Monday, October 12, 2020

                                                          கதையும் சிந்தனையும் 

அடியில் கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துப் பார்க்கவும். பின்னர் அதனைப் பற்றி நீ நினைக்கும் கருத்துகளைத் தட்டச்சு செய்யவும். 



வாசிப்புப் பகுதி (அனுபவம்)

முகிலனும் அகிலனும் நெருங்கிய நண்பர்கள். முகிலன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவன். அவர்கள் இருவரும் உயர்நிலை இரண்டில் படித்து வந்தார்கள். முகிலன் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பவன். அவன் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்பான். புரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வான்.

அகிலன் எதையும் பெரிதுபடுத்தமாட்டான். ஒவ்வொரு நாளும் எப்படிப் போகுமோ அதற்கு ஏற்றாற்போல் வாழக் கற்றுக்கொண்டவன். ஒருநாள் வழக்கம்போல் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். அப்பொழுது  மெல்ல மழை பெய்யத் தொடங்கியது. உடனே முகிலன் தன்னிடமிருந்த குடையை விரித்துப் பிடித்தான். ஆனால், அகிலனிடம் குடை இல்லை. ``பரவாயில்லை அகிலா, இருவரும் ஒரு குடைக்குள் வீட்டிற்குப் போவோம்’’ என்று முகிலன் சொன்னான். ஆனால், குடைக்குள் ஒருவர்தான் செல்லமுடியும்.

மழை சோவென்று பெய்யத்தொடங்கியது. காற்றுச் சுற்றிச் சுற்றி அடித்தது.   குடைக்குள் இருந்த இருவரும் நனைந்தனர். ஈர உடுப்புடன் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.  இரண்டு நாள்களுக்குப் பிறகு முகிலனுக்குக் காய்ச்சல் வந்தது. அது அதிகரித்ததால் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அகிலன் முகிலனைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்றான். அவனின் நிலைமையைப் பார்த்தான். அப்போது தன்னால்தான் தன்னுடைய நண்பனுக்கு இந்தநிலை ஏற்பட்டது என்று நினைத்தான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல வடியத்தொடங்கியது. அதன்பின்னர் அகிலன், எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்து வாழத்தொடங்கினான்.     

                   (சொற்களின் எண்ணிக்கை 139, சி. குருசாமி, ஆசிரியர்)

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


No comments:

Post a Comment