தவறே செய்யா மனிதருண்டோ!
நம்மை அறிவோம்
நாளும் உயர்வோம்
பிறர்
சொல்வதில் உண்மை இல்லை
சொல் சூத்திரத்தில் உண்மை உண்டு
சூட்சமத்தில் அதனை அறிவோம்
சுற்றத்தோடு இணைந்து நிற்போம்
குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை
சொல்லிச் சென்றார் முன்னவர்தாமே
சொன்னதில் என்ன தவறு உண்டு
சொன்னதை நினைப்போம இன்று!
நம்மை அறிவோம்
நாளும் உயர்வோம்
நலமாய் வாழ நாளும் கற்போம்
கற்றவழியை என்றும் தொடர்வோம்
தவறுவந்தால்திருத்திக்கொள்வோம்
தவறே செய்யா மனிதருண்டோ!