக்கம் - தேர்வுக்குரியது. அறிந்துகொள்வோம்.

தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு செய்தியும் ஒரு கதையே ஆகும். தனி மனிதர்களின் வாழ்க்கை (1) அணுபவங்கள் அனைத்தும் சுவையாகச் சொல்லுகின்றபோதும் எழுதுகின்ற போதும்  கதைகளாக மாறுகின்றன.இத்தகைய உயர்வுத் தன்மைகளைப் பெற்ற கதைகளை நாம் கட்டாயம் வாசித்துப் (2) பொருல்புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் அகன்ற வாசிப்பாகத் தொடங்கும் கதை வாசிப்புப் பழக்கம், நம்மை (3) ஆள்ந்த வாசிப்புக்குக் கொண்டுசெல்லும் என்பது திண்ணமாகும். இவற்றின்மூலம் கதைகளை நாம் பகுத்துப்பார்க்கும் (4)  திறணை  வளர்த்துக் கொள்ளலாம். நம்முடைய பகுப்பாய்வுச் சிந்தனை வளர்ச்சி அடையும்போது நம்முடைய வாழ்க்கையில் (5) ஏர்படும் பல பிரிச்சினைகளுக்கு எளிதில் தீர்வுகாணும் வழி பிறக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 




பிழை நீக்கம்   தேர்வுக்குரியது. 

5 பிழைகளை நீக்கவேண்டும்

மனித வாழ்க்கையில் காலம் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. (1) கலத்தின் சிறப்பினை இவ்வுலகில் வாழ்ந்த முன்னோர் பலரும் உணர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் காலத்தைப் (2) பிறித்துள்ளனர். இக்காலம் பெரும்பாலும் இயற்கை அமைப்பைப் பொறுத்து (3) அமைந்துள்ளன. இயற்கையின் தன்மையினையும் மாறுபாட்டையும்  உணர்ந்த முன்னோர் அவற்றைப் பல நிலைகளாகப் பகுத்துள்ளனர். இந்தப் பகுப்பின் ஒட்டுமொத்தமே ஆண்டாகக் (4) கனக்கிடப்படுகிறது. ஆண்டினை மாதங்களாகப் பிரித்தனர். மாதத்தை வாரங்களாகவும் வாரத்தை நாட்களாகவும் பிரித்தனர்.

நம் முன்னோரும்  காலத்தைக் கணிப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் (5) வாணவியலைப் பற்றி நன்றாகத் தெரிந்துள்ளனர். இதனை அவர்கள் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். அவர்கள் சில நட்சத்திரங்களைக் கண்டறிந்து (6) அதற்குப் பெயரிட்டுள்ளனர். மேலும்அவை எக்காலகட்டத்தில் தோன்றும் எக்காலகட்டத்தில் மறையும் என்பதையும் நன்றாக அறிந்துள்ளனர். பண்டைய (7) இளக்கியங்களில் நட்சத்திரங்களை விண்மீன் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிபபாக விண் மீனைப் பற்றிய செய்தியினைப் புறநானூறுஅகநானுறு சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் காணலாம்

Wednesday, July 26, 2023

 



    இதயமலர்

கல்லும் கனியாகுமே

காவியமும் தேனாகுமே

சொல்லும் மொழியாகுமே

மொழியும் விழியாகுமே!

 

இல்லும் தேனாகுமே

இனிப்பும் மனமாகுமே

இனிமை குணமாகுமே

இன்பம் உளமாகுமே!!

 

பண்பே ஒளியாகுமே

பாசத்தின் வழியாகுமே

இன்பம் உருவாகுமே

இதயம் மலராகுமே!!!

                  -சிகுரு


Monday, July 24, 2023

 

விழுமியங்களும் நாமும்

விழுமியங்கள் என்பவை நம்முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வந்தவை. விழுமியங்களை நாம் பின்பற்றாவிட்டால் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தனிமனிதனுடைய வாழ்விலும் சமூகத்தின் அமைப்பிலும் பல சீர்கேடுகள் ஏற்படும். காலப்போக்கில் சமூகத்தில் குழப்பம் ஏற்படுவதோடு அமைதி இன்மையும் ஏற்படும். எனவேதான், காலங்காலமாக உலகமுழுவதும் சிறந்த விழுமிங்களை மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.

குழந்தைப் பருவத்திலிருந்து நல்ல வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கு நாம் எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றைப் பற்றிய கருத்துகள் மூதுரையிலும், திருக்குறள்களிலும் நீதி நூல்களிலும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை நாம் பின்பற்றி நம்முடைய எதிர்காலத்தைச் சிறப்புடன் அமைத்துக்கொள்வோம்.

- சிகுரு

 

 


 


போட்டியும் ஊக்கிவிப்பும் பாராட்டும்


 அப்பா அவருடைய அறையில் தனியாக இருக்கும்போது அவரிடம் சமையல் போட்டியில் கலந்துகொள்வதன் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். அவரிடம் `தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது, போட்டியில் கலந்துகொள்வது வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் நமக்கு அனுபவத்தைத் தரும், நம் குடும்பப் பிணைப்பை ஏற்படுத்தும் எனவே நீங்கள் அவசியம் சமையல் போட்டில் கலந்துகொள்ள வேண்டும்` என்று கூறினேன். அதன்பின்னர் என்னுடைய அப்பா அப் போட்டில் கலந்துகொள்ள சம்மதித்தார்.

போட்டி நடைபெறுவதற்கு முன்னர் நாங்கள் சில நாட்கள் எங்கள் வீட்டில் சமையல் பயிற்சி செய்து பார்த்தோம். இது சிறந்த அனுபவத்தை எங்களுக்குத் தந்தது. போட்டி நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் சமையல் போட்டில் கலந்து கொண்டோம்.

இந்தச் சமையல் போட்டியில் எங்கள் குடும்பத்தினருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அதோடு எங்கள் குடும்பத்தினரைப் போட்டியைக் காண வந்த அனைவரும் பாராட்டினர்.  நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பி வந்தோம். என்னுடைய அப்பா என்னை மிகவும் பாராட்டினார். அதோடு அவர் எப்பொழுதும் ஒரு போட்டில் கலந்துகொள்வதுதான் முக்கியம், பரிசு பெறுவது நமக்கு முக்கியமில்லை என்பதை இப்போட்டியின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன் என்று எங்களிடம் கூறினார்.

 


 

விழுமியங்களும் நாமும்


சிறப்புப் பெற்ற விழுமியங்களை நாம் பின்பற்றாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும். தனிமனிதனுடைய வாழ்விலும் சமூகத்தின் அமைப்பிலும் பல சீர்கேடுகள் ஏற்படும். காலப்போக்கில் சமூகத்தில் குழப்பம் ஏற்படுவதோடு அமைதி இன்மையும் ஏற்படும். எனவேதான், காலங்காலமாக உலகமுழுவதும் சிறந்த விழுமிங்களை மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.

குழந்தைப் பருவத்திலிருந்து நல்ல வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கு நாம் எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றைப் பற்றிய கருத்துகள் மூதுரையிலும், திருக்குறள்களிலும் நீதி நூல்களிலும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை நாம் பின்பற்றி நம்முடைய எதிர்காலத்தைச் சிறப்புடன் அமைத்துக்கொள்வோம்.

-----  சிகுரு


 


மின்னஞ்சல்

பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

சமீபத்தில் உங்கள் வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக மன்றத்தில் கட்டுரை எழுதும் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போட்டியில் நீ கலந்துகொண்டு முதலிடம் பெற்றாய். அதற்கு எத்தகைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாய் என்பது குறித்து உன்னுடைய நண்பனுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும்.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: somu@kgoomail.com

பெறுநர்: sankar@kgoomail.com


குறிப்புகள்

முதல் பத்தி

நலம் விசாரித்தல்

இரண்டாவது பத்தி – எங்குப் போட்டி நடைபெற்றது, எப்படித் தகவலைத் தெரிந்துகொண்டாய்,

மூன்றாவது பத்தி

என்னென்ன முயற்சிகள் செய்தாய்.

ஆர்வத்துடன் ஈடுபடுதல், போட்டிக்குரிய கட்டுரைகளைப் படித்தல், சில தலைப்புகளில் எழுதிப் பார்த்தல், பிழைநீக்கம் செய்து பார்த்தல், ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டல், பெற்றோரிடம் எழுதும் முறையைப் பற்றி விளக்கிக் கூறுதல்.

நண்பனையும் போட்டியில் கலந்துகொள்ள ஊக்கிவித்தல்

நன்றி

இப்படிக்கு

உன்பெயர்


 

பிழை நீக்கம்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். 

இதன் 1 மூலம் நாம் வால்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. 

இந்த உலகம் மிகவும் பெரியது. என்னற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. 

3

அதனை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள 

4முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதள்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் 

5கட்டாயம் வாசித்துப் பலக வேண்டும். இவற்றின் மூலம் நம்முடைய சிந்தனை மேலோங்கி வளரும்.


 

மின்னஞ்சல்


பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

உன் நண்பனிடம் அமைந்திருக்கும் உயர்ந்த பண்புகளை விளக்கி வெளிநாட்டில் வசிக்கும் உன்னுடைய மாமாவுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும்.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: prabu@kgoomail.com

பெறுநர்: ragu@kgoomail.com

குறிப்பு

அனுப்புநர் முகவரி

பெறுநர் முகவரி

பொருள்: நண்பனிடம் அமைந்திருக்கும் உயர்ந்த பண்புகள்

முதல் பத்தி

முதலில் நலத்தைப் பற்றிக் கூறுதல்

இரண்டு அல்லது மூன்று பத்திகள் உயர்ந்த பண்புகளைப் பற்றி எழுதுதல்.

அன்பு, அக்கறை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, பொறாமை இல்லாமல் இருத்தல்,

பாடங்களைப் பற்றி விளக்கும் குணம்

பிரச்சினைக் காலங்களில் தீர்வுக்கு ஆலோசனை கூறும் பண்பு

ஒரு பத்தி முடிவுரை

(நல்ல நண்பர்கள் கிடைப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள். எனக்கும் மிகச்சிறந்த நண்பன் கிடைத்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுடைய மின்னஞ்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

எழுதியர் பெயர்


 



வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கி எழுதுக.

முன்னுரை( தொடக்கம்)

பொருள் (உடல், வளர்ச்சி)

முடிவுரை

வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பின் அவசியம் பற்றித் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்தல்

1 நல்லறிவை வளர்த்தல் 

2 பொது அறிவை வளர்த்தல்

3 மொழி வளத்தைப் பெருக்குதல்

4 சரளமாக வாசித்தல்

5 எழுத்துத் திறனை வளர்த்தல்

6 படைப்பாக்கத்திறனை வளர்த்தல்

7 நல்லுறவை வளர்த்தல்

8 தீய சிந்தனையை விலக்குதல்

9 நல்லுறக்கத்தைப் பெறுதல்

10 பொழுது போக்கு

11   முடிவுரை

 

1 பொது அறிவை வளர்த்தல்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். இதன் மூலம் நாம் வாழ்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. இந்த உலகம் மிகவும் பெரியது. எண்ணற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அவற்றை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதழ்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் கட்டாயம் வாசித்துப் பழக வேண்டும் இவற்றின்மூலம் நம்முடைய அறிவுத்திறன் கூர்மை அடையும் 21- ஆம் நூற்றாண்டுத் திறன்களை எளிதில் பெறலாம். நம்முடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும். இச்சமுதாயத்தில் நம்முடைய மரியாதை உயரும்.