உயர்நிலை 4. இலக்கியம் 2 மாணவர்கள் கவனத்திற்கு.
கீழ்க்கண்ட வினாக்களில் ஒன்றைத் தேர்வு செய்து குறைந்தது ஐந்து கருத்துகளைத் தமிழில் தட்டச்சு செய்து வலைப்பூ பக்கத்தில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில்
கோகிலா ________ பண்பு நலன்கள்.
2. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் முக்கியப் பாத்திரமாக வரும் அனந்தராமனின் பண்பு நலன்கள்
3. நாவலில் உங்களுக்குப் பிடித்த ஐந்து நல்ல வரிகள்
4. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் இடம்பெறும் நண்பனின் உயர்ந்த குணங்கள்
5. சமூகக் கருத்துகள் ஐந்து
6. கீழ்க்காணும் பாடலில் வரும் நயத்தை மட்டும் விளக்கு.
``வலையில் சிக்கிய மீன்
வலையைக் கிழித்து வந்தது
வாழ மிகத் துடித்தது
வாமும் முறையைக் கற்றது!``
உயர்நிலை 1, 2, 4 வகுப்பு மாணவர்கள் இதுவரை தமிழில் படித்துத் தட்டச்சு செய்த கட்டுரை அல்லது கதைப் பகுதியை இப்பக்கத்தில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Saturday, March 28, 2009
Thursday, March 26, 2009
எங்க நாடு
எங்க நாடு எங்க நாடு -
அதுசிங்கை நாடு சிங்கை நாடு
சிரித்து வாழ சிந்தித்து வாழ
சிறந்த நாடு எங்க நாடு
எங்க நாடு எங்க நாடு
- அதுதங்க நாடு தங்க நாடு
தரணி புகழும் எங்க நாடு
தரம் நிறைந்த தங்க நாடு
நான்கும் தெரிந்த எங்க நாடு
நன்மை தீமை அறிந்த நாடு
- அதுஎங்க நாடு தங்க நாடு
பலர்ஏக்கம் தீர்த்த சிங்கை நாடு!
Wednesday, March 25, 2009
Subscribe to:
Posts (Atom)