பொய்க்குழி என்ற கதையைப் படித்த பின்னர் கற்றுக்கொண்ட வாழ்க்கைத் திறன்களைப் பதிவு செய்யவும்.
இக்கதையின் மூலம் அறிந்துகொண்ட நீதிக்கருத்துகளைப் பதிவு செய்யவும்.
கந்தசாமி என்பவர் கடுமையான உழைப்பாளி. அவர் கட்டடம் கட்டும்
தொழிலாளியாகப் பணி புரிந்து வந்தார். கலை
நுட்பம் நிறைந்த கட்டடங்களைக் கட்டுவதில் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார். அதனால்
அழகு நிறைந்த கட்டடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றைக் கட்டியவர்களின்
திறனைப் பாராட்டுவார்.
கட்டடங்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் செதுக்கப்பட்டிருக்கும்
சிற்பங்களையும் பார்த்து இரசிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கந்தசாமி தொடக்கத்தில் சிறு சிறு வீடுகளைக் கட்டிக்
கொடுப்பதற்குக் கட்டடம் கட்டிக்கொடுக்கும் ஒப்பந்தம் செய்து வந்தார். அவர் கலை
நுட்பத்துடன் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தார். அதனால், அவருக்குக்
கட்டடம் கட்டும் பணி தொடர்ந்து இருந்து வந்தது.
கந்தசாமி ஒருபோதும் வேலையின் தரத்தைக் குறைக்கவில்லை.
கந்தசாமியின் வாடிக்கையாளர்களும் மிகவும் மகிழ்ச்சி
அடைந்தனர். அவருக்குக் கூட்டாளிகளின் எண்ணிக்கை பெருகியது. அவர்களில் ஒரு சிலர்
கந்தசாமியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டனர். ஆனால், அவர்களைக் கந்தசாமியால்
அடையாளம் காணமுடியவில்லை.
கந்தசாமி வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் குணம் உடையவர்.
ஒருமுறை கந்தசாமியின் நெருங்கிய நண்பரான
குணா, கந்தசாமியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்குத் தடபுடலான
வரவேற்புக் கிடைத்தது.
குணா அங்கு ஒரு பணக்காரரைக் கந்தசாமிக்கு அறிமுகம் செய்து
வைத்தார். அவர் பெயர் முத்து. அவர் கந்தசாமிக்கு மிகப்பெரிய அடுக்குமாடிக்
கடைத்தொகுதி ஒன்றைக் கட்டிக்கொடுக்கும் வேலையை கொடுப்பதாகச் சொன்னார்.
கந்தசாமியும் முத்துவிடம் சம்மதம் தெரிவித்தார்.
அதன்பின்னர், வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பெரிய தொகையை
நம்பிக்கை முன் பணமாகத் தரும்படி முத்து முதலாளி, கந்தசாமியிடம் கேட்டார்.
கந்தசாமியும் முத்து கேட்ட தொகையைக் கடன் வாங்கி அவரிடம் கொடுத்தார். கந்தசாமி பணம் கொடுத்ததற்கு
முதலாளியிடம் எழுதி வாங்கவில்லை. ஒரு வருடம் சென்றது, அடுக்குமாடியைக் கட்டும் வேலையையும் கந்தசாமிக்கு
முத்து கொடுக்கவில்லை.
முதலாளிக்கு வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனால்,
அது வெளியில் தெரியவில்லை. கந்தசாமி முத்துவிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக்
கேட்டார். அவர் அதனைக் கொடுக்கவில்லை.
இரண்டு வருடங்கள் சென்றன. வழக்கம்போல் கந்தசாமியிடம் முத்து,
‘முதலாளி நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடுங்க.
நீங்க நல்லா இருப்பேக’ என்று கூறினார்.
அதற்கு முத்து, என்ன நீ எப்பப்பாத்தாலும் பணத்தைக் கொடுங்க,
பணத்த கொடுங்கன்னு கேக்கிற, நீ என்ன ஏங்கிட்ட பணம் கொடுத்தா வச்சிருக்க, பேசாம
போயிரு... இல்லன்னா உன்ன...’ என்று
கோபத்தில் கூறினார்.
இதனைக் கேட்டதும் கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை
கரும்பாறைக் குழிக்குள் தூக்கி எறிவதுபோல் உணர்ந்தார். கொந்தளித்த மனத்துடன் வீட்டிற்குத்
திரும்பிச் சென்றார்.
சில நாள்களுக்குப் பின்னர், விவகாரம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. நடுவர்கள் இருவரையும் தனித்தனியே விசாரித்தார்கள்.
நடுவர்கள் பெரிய ஆலமரத்தின் கீழ் ஊர் மக்கள் முன்னிலையில்
நடைபெற்ற கூட்டத்தில், ‘முத்து ஒரு பெரிய
தொழிலதிபர், அவர் எப்போதும் மற்றவர்களிடம் பணம் வாங்கமாட்டார் என்று நம்புகிறோம். அதனால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்த இந்த
வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்புக்
கூறினர். இத்தீர்ப்பைக் கேட்ட கந்தசாமி வாயில்லாப்பூச்சியாக, சபையில்
அமர்ந்திருந்தார்.
(சொற்களின் எண்ணிக்கை 316)
எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி
நீதிக்கருத்து:
வாழும்
காலத்தில் இறுதிவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++