Sunday, October 24, 2010

பயிற்சி 37
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – சிந்தனைச் சிற்பி கவிஞர் வாலி இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி உரித்தாகுக.

கவிதை 3 - படி


பாடலின் கருத்து

பெண்ணே!. படித்த பெண்ணைத்தான் இவ்வுலகம் பாராட்டும். எனவே, நீ பாராட்டும்படி படிக்க வேண்டும்.

நீ நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். நீ கல்வியைக் கற்றுக்கொடுக்கும் கல்விச் சாலையின் வாயிற் படியில் ஏறிச் சென்று படிக்க வேண்டும்.

பாரதியாரும் பாரதிதாசனும் மீண்டும் மீண்டும் படித்துச் சாதனைகள் செய்தபடி நீ படிக்க வேண்டும்.

நீ படித்தது நன்றாகப் புரியும்படி ஆழமாகவும், அகலமாகவும் படிக்க வேண்டும். இம்முறையில் படிக்கும்போது அனைத்துப்பாடங்களும் உனக்கு மிகவும் எளிமையாகிவிடும்.

நீ சிறந்த முறையில் படிக்கும்போது படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அதனால், பெண்ணே! படிப்பு உனக்கு முக்கியம் ஆகும்.

நீ இருக்க வேண்டிய இடம் சமையல் கூடம் என்று யாராவது சொன்னால் நீ அவர்கள் மீது கோபப்படு. வாழ்க்கை என்னும் படகை முறைப்படி நன்றாகச் செலுத்துவதற்குக் கல்விதான் நீ கையில் ஏந்தவேண்டிய துடுப்பாக இருக்கிறது..

பெண்ணே! படித்து முடித்தபின்னர் நீ வேலைக்குப் போனால் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால் ஆண்பிள்ளை வீட்டாரைத் தேடிப்போகாமல் அவர்களாகவே வீடு தேடி உன்னைப் பெண்பார்க்க வருவார்கள்.

திருமணத்திற்குப் பின்பு உன் கணவனின் தாயாருக்கு ஓரளவு நீ கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். மேலும், நீ நம் முன்னோர்கள் கூறியுள்ள மரபுப்படி நடக்கவேண்டும்.

1
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
2
பெண்கள் ஏன் கல்வி கற்கவேண்டும் என்று வாலி கூறுகிறார்?
3
பெண் கல்வி கற்பதால் அடையும் நன்மைகள் யாவை?
4
கவிஞர் வாலி எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?
5
மரபு வழி வந்த பெண்களைப் பற்றி கவிஞர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
6
படித்த பெண்களின் சிறப்புகளைக் கவிஞர் வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
7
`படி` என்னும் கவிதையில் அமைந்துள்ள சொல்லாட்சி சிறப்பினை விளக்கி எழுதுக.

பயிற்சி 36
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும்


கவிதை 2. - உடல் நலம் பேணல் –


உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தமுள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு; நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே.

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத்தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்,
நாளும் நாளும் பண்டிதர் கை
நாடி பார்க்க வேண்டாமே.

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி, அப்பா !
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா !

மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப் பட்டிடுவாய்;
தினமும் பாயில் விழுந்திடுவாய்.

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும், அப்பா !
நூறு வயதும் தரும், அப்பா !

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே;
வருமுன் நோயைக் காப்பாயே !
வையம் புகழ வாழ்வாயே
.

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


கவிதையின் கருப்பொருள்

உடலின் முக்கியத்துவத்தையும் அந்த உடலைப் பேணிக்காப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் நன்மைகள் எவை என்பதையும் கருவாகக் கொண்டதே இக்கவிதை.

கருத்து

நல்ல உறுதியான உடலை உடையவர்கள் மட்டும் உலகின் இன்பம் உடையவராக இருப்பர். அவர்களிடமிருக்கின்ற இடமும் பொருளும் அவர்களுக்கு இன்பமான வாழ்வைத்தரா.

சுத்தமுள்ள இடத்தில் சுகம் நிறைந்திருக்கும். அதனைக் காக்கும்போது நீ நீண்டகாலம் உயிர் வாழலாம்.

காலையிலும் மாலையிலும் உலவிக் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு எமன் வணங்கிச் செல்வான்.

நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார்.

அப்பா! கூழாக இருந்தாலும் அதனைக் குளித்த பின்புதான் நீ குடிக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் நீ இரவில் நன்றாகத் தூங்கவேண்டும்.

நீ அளவோடு உண்ணாமல் அதிகமாகத் தின்னும்போது திட்டுமுட்டு அடித்துவிடும். அதனால் நீ நோயாளியாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

அப்பா! சுத்தம் நிறைந்த காற்று, தூய்மையான தண்ணீர், பசித்த பின்னர் உண்ணும் வழக்கம் ஆகியவை நோயைப் போக்கி நூறு ஆண்டு காலம் வாழ்ந்திட உதவும்.

நீ உடல் நலத்துடன் வாழும் வழிமுறைகளை அறிந்துகொள்ளும்போது நோய் வரும்முன்பு அந்த நோயைத் தடுத்திடலாம். அதன்மூலம் நீ இவ்வுலகம் புகழ வாழ்ந்திடலாம்.



பொருள்நயம்

`உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதை மக்களை எளிதில் கவரும் பாங்கில் மிகவும் எளிய சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வுலகில் இன்பம் ஏராளமாக இருக்கிறது. இந்த இன்பத்தை முழுவதும் தூய்க்கவேண்டுமானால் நோய் இல்லாமல் நல்ல உறுதியுள்ள உடலுடன் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். பொதுவாக வசதியாக வாழ்வதற்கு இடமும் பொருளும் அவசியம் என்பதைக் கவிமணி விளக்க வந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்று தான் சொல்ல வந்த கருத்தை மீண்டும் வலுவாக்குகிறார். இங்குத் தொடக்கத்தில் தான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைச் சுருக்கமாகக் கவிமணி கூறுகிறார்.

சுத்தமுள்ள இடத்தில்தான் ஒருவர் சுகமாக வாழமுடியும், சுகமாக வாழ்வதற்கு நீ நாள்தோறும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வரிகளின் மூலம் சுத்தத்திற்கும் சுகத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறார்.

நோய் இல்லாமல் வாழ்வதற்குக் காலை மாலை கட்டாயம் உலவி வரவேண்டும் என்று கூறுகிறார். ஒருவர் இம்முறையைத் தவறாது பின்பற்றும்போது உயிரைப் பறிக்கும் எமன் அவரின் காலைத் தொட்டு வணங்கி விரைந்து சென்றுவிடுவான் என்று கூறுகிறார். இங்கு இறப்பைத் தடுக்கும் வழிமுறையைக் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார். எல்லாரும் முடிந்தவரை வேலையைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அப்பா! நீ கூழைக் குடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும் குளித்த பின்புதான் அக்கூழைக் குடிக்கவேண்டும் என்றும் ஏழையாக இருந்தாலும் இரவில் நன்றாக நீ தூங்கவேண்டும் என்றும் கூறுகிறார். கவிஞர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

மேலும், சாப்பிடும் உணவை அளவோடு சாப்பிடாமல் அள்ளி அள்ளித் தின்பவருக்குத் திட்டு முட்டு அடித்துவிடும் என்று கூறுகிறார். திட்டு முட்டு அடித்திடும்போது தினமும் நோயாளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு பாயில் படுக்கும் நிலை உருவாகும் என்று கூறுகிறார். இங்கு உணவுக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைக்கின்றார்.

அப்பா! நோய் நம்மைவிட்டு விலகிச்செல்வதற்குத் சுத்தமான காற்றும், நல்ல தண்ணீரும், பசித்து உண்ணும் உணவுப் பழக்கமும் உடையவராக நீ விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவை அனைத்தும் கிடைப்பதற்கரிய உடல் நலத்துடன் வாழ்வதற்கு உரிய வழிகள் என்பதை நீ அறிந்துகொள். இவற்றைப் பின்பற்றி வரும் நோயைத் தடுத்து இவ்வுலகம் புகழும்படி நீ வாழவேண்டும் என்று நயமாகக் கூறி முடிக்கின்றார் கவிஞர்.


சொல்லாட்சி

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை `உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதையில் சொற்களைச் சிறந்த முறையில் கையாளுகின்றார். கவிதையின் தொடக்கத்தில் `இடமும் பொருளும்` என்று கூறும்போது `உம்` ஒட்டைப் பயன்படுத்திப் படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும்படி சொற்களை இணைத்து அமைத்ததோடு இரண்டிற்கும் சம மதிப்பினையும் கொடுக்கிறார்.

இரண்டாவது பத்தியில் `சுத்தம்` `நித்தம்` என்னும் சொற்களைக் கையாளும்போது முதல் எழுத்துகளை மாற்றிப் பொருள் மாறுபாட்டை ஏற்படுத்துகிறார். இங்குச் `சுத்தம்` என்பது தூய்மை என்ற பொருளையும் `நித்தம்` என்பது நாள்தோறும் என்ற பொருளையும் உணர்த்துகின்றன. இவை சிறந்த எதுகைகளாகவும் அமைந்துள்ளன.

இரண்டாவது பத்தியிலும் மூன்றாவது பத்தியிலும் `காலை` `மாலை` என்ற இரண்டு சொற்களை எதுகை நயம்பட அமைத்துள்ளார். அத்துடன் அச்சொற்களில் உள்ள முதல் எழுத்துகளை மாற்றிப் பொருளை மாற்றுகிறார். மூன்றாவது பத்தியில் `ஆளும் நாளும்` என்று குறிப்பிட்டுச் சிறந்த நயத்துடன் சொற்களை அமைத்துள்ளார்.

மேலும், கூழை, ஏழை, மட்டு, திட்டு ஆகிய எளிய சொற்களின் முதலெழுத்தை மாற்றிப் பொருள் மாறுபாட்டுடன் கவிதையைப் படைத்துள்ளார்.

அப்பா! என்ற சொல்லை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைக் குடி அப்பா!, உறங்கப்பா!, ஓட்டி விடுமப்பா!, நூறுவயது தருமப்பா!, என்று நன்கு பயன்படுத்தி விளக்குகிறார்.


வினாக்கள்

1
நூறுவயது வரை ஒருவர் வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
2
அனைவரும்நோயில்லாமல் வாழ்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
3
உணவு உண்ணும் முறையைப் பற்றிக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கூறும் கருத்துகள் எவை?
4
இனிய வாழ்வு வாழ்வதற்கு ஒருவர் எவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
5
இக்கவிதையில் அமைந்துள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

பயிற்சி 35
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – கவிதையை எழுதிய ஆசிரியருக்கு நன்றி.


கவிதை 1. `முன்னேற` - கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை. அவருக்கு நன்றி .

கவிதையின் கருப்பொருள்:

ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றியும் அவற்றின் மூலம் அந்த நாடு அடைகின்ற உயர்வினைப் பற்றியும் விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.

பொருள் நயம்:

கவிஞர் கண்ணதாசன் எழுதிய `முன்னேற` என்ற தலைப்பில் அமைந்த இக்கவிதை எல்லா நாட்டிற்கும் பெரும்பாலும் பொருந்துவதாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியச் சூழ்நிலையை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளது. உழைப்பின் பெருமையையும் மக்கள் உழைப்பதால் அடையும் நன்மைகளையும் நயம்படக் கூறுவதாக அமைந்துள்ளது.

இக்கவிதை ஒரு நாட்டில் இருக்கும் பிரச்சினையையும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதையும் அதன்மூலம் எத்தகைய நன்மைகள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் என்பதையும் நயம்பட விளக்குகிறது.

இன்றைய சூழலில் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல் முன்னேற்றம் அடையவேண்டுமானால் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடையவேண்டும். அதனை உலக நாடுகளின் செயல்பாடுகளைப் பறந்துசென்று உலகத்தையே அளந்து பார்த்து அடைவோம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார். இக்கவிதையின் தொடக்கத்தில் எத்தகைய முயற்சியை ஒருநாடு எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

எண்ணெயின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். அந்த எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் அதனை எடுத்துப் பயன்படுத்தும்போது அடைகின்ற பயன்பாடு என்னென்ன என்பதையும் விளக்குகிறார். புதுப்புது நெல்வகையைக் கண்டுபிடிப்போம். அப்போதுதான் உணவுப் பிரச்சினை தீரும். அதற்கு அடுத்தாற்போல் விண்ணை நோட்டமிடவேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் நலமான வாழ்வு அமைந்திடும் என்கிறார்.

வளமான ஆற்றிலிருந்து காய்ந்துபோன ஆற்றிற்குத் தண்ணீரைக் கொண்டு சென்றால் மட்டும்போதாது அதன் கரைகளில் புதிய சோலையை உருவாக்குவோம் என்கிறார். தண்ணீரைத் தேக்கி வைப்போம் என்று கூறாமல் அதனைத் தேக்கிவைக்கும்போது என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

ஏராளமான தொழில்களை உண்டாக்குவோம் என்று கூறாமல் அத்தொழில்களை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எவை என்பதைப் பட்டியலிடுகிறார்.

திசை எட்டிலும் வெற்றியின் சிறப்பு ஏற்படுவதோடு வாழ்க்கையில் நாள்தோறும் இன்பம் நிறைந்திருக்கும் என்று கவிஞர் கூறுகிறார். இவ்வெற்றியின் மூலம் செல்வம் கோடிக்கணக்கில் சேர்ந்திடும்போது அதில் உனக்கும் பங்குண்டு. எனவே, அறிவியலில் முன்னேற்றம் அடைவோம் என்று நயம்படக் குறிப்பிடுகிறார்.

வினாக்கள்

1
ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
2
வேளாண்மைத் தொழில் ஒருநாட்டில் வளமடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
3
ஒருநாட்டில் வேளாண்மைத் துறையும் தொழில்துறையும் வளர்ச்சி அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?
௪ நீர்ப்பாசனத்தின் வளத்தினை அதிகரிப்பதற்கு ஒரு நாடு எத்தகைய
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

வேளாண்மைத் துறை வளர்ச்சியடையும்போது ஏற்படும் நன்மைகள் யாவை?

Saturday, October 23, 2010

பயிற்சி 34


கீழ்க்கண்ட கவிதையைப் படித்தபின்னர் அதன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
நாட்டுப் பற்றை ஊட்டும் நல்விழா

திரு விழாவாம் திருவிழா
எங்க நாட்டுத் திருவிழா
சிங்கை நாட்டுத் திருவிழா
சிந்திக்க வைக்கும் திருவிழா

ஒரு விழாவாம் ஒருவிழா
உண்மை சொல்லும் பண்விழா
தேசம் காக்கும் பெருவிழா
தேசிய தினத் திருவிழா

ஒற்றுமை காட்டும் திருவிழா
உயர்ந்து நிற்கும் மனவிழா
பள்ளி யெங்கும் கலைவிழா
பார் போற்றும் நல்விழா - குரு
தயாரிப்பு ஆசிரியர் சி. குருசாமி
குறிப்பு –
சிலர் வலைப்பூவில் உள்ள கருத்துகளைப் படித்துப் பயன்படுத்தி வருவதால் நேரில் நன்றி கூறுகிறீர்கள், அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தாங்களின் தேவைகளையும் கருத்துகளையும் படித்தபின்னர் தட்டச்சு செய்து அனுப்பினால் நலம் பயக்கும்.

பயிற்சி 32


கவிதையில் பொதுவாக இருக்கவேண்டிய கருத்துகள்

நோக்கம்

கவிதை – கரு / களம்

கருத்துகள்
நேரடிக் கருத்துகள், மறைமுகக் கருத்துகள்

முக்கிய உறுப்புகளின் அடிப்படையில் இனிமை இருத்தல்

சுருக்கமும் தெளிவும்

பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்து இருக்கலாம்

தேவையை அடிப்படையாக க் கொண்டும் அமையலாம்

உயர்ந்த கொள்கைகளை விளக்குவதற்கும் எழுதலாம்

அறிவுத்திறனை வளர்ப்பதற்கும் எழுதலாம்

தனிமனிதனின் பிரச்சினையும் சமூகத்தின் பிரச்சினையும் இடம்பெறலாம்

கவிதை என்பதன் விளக்கம்

உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
உரு வெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை - தேசிக விநாயகம்



* வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் கருத்துப் பெட்டகம்

* பொதுவாக மனிதனையும் மனிதன் சார்ந்திருக்கின்ற இயற்கையையும் கொண்டு அமையும்

* சொல்லவிரும்பும் கருத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே கவிஞனின் கடமை


எது கவிதை?

அறிஞர் கிறுக்குவது
நற்கவிதை யன்றோ
ஆன்றோர் கூற்று
பொற்கவிதை யன்றோ
வறியோர் புலம்புவது
வாழ்கவிதை யன்றோ
வற்றாத நதியினொலி
வளர்கவிதை யன்றோ!

இல்லோர் ஏங்குவது
இன்கவிதை யன்றோ
களம்பல பாடுவது
கவிபரணி யன்றோ
வள்ளுவர் வகுத்தநெறி
வான்கவிதை யன்றோ! - - கவிமொழி

கற்பனை

மீனினம் ஓடிப் பறக்குதம்மா - ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா - இந்த
மாட்சியிலுள்ளம் முழுகுதம்மா - தேசிக விநாயகம்


பொருள் சிறப்பு

கார்மேகம் திரண்டு நிற்க
கானத்து மயில்கள் நோக்க
விசிறி விரிந்து அசைய
விவரம் சொல்லி நிற்குதே! - குரு

மொழி

திக்கெட்டும் சென்றிடும்
செந்தமிழாய் நின்றிடும்
செம்மொழியின் சிறப்புதனைப்
பிறர்சொல்ல மகிழ்ந்திடுவோம்! - கவிமொழி

எதிர்காலச் சிந்தனை

மனிதக்கழிவை மனிதன்
மறைத்துச் சுமக்கும்காலம்
மனிதத் திறத்தால்
மலையேறிப் போயாச்சு - கவிமொழி


அறநெறிக் கருத்துகள்

(நீதி, நேர்மை, வாழ்வாங்கு வாழும் முறை)
``பாயும் புலியகம் ஒழிந்திட வேண்டும் `` குரு

உலகச்சிந்தனை

``.....
விதை போட வேண்டும்
வன்முறை என்றும் ஒழிவதற்கு
வையத்தில் வாழும்முறை அறிவதற்கு ..``
















மாணவர்களே கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொற்களை உருவாக்கிப் பெற்றோர்களிடம் சொல்லிக்காட்டுங்கள். இது போன்ற பயிற்சிகளை உருவாக்கும்போது உங்களின் சொல்வளம் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

உறவையறி - உறவை அறி


இறுதியில் சொல் எழுதுக

உறவை ___________________
உண்மை ___________________
பகுத்து ___________________


அன்பைக் கொடு
அறிவைப் பெறு

_____________ கொடு
____________ பெறு
____________ கொடு
____________ பெறு

Sunday, September 26, 2010

பயிற்சி 31 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் காணலாம். ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை செய்வதும் ஒருவகையால் பார்த்தால் கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். அவை அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். அதனால், அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் மிகவும் அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல நிலைகளில் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.
பயிற்சி 30 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.



ஆதிகாலத்தில் மனிதன் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தான், இருட்டத்தொடங்கியதும் குகைகளில் தங்கினான். அவன் அங்கு விலங்குகளுக்கு அஞ்சியே வாழ்ந்தான். அதனால், தன்னோடு போராடும் விலங்குகளைக் கொன்று குவித்தான். அக்காலகட்டத்தில் அவன் விலங்குகளின் மாமிசத்தையே முக்கிய உணவாக உண்டான். அவன் சிந்திக்கத்தொடங்கியதும் அப்பகுதிகளை விட்டுவெளியேறத் தொடங்கினான். அவன் மலைப்பகுதியில் பயன்படுத்திய நெருப்பு அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றத்தொடங்கியது.

பின்னர், அறிவியல் துறை படிப்படியாக வளரத்தொடங்கியது. தற்காலத்தில் இத்துறையில் பல புதுமைகள் நடைபெறுகின்றன. இந்தப் புதுமைகள் வேகமாக நடந்து வருவதால் இக்காலத்தை அறிவியல் காலம் என்று கூறலாம்.

இன்று அறிவியலில் ஏராளமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனால், அதிகமான கழிவுகள் வெளி வருகின்றன. இவை இவ்வுலகை வெப்பம் அடையச் செய்கின்றன. இவ்வெப்பத்தால் பனிக்கட்டி உருகி வருகிறது. அதனால் பூமியின் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் காரணமாக ஒருசில சிறிய நாடுகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்க நாம் அனைவரும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உடனே முயற்சி செய்யவேண்டும்.
வாக்கியங்களை முடித்து எழுதும்போது கவனிக்கவேண்டியவை.

ஒருமை பன்மை (குருவி, குருவிகள, பழம், பழங்கள்
காலங்கள் (இறந்த காலம் – பழத்தைத் தின்றது, பழத்தைத் தின்கின்றது – நிகழ்காலம், எதிர்காலம் – பழங்களைத் தின்னும்.

வாக்கியங்களை முடித்து எழுதுக.
(முயன்று பார்த்துப் பகிர்ந்துகொள்ளவும்)




கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்றது.

கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ___________________________________.


கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்றன.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ___________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவியால் ____________________________________.

Thursday, September 23, 2010

கோடிட்ட இடத்தை நிரப்புக

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் _________________. ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை ___________________ கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். _______________________ அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். ________________________ அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் ____________________ அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல _________________________ நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.

உரையாடல்
அல்லியும் மல்லியும் சந்தித்தபோது கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்

அல்லி:
குமுதா, சீக்கிரம் வா, உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருப்பது?

மல்லி:
மன்னித்துவிடு அமுதா. வீட்டில் அப்பாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டது. அம்மாவுக்குத் துணையாக இருந்து உதவி செய்து வந்தேன்.

அல்லி:
அப்படியா! அவருக்கு என்ன?

மல்லி:
நேற்றுப் பெய்த மழையில் முழுமையாக நனைந்துவிட்டார். நடு இரவில் தும்மல் ஏற்பட்டது. காலையில் எழுந்தவுடன் உடம்பெல்லாம் கொதிப்பாக இருந்தது. அம்மா அவரை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அல்லி:
அடடா! நீ முதலிலேயே என்னிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே. வா உடனே நானும் வீட்டுக்கு வருகிறேன். உன் அப்பாவை நலம் விசாரிக்க வேண்டும்.

மல்லி:
மிகவும் நன்றி அமுதா. உன் அக்கறையான பேச்சைக் கேட்கும்போது மனம் ஆறுதலாக இருக்கிறது.

அல்லி:
அப்படியென்றால் ஒன்று செய். நான் நூலகம் சென்று நமக்குத் தேவையான புத்தகங்களை உன் வீட்டுக்குக் கொண்டுவருகிறேன். அங்கே அமர்ந்து ஆசிரியர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்போம். நீ முதலில் வீட்டுக்குச் செல். அப்பாவைக் கவனி.

மல்லி:
அப்படியா சொல்கிறாய். நான் உன்னை மட்டும் எப்படி இங்கே தனியாக.. ..

அல்லி:
அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதே. ஒருவருக்கொருவர் இதுபோன்ற நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பின்னர் நட்புக்குத்தான் அர்த்தம் என்ன?

மல்லி:
நன்றி அமுதா .. நான் வீட்டிற்கு முதலில்போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துணையாக இருக்கிறேன். நீ மெல்ல வந்தால் போதும்.


அமுதா:
சரி குமுதா. கவலைப்படாதே. என் பெற்றோருக்கும் தெரிவித்துவிட்டுப் பின்னர் சந்திக்கிறேன்.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

ஆதிகாலத்தில் மனிதன் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தான், இருட்டத்தொடங்கியதும் குகைகளில் தங்கினான். அவன் அங்கு விலங்குகளுக்கு ____________________ வாழ்ந்தான். அதனால், தன்னோடு போராடும் விலங்குகளைக் கொன்று குவித்தான். அக்காலகட்டத்தில் அவன் விலங்குகளின் மாமிசத்தையே ______________________ உணவாக உண்டான். அவன் சிந்திக்கத்தொடங்கியதும் அப்பகுதிகளை விட்டுவெளியேறத் தொடங்கினான். அவன் மலைப்பகுதியில் ____________________ நெருப்பு அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றத்தொடங்கியது.

பின்னர், அறிவியல் துறை படிப்படியாக வளரத்தொடங்கியது. தற்காலத்தில் இத்துறையில் _____________________ புதுமைகள் நடைபெறுகின்றன. இந்தப் புதுமைகள் வேகமாக நடந்து வருவதால் இக்காலத்தை அறிவியல் காலம் என்று கூறலாம்.

இன்று அறிவியலில் ஏராளமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனால், அதிகமான கழிவுகள் வெளி வருகின்றன. ____________________ இவ்வுலகை வெப்பம் அடையச் செய்கின்றன. இவ்வெப்பத்தால் பனிக்கட்டி உருகி வருகிறது. ________________________, பூமியின் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் காரணமாக ஒருசில சிறிய நாடுகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்க நாம் அனைவரும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உடனே முயற்சி செய்யவேண்டும்.
பயிற்சி 24 - உயர்நிலை 1 (மரபுத்தொடர்கள்)

மரபுத்தொடர்கள்
விளக்கம்

1
ஆசை வார்த்தை

ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படுதல்
2
ஆறவமர
நிதானமாகச் செயல்படுதல்
3
ஏட்டிக்குப் போட்டி
எதிர்கருத்துகளைக் கூறுதல்
4
ஒரு கை பார்த்தல்
சவால் விடுதல்
5
ஒளிவு மறைவு
எண்ணத்தை மறைத்தல்
6
ஓட்டைக்கை
பெருஞ்செலவாளி - அதிகமாகச் செலவு செய்பவன்
7
ஓட்டைவாயன்
இரகசியத்தைக் காப்பாற்ற முடியாதவன்
8
கட்டுக் கதை
பொய்க் கதை சொல்லுதல்
9
கம்பி நீட்டுதல்
தப்பித்துச்செல்லுதல்
10
கண் மூடித்தனம்
சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபடுதல் - அறியாமையில் இருத்தல்
11
கரைத்துக் குடித்தல்
ஒன்றைப் பற்றி நன்கு அறிந்திருத்தல்
12
காலில் விழுதல்
மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுதல் -பெரியோர்களின் வாழ்த்துகளைப் பெறுவதில் ஈடுபடுதல்
13
குரங்குப் பிடி
பிடிவாதமாக இருத்தல்
14
கை கழுவுதல்
வெறுத்து ஒதுக்கி வைத்தல் - விட்டுவிடுதல்
15
கையுங்களவுமாக
தவறு செய்யும்போது பிடிபடுதல்
16
சிட்டாய்ப் பறத்தல்
மிகவும் வேகமாகச் சிட்டைப்போல் செல்லுதல்
17
செவி சாய்த்தல்
கூர்மையாகக் கேட்டல்
18
தட்டிக் கேட்டல்
தவறு செய்யும்போது கண்டித்தல்
19
தட்டிக் கொடுத்தல்
உற்சாகப்படுத்துதல் - தளர்வில்லாமல் இருக்கச் செய்தல்
20
தட்டிப் பறித்தல்
உரிமையைப் பறித்துக்கொள்ளுதல்






21
நட்டாற்றில் விடுதல்
நம்பிக்கைக்குத் தீங்கு செய்தல் - முழுமையான உதவி செய்யாமல் இருத்தல்
22
பகல் கனவு
கற்பனையில் மிதத்தல் – செயல் வெற்றி பெறாமல் இருத்தல்
23
பல்லைக் காட்டுதல்
காரியத்தைச் சாதிப்பதற்குச் சிரித்தல்
24
புத்தகப் புழு
புத்தகத்தை மட்டும் படித்துக்கொண்டிருத்தல் – உலகத்தைத் தெரியாமல் இருத்தல்
25
பூசி மெழுகுதல்
குறையை மறைத்தல்
26
வாய்க்கொழுப்பு
தேவையில்லாததைப் பேசுதல் -திமிராகப் பேசுதல்
27
வாலாட்டுதல்
சேட்டை செய்தல் –
குறும்புத் தனம் செய்தல்
28
வெளுத்து வாங்குதல்
நன்றாகச் செய்தல் – ஒரு செயலை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தல்





1 இணைமொழிகள்
உயர்நிலை

இணைமொழிகள்
விளக்கம்

1
அருமை பெருமை
உயர்வு - சிறப்புத் தன்மை
2
அக்கம் பக்கம்
அண்மையில் -அருகில் - பக்கத்தில்
3
அல்லும் பகலும்
இரவும் பகலும் - ஓய்வில்லாமல் உழைத்தல்
4
அன்றும் இன்றும்
கால முழுவதும் - தொடர்ச்சியாக - காலங்காலமாக
5
ஆடல் பாடல்
நடனமும் பாடலும் - ஆட்டம் பாட்டம்
6
ஆடை அணி
ஆடையும் நகையும்
7
இன்ப துன்பம்
சந்தோசமும் வேதனையும்
8
ஈவிரக்கம்
அருள் மனம்
9
உயர்வு தாழ்வு
உயர்ந்த நிலையும் தாழ்ந்த நிலையும்
10
ஓட்டமும் நடையும்
வேக வேகமாக
11
கண்ணீரும் கம்பலையும்
அழுகையும் கவலையும்



12
கண்ணும் கருத்தும்
மிகவும் அக்கறை - மிகவும் கவனம்
13
குறை நிறை
குறைந்த - நிறைந்த பண்புகள்
14
நாளும் கிழமையும்
நல்ல நாட்கள்
15
பழக்க வழக்கம்
பண்புகள்
16
பேரும் புகழும்
செல்வாக்கு நிலை


பிரித்து எழுதுக


மரச்சட்டம்
மரப்பொம்பை
மரக்கலம்
மரக்கோயில்
மரப்பாவை
மரவண்டி
மாட்டுச்சந்தை
மரப்பெட்டி
மரச்சட்டம்
மரப்பொம்மை

(ள்,ண்>ட், ல், ன் >ற்)
பொற்கோவில்
பொற்சிலை
பொற்சாலை
கடற்கரை
கடற்தோட்டம்
பொற்குடம்
மட்பாண்டம்
கட்குடம்
மட்பாண்டம்
வாயிற்படி
முட்செடி
முட்புதர்
முட்கொடி
அருண்மொழி
அருட்பா
அருளகம்
பாற்கடல்
பாற்குடம்
குயிற்பாட்டு
நாட்காட்டி
நாட்குறிப்பு

கடலோரம்
கடலலை


கொடியழகு
செடியழகு
விழியழகு
சிலையழகு
பணியழகு
மணியழகு
படையழகு
நிலவழகு
கணிதவியல்
மாடிப்படி

மண்ணாசை
பொன்னழகு
கண்ணழகு
பட்டாடை
வேரூன்றி
நாட்டுக்கோழி
நாட்டுப்பற்று
நாட்டுப்பண்
நாட்டுக்கொடி
ஆற்றோரம்
தரையோரம்
பல்லழகு
பட்டழகு
மாடிப்படி
தீச்சுட்டது
பூப்பூத்தது
பூப்பறித்தான்

மூப்பந்தல்
முக்கோணம்
முச்சாலை
முத்தமிழ்
மும்மூர்த்தி
முப்பால்
பயிற்சி 21 / 2010
கீழ்கண்ட பகுதியைப் படித்து மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


மரத்தின் கிளையில் நின்ற பறவை கால் வலிப்பதாக நினைத்தது. அதனால், அது சிறிது தூரம் வானத்தில் பறந்து செல்ல யோசித்தது. பறக்கும் போது ஒருவேளை சிறகு வலிக்கும் என்று நினைத்து அது மரத்தில் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தது. மரத்திலிருந்த அடர்ந்த கிளையைத் தேடி அதில் பறவை சாய்ந்தது. அதற்கு அப்போது ஒரு தனிச் சுகம் கிடைத்தது. பறவை, நல்ல வேளை பறந்து செல்லவில்லை என்று மனத்திற்குள் மகிழ்ச்சி அடைந்தது.

அவ்வழியாக வேடன் ஒருவன் வந்தான். அவன் வெயிலில் களைத்து வந்ததால் மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தான். அப்போது பறவையின் எச்சம் வேடன் மீது பட்டது. மரத்தை நோக்கித் தலையைத் தூக்கி அவன் பார்த்தபோது ஒருமுறை தன் அம்புக்குத் தப்பிய பெரிய கொக்குதான் அது என்று கண்டுபிடித்தான். வேடன் குறிதப்பாது கொக்கைப் பார்த்து அம்பைச் செலுத்தினான். கொக்கு கதறியது.


வினாக்கள்

1. பறவை மரத்தில் தங்க நினைத்ததற்குக் காரணம் என்ன?

1. மரத்தில் ஓய்வெடுக்க நினைத்ததே
2. சிறகு வலிப்பதாக நினைத்ததே
3. கால் வலிப்பதை உணர்ந்ததே
4. கால் வலிப்பதாக நினைத்ததே ( )


2. பறவைக்கு அதிக இன்பம் எப்போது கிடைத்தது?

1. மரத்தில் ஓய்வெடுத்தபோது
2. கிளையில் சாய்ந்தபோது
3. அடர்ந்த கிளையைக் கண்டபோது
4. ஓய்வெடுக்க முடிவு செய்தபோது ( )

1. அம்பு பறவையின் உடலில் ஏன் குத்தியது?

1. பறவை அசையாமல் இருந்ததால்
2. பறவை எச்சம்போட்டதால்
3. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால்
4. நோக்கம் தப்பாமல் அம்பு பாய்ந்ததால் ( )

பகுதியைப்படித்த பின்னர் முப்பது சொற்களில் சுருக்கி வரைக.

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பகுதியைப் படித்தபின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்குரிய விடைகளைத் தட்டச்சு செய்து அனுப்புக.


1. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்ன?
____________________________________________________________________________________________________________________________________________________________


2. பறவை பறந்துசெல்லாததற்கு காரணம் என்ன?

__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. வேடனுக்குக் களைப்பு இல்லாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

4. இப்பனுவல் மூலம் நீ அறிந்துகொள்ளும் கருத்துகள் இரண்டைக் குறிப்பிடுக.
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

5. பறவை செய்தது சரியா ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
6. வேடன் செய்தது சரியா? ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Thursday, September 2, 2010

சிறுகதை
கருப்பொருள் - உறவுகள்
அடியிற்கானும் பனுவலைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.

பிஞ்சுக் கால்கள்
`அத்தே சிங்கப்பூருக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னைக்கு நம்ம வெளிய போவோமா?` என்று ஆவலுடன் கேட்டாள் வாணி. `ம் போகலாம்` என்று கோமதி பதில் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் அண்ணன் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கோமதி சோர்வுடன் இருப்பதைத் தன் மதிநுட்பத்தால் புரிந்துகொண்டாள் வாணி.


`நம்ம தங்கியிருந்த குடியிருப்புப் பேட்டையிலிருந்து இப்பப் பாக்கப்போற செந்தோசா வரை எத்தனையோ மாற்றம் .. நீங்க ஆச்சரியப் படுவீக அத்தே` என்று கூறிக் கொண்டே அத்தைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சுப் பழத்தை நறுக்கித் தட்டில் வைத்து உண்பதற்கு அன்புடன் கொடுத்தாள் வாணி. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

`அத்தே இதோ நாம செந்தோசாத் தீவுக்கு
வந்துட்டோ..ம்.` என்று வாணி கூறியவுடன் கண்ணைக் கவரும் கட்டடங்களைக் கண்ட கோமதி மலைத்துப் போனாள்.

இருவரும் மதிய உணவை ஒரு விடுதியில் உண்டபின், `அத்தே நம்ம இப்பக் கடலுக்குப் பக்கத்தில போயி தண்ணீல விளையாடுற பிள்ளைகள பாப்போமா?` என்று கூறியதும் கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது. கண்ணீர் முத்துமுத்தாக வடியத்தொடங்கியது. அவள் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பியதை உணர்ந்த வாணியின் அகம் வாடியது.

ரிங்.. ... ரிங்.. ... `இந்த நேரத்தில யாரு` என்று கூறிய கோமதி தொலைபேசியில் பேசத்தொடங்கினாள், சுவையான செய்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல், `என்ன அக்கா எப்படி இருக்க .... `

என்று வெளிநாட்டில் வசிக்கும் தன் பள்ளித் தோழி பானுவுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.

கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்குத் திடீரென மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் அய்யோ அய்யோ என்று அலறும் சத்தம் வீட்டில் வெடித்தது.

பிஞ்சுக் கால்கள் மட்டும் கண்களுக்குத் தென்பட்டன. ஒருவயது அன்பு மகள் எழிலி குளியல்தொட்டியில் தலைகீழாக இருப்பதைக் கண்டாள், கதறினாள், மார்போடு அணைத்தாள்; வெப்பத்தை உணர்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்!

அவள் கதறிய காட்சி கோமதியின் கண்ணுக்கு மீண்டும் மீண்டும் வந்தது.
வாணியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் .

(அ) வினாக்கள்

1 வாணியின் சந்தோசத்திற்கு என்ன காரணம்?

2 வாணி எதனைப் புரிந்துகொண்டாள்?

3 வாணியின் அத்தைக்கு மிகவும் பிடித்தமானது எது?

4 வாணியின் விருந்தோம்பல் பண்பைக் கதையின் மூலம் விளக்குக.

5 கோமதி மற்றவர்களிடம் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளும் குணம்படைத்தவள் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?

6 `கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது` இதன் விளக்கம் என்ன?

7 ``கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினாள்`` இவ்வரியின் மூலம் நீ அறிந்துகொள்ளும் செய்தி யாது?

8 ``பிஞ்சுக் கால்கள்`` என்று கதை ஆசிரியர் கூறிய தொடருக்கு நீ என்ன விளக்கம் தர விரும்புகிறாய்?

9 கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?

10 குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தைப் போல் நீ எப்போதாவது கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா? எங்கே? எப்படி?

11 நீ பழங்களை விரும்பி உண்பாயா? ஏன்?

12 உனக்குப் பிடித்த உணவு எது? ஏன்?

`ஆ` பிரிவு

1 ``பிச்சுக் கால்கள்`` என்ற கதையைப் படித்த பின்னர் உங்கள் குழுவினரோடு சேர்ந்து கதை ஒன்று உருவாக்கிப் படைத்துக் காட்டுக.

2 கதையைப் படித்த பின்னர் குழுவினரோடு சேர்ந்து அதனை நாடக வடிவமாக்கி நடித்துக்காட்டுக.

3 கீழே சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை வரிசைப் படுத்தும்போது பொருள் நிறைந்த வாக்கியம் ஒன்று உருவாகும். நீங்கள் உருவாக்கும் அந்த வாக்கியத்திற்கும் இக்கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறுக.

நிகழ்வுகளை, குறைந்துவிடும், ஈடுபடும்போது, அக்கம் பக்கத்தில், அறிந்துகொள்ளும், ஒருசெயலில், தன்னை, மறந்து, நடைபெறும், ஒருவர், இயல்பாகக், வாய்ப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் திருக்குறளில் உள்ள சொற்கள். அவை மாறி அமைந்துள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி இக்கதையோடு தொடர்பு படுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முயற்சி, புகுத்தி விடும், முயற்றின்மை, திருவினை யாக்கும், இன்மை.
(குறள் எண் 616)



`இ` பிரிவு

பாடத்தொடர்ச்சி (வீட்டுப்பாடம்)

1 கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருளைக் கண்டறிந்து பகிர்ந்துகொள்க.

ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் கருதி இடத்தாற் செயின்.
( குறள் எண் 484

2 அகராதியைப் பயன்படுத்திக் கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் கண்டுபிடித்து வாக்கியம் உருவாக்குக.

1 மதிநுட்பம்
2 பிடித்தமான
3 முத்துமுத்தாக
4 அகம்
5 தென்பட்டன
சிறுகதை
கருப்பொருள் - உறவுகள்
அடியிற்காணும் பனுவலைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.
பிஞ்சுக் கால்கள்
`அத்தே சிங்கப்பூருக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னைக்கு நம்ம வெளிய போவோமா?` என்று ஆவலுடன் கேட்டாள் வாணி. `ம் போகலாம்` என்று கோமதி பதில் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் அண்ணன் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கோமதி சோர்வுடன் இருப்பதைத் தன் மதிநுட்பத்தால் புரிந்துகொண்டாள் வாணி.
`நம்ம தங்கியிருந்த குடியிருப்புப் பேட்டையிலிருந்து இப்பப் பாக்கப்போற செந்தோசா வரை எத்தனையோ மாற்றம் .. நீங்க ஆச்சரியப் படுவீக அத்தே` என்று கூறிக் கொண்டே அத்தைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சுப் பழத்தை நறுக்கித் தட்டில் வைத்து உண்பதற்கு அன்புடன் கொடுத்தாள் வாணி. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.
`அத்தே இதோ நாம செந்தோசாத் தீவுக்கு வந்துட்டோ..ம்.` என்று வாணி கூறியவுடன் கண்ணைக் கவரும் கட்டடங்களைக் கண்ட கோமதி மலைத்துப் போனாள்.
இருவரும் மதிய உணவை ஒரு விடுதியில் உண்டபின், `அத்தே நம்ம இப்பக் கடலுக்குப் பக்கத்தில போயி தண்ணீல விளையாடுற பிள்ளைகள பாப்போமா?` என்று கூறியதும் கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது. கண்ணீர் முத்துமுத்தாக வடியத்தொடங்கியது. அவள் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பியதை உணர்ந்த வாணியின் அகம் வாடியது.
ரிங்.. ... ரிங்.. ... `இந்த நேரத்தில யாரு` என்று கூறிய கோமதி தொலைபேசியில் பேசத்தொடங்கினாள், சுவையான செய்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல், `என்ன அக்கா எப்படி இருக்க .... `
என்று வெளிநாட்டில் வசிக்கும் தன் பள்ளித் தோழி பானுவுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.
கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்குத் திடீரென மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் அய்யோ அய்யோ என்று அலறும் சத்தம் வீட்டில் வெடித்தது.
பிஞ்சுக் கால்கள் மட்டும் கண்களுக்குத் தென்பட்டன. ஒருவயது அன்பு மகள் எழிலி குளியல்தொட்டியில் தலைகீழாக இருப்பதைக் கண்டாள், கதறினாள், மார்போடு அணைத்தாள்; வெப்பத்தை உணர்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்!
அவள் கதறிய காட்சி கோமதியின் கண்ணுக்கு மீண்டும் மீண்டும் வந்தது.
வாணியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் .
(அ) வினாக்கள்
1
வாணியின் சந்தோசத்திற்கு என்ன காரணம்?
2
வாணி எதனைப் புரிந்துகொண்டாள்?
3
வாணியின் அத்தைக்கு மிகவும் பிடித்தமானது எது?
4
வாணியின் விருந்தோம்பல் பண்பைக் கதையின் மூலம் விளக்குக.
5
கோமதி மற்றவர்களிடம் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளும் குணம்படைத்தவள் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?
6
`கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது` இதன் விளக்கம் என்ன?
7
``கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினாள்`` இவ்வரியின் மூலம் நீ அறிந்துகொள்ளும் செய்தி யாது?
8
``பிஞ்சுக் கால்கள்`` என்று கதை ஆசிரியர் கூறிய தொடருக்கு நீ என்ன விளக்கம் தர விரும்புகிறாய்?
9
கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?
10
குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தைப் போல் நீ எப்போதாவது கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா? எங்கே? எப்படி?
11
நீ பழங்களை விரும்பி உண்பாயா? ஏன்?
12
உனக்குப் பிடித்த உணவு எது? ஏன்?
`ஆ` பிரிவு
1
``பிச்சுக் கால்கள்`` என்ற கதையைப் படித்த பின்னர் உங்கள் குழுவினரோடு சேர்ந்து கதை ஒன்று உருவாக்கிப் படைத்துக் காட்டுக.

2
கதையைப் படித்த பின்னர் குழுவினரோடு சேர்ந்து அதனை நாடக வடிவமாக்கி நடித்துக்காட்டுக.

3
கீழே சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை வரிசைப் படுத்தும்போது பொருள் நிறைந்த வாக்கியம் ஒன்று உருவாகும். நீங்கள் உருவாக்கும் அந்த வாக்கியத்திற்கும் இக்கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறுக.

நிகழ்வுகளை, குறைந்துவிடும், ஈடுபடும்போது, அக்கம் பக்கத்தில், அறிந்துகொள்ளும், ஒருசெயலில், தன்னை, மறந்து, நடைபெறும், ஒருவர், இயல்பாகக், வாய்ப்பு


கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் திருக்குறளில் உள்ள சொற்கள். அவை மாறி அமைந்துள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி இக்கதையோடு தொடர்பு படுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முயற்சி, புகுத்தி விடும், முயற்றின்மை, திருவினை யாக்கும், இன்மை.
(குறள் எண் 616)

`இ` பிரிவு

பாடத்தொடர்ச்சி (வீட்டுப்பாடம்)
1
கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருளைக் கண்டறிந்து பகிர்ந்துகொள்க.


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ( குறள் எண் 484

2
அகராதியைப் பயன்படுத்திக் கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் கண்டுபிடித்து வாக்கியம் உருவாக்குக.
1
மதிநுட்பம்
2
பிடித்தமான
3
முத்துமுத்தாக
4
அகம்
5
தென்பட்டன

Thursday, July 29, 2010

சுருக்கி வரைதல்

மாணவர்கள் சுருக்கி வரைதலின் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்


சுருக்கி வரைதல் என்றால் என்ன?

ஒருவரின் பேச்சையோ எழுத்துவடிவத்தையோ சுருக்கிச் சொல்வது சுருக்கி வரைதல் ஆகும். இது ஒரு கலையாகும். சுருக்கி வரைதல் நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் ஒரு செயலாகும்.

ஒருவர் பேசிய பேச்சைச் சுருக்கிச் சொல்லும்போது சொல்லவேண்டிய முக்கியமான கருத்தைக் கட்டாயம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பேசியும் பயனில்லாமல் போய்விடும். சுருங்கச் சொன்னால் `சுருங்கச் சொல்லி விளங்க வேப்பதே சுருக்கி வரைதல்` ஆகும்.

ஊடகத்துறையில் சுருக்கி வரைதலின் பயன்பாடு மிகவும் அதிகம். எனவேதான் ஊடகத்துறை நண்பர்கள் இப்பயிற்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சிறந்த பயிற்சிக்குப் பின்னர் சுருக்கி வரையும் திறனில் கைதேர்ந்தவர்களாகி விடுவார்கள்.

சுருக்கி வரையும்போது கவனிக்கவேண்டியவை.

1. கொடுக்கப்பட்ட பகுதியைக் கவனமாகப் படித்துப் பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

2. பகுதியில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்துகளையும் துணைக் கருத்துகளையும் அடையாளம் காணவேண்டும்.


3. பகுதியில் உள்ள கருத்துகளைச் சொந்த நடைக்கு மாற்றவேண்டும்.

4. சொந்தக் கருத்துகளை எழுதிவிடக்கூடாது.


5. பகுதியில் உள்ள உண்மைக் கருத்துகளை மறுத்து எழுதிவிடக்கூடாது.

6. இயல்பான நடையில் எழுதவேண்டும்.


7. முதலில் நகல் ஒன்று தயாரிக்கவேண்டும்.

8. நகலில் மாற்றம் செய்துகொள்ளலாம்.


9. நகலை அடிப்படையாகக் கொண்டு அசல் தயாரிக்கவேண்டும்.

10. கேட்கப்பட்ட சொல் அளவு சரியாக இருக்கவேண்டும்.


11. சிறிய வாக்கியங்களாக எழுதவேண்டும், ஏனென்றால் சிறுவாக்கியங்களில் எழுதினால் வாக்கியப்பிழை ஏற்படாது.

12. தொடர்புடைய சொற்களுக்குப் பதில் கூட்டுச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.


13. வர்ணனை, பழமொழிகள், மேற்கோள்கள், உதாரணங்கள் போன்றவற்றை விட்டுவிடவேண்டும்.

14. பிழை இல்லாமல் எழுதுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
15. இணைப்புச் சொற்களைப் (ஆனால், அதனால், எனவே, என்றாலும்) பயன்படுத்தவேண்டும்.

16. கொடுக்கப் பட்ட பகுதி பல பத்திகளாக இருந்தாலும் சுருக்கி வரையும்போது ஒரே பத்தியில் எழுதவேண்டும்.

17. சுருக்கி வரையச் சொல்லும் பகுதியைத் தான் சுருக்கி எழுதவேண்டும்.

18. சுருக்கி வரைந்த பின்னர் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவேண்டும்.


(எ - டு)

ஒருகாட்டில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. சிங்கத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கும். சிங்கம் நாள்தோறும் தனக்குப் பிடித்த விலங்குகளை வேட்டையாடித் தின்னும். மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்தமான உணவு. அதனால், மான்கள் சிங்கத்தைக் கண்டால் மிகவும் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளும்.

சிங்கம் ஒரு மானைப் பிடித்து உண்ண நினைத்தால் அந்த மானை மட்டுமே விரட்டிச் செல்லும். ஓடுகிற மான் களைப்பு அடைந்தவுடன் அது சிங்கத்திற்குப் பலியாகிவிடும். பிடித்த மானின் மாமிசத்தை வயிற்றுக்கு உண்டபின் சிங்கம் தன் இருப்பிடத்தை நோக்கிச் செல்லும். இருப்பிடத்தில் நன்றாக ஓய்வு எடுத்தபின்னர் அது சுறுசுறுப்புடன் செயல்படும்.

மாணவர்களே! இங்கே குறிக்கப்பட்டுள்ள முக்கியக் கருத்துகளை முதலில் பார்ப்போம்
.

1. காட்டில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன
2. மற்ற மிருகங்கள் சிங்கத்தைப் பார்த்தால் அஞ்சும்
3. மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்த உணவு
4. மான்கள் ஓடி மறையும்
5. ஓடும் மானை விரட்டிப் பிடித்து உண்ணும்
6. இருப்பிடத்தில் ஓய்வு எடுத்தபின்னர் சுறுசுறுப்பாகிவிடும்

விளக்கம்

மேலே குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுருக்கி எழுதும்போது பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துகளையும் விட்டுவிடக்கூடாது.

இந்த ஆறு கருத்துகளையும் அடையாளம் பார்த்த பின்பு அவற்றை ஒரே பத்தியாக எழுதவேண்டும்.

(எ-டு) சுருக்கிய பகுதி

காட்டில் வாழும் மிருகங்கள் சிங்கத்தைக் கண்டால் அஞ்சும். மானின் மாமிசத்தைச் சிங்கம் வரும்பிச் சாப்பிடுவதால் அதனை விரட்டிப் பிடித்துத் தின்னும். அது இருப்பிடத்தில் ஓய்வு எடுத்த பின்னர் சுறுசுறுப்புடன் இருக்கும்.

சொற்களின் எண்ணிக்கை 22

பகுதி 2.

அழகான மயில்கள் கருமேகக் கூட்டம் வானில் திரண்டு நிற்பதைக் கண்டன. உடனே, அவை தங்களுடைய நீண்ட அழகிய வண்ணத் தோகையை விரிக்கத்தொடங்கின. அவற்றின் தோகை விசிறியைப் போல் அழகாக விரிந்தன. விரிந்த தோகை பார்ப்பவரின் மனத்தைக் கவரும் வண்ணம் இருந்தது. மயில் தோகையின் அழகிய வண்ணத்தைக் கண்டவர்கள் வாய்திறந்து பார்த்த வண்ணம் இருந்தனர். மயில்கள் அவர்களைக் கவனிக்காமல் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தன.

விளக்கம்

இப்பத்தியில் வர்ணனையும் உவமையும் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கி எழுதும்போது எழுதக்கூடாது.
கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சுருக்கி வரைதல்


நகல்
மயில்கள் மேகத்தைக் கண்டு தோகையை விரித்து ஆடின. அழகிய தோகையினை வியப்போடு பார்த்தனர். அவர்களைப் பார்க்காமல் மயில்கள் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. (20 சொற்கள்)

அசல்

மயில்கள் மேகத்தைக் கண்டவுடன் தோகையை விரித்தன. அதனைக் கண்டவர்கள் தன்னை மறந்து பார்த்தனர். ஆனால், மயில்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன.

சொற்களின் எண்ணிக்கை 15


உயர்தமில்மானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலைப் படித்த பின்னர் இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

பயிற்சி 1.

மனிதனின் வாழும் காலத்தைக் கணக்கிட்டு அறிஞர்கள் பல பருவங்களாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் ஒன்று பள்ளிப் பருவம். பள்ளிப் பருவம் மற்ற பருவங்களைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவமாகக் கருதப்படுகிறது. இப்பருவத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதைப் பொறுத்துத்தான் அவரின் எதிர்கால வாழ்க்கை அமையும். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் நாம் பல முக்கியமான செயல்களில் ஈடுபடுகிறோம். எனவே, இதனை மாணவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவம் என்று குறிப்பிடலாம். இப்பருவத்தில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். காலத்தைப் பொன்போல் போற்றி வரவேண்டும்.

சுருக்கி எழுதவும்


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பயிற்சி 2 இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் உண்டு உறங்கி மகிழ்கிறார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தவுடன் படிக்கும் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்குக் குழந்தைப் பருவம் மாறத்தொடங்குகிறது. அதனால், பெற்றோருடன் பேசும் நேரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்கிறார்கள். இக்காலத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்த மென்மைக் குணம் சற்று வலிமைபெறத் தொடங்குகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை சிறிதளவு கூடுகிறது.


இந்தத் தன்னம்பிக்கையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் தங்களுக்குக்கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



உயர்தமிழ் மாணவர்கள் கீழ்க்கண்ட பனுவலைப் படித்து இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி வரையவும்.

பயிற்சி 1.

மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவுடனே நண்பர்களைத் தேர்ந்தெடுக்காமல் சிறிதுகாலம் தம்முடன் பயிலுபவர்களின் குணத்தினை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ந்து பார்க்காமல் பழகும் பழக்கம் மிகப்பெரிய துன்பத்தைத்தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்தால் சிறந்த நன்மை உண்டாகும். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமக்குக் கல்வியிலும் வாழ்க்கையிலும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

நண்பர்கள் நம்மைவிட அறிவில் உயர்ந்தவர்களாகவோ சமநிலை உடையவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் நம்மோடு தொடக்கப் பள்ளியில் படிக்காத மாணர்களாக இருந்தாலும் பரவாயில்லை. நம் நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருந்தால் நமக்கு அவர்கள் கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டுவார்கள். எனவேதான் நீ உன் நண்பனை முதலில் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று பெரியர்கள் கூறுவார்கள்.


இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________________

பயிற்சி
பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். எனவே, நட்பின் சிறப்பினைப் பற்றிக் கூறவந்த பழைய பாடல் ஒன்று கரும்பின் மேல் பாகத்திலிருந்து கடித்துத் தின்பதைப் போல் பழகப்பழக நட்பு இனிப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இங்கு இனிப்பு என்பது நமது மனத்தையும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மகிழ்ச்சியையும் குறிக்கும்.

ஒருவேளை நாம் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கவலைப்படக்கூடாது. தவறான இயல்பினை உடைய நண்பர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் நாம் பெற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடம் உள்ள பண்பு நிறைந்த குணத்தை அவர்களிடம் சிறிது சிறிதாக வளர்க்க முயல வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் நல்ல குடிமக்களை உருவாக்கிய பெருமை நம்மைச் சேரும்.


இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________________________________________________________________________________________

தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி
29.07.2010

Thursday, April 15, 2010

பயிற்சி 18 / 2010
உனக்குப் பொருத்தமானவற்றிற்கு நேரில் உள்ள கட்டத்தில் புட்குறி (√ ) இட்டு உன்னை மதிப்பிட்டுப் பார்க்கவும்.

வ. எண்
சொற்கள்
புட்குறி
1
கனிவுகொண்ட மனம்
2
தனிநபர் சிந்தனையை வளர்த்தல்
3
ஆழமாகச் சிந்தித்தல்
4
விடாமுயற்சி
5
நல்லவராகவே வாழ முயற்சி செய்தல்
6
கடின உழைப்பு
7
பிறருடைய கருத்தையோ முயற்சியையோ தடுக்காமல் இருத்தல்
8
கூட்டு முயற்சி
9
வேற்றுமையில் ஒற்றுமை
10
சிறந்த பண்புக் கூறுகளைப் பெற்றிருத்தல்
11
ஒற்றுமை உணர்வு
12
கூட்டுறவே நாட்டுறவு
13
உண்மையான உழைப்பைப் புரிந்துகொள்ளுதல்
14
பிறரை வாய்ப்பிருக்கும்போதுகூட அச்சுறுத்தாமல் வாழுதல்
15
பிறர் உழைப்பைச் சுரண்டாத மனம்


தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 17 / 2010

· நம்மிடம் பொதுவாக இருக்க வேண்டிய பண்புகள்
· (கட்டுரையில் பொதுவாக அமையும் கருத்துகள்)

ஆழமாகச் சிந்தித்தல்
கடின உழைப்பு
விடாமுயற்சி
சிறந்த பண்புக் கூறுகளைப் பெற்றிருத்தல்
வேற்றுமையில் ஒற்றுமை
ஒற்றுமை உணர்வு
கூட்டுறவே நாட்டுறவு
கூட்டு முயற்சி
தனிநபர் சிந்தனையை வளர்த்தல்
பிறர் உழைப்பைச் சுரண்டாத மனம்
பிறரை வாய்ப்பிருக்கும்போதுகூட அச்சுறுத்தாமல் வாழுதல்
உண்மையான உழைப்பைப் புரிந்துகொள்ளுதல்
பிறருடைய கருத்தையோ முயற்சியையோ தடுக்காமல் இருத்தல்
நல்லவராகவே வாழ முயற்சி செய்தல்
முடிந்தவரை உண்மை பேசுதல்
தவற்றை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை
தெரியாததைத் தெரியாது என்று தைரியமாகக் கூறும் மனம்
தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருத்தல்
இனத்தின் சிறப்புத் தன்மையைப் புரிந்துகொள்வதோடு மற்ற இனத்தினரையும் மதிக்கத் தெரிந்துகொள்ளுதல்
உதவி செய்யும் மனப்பான்மை
அறிவைப் பெருக்கி ஆற்றலை வளர்த்துக்கொள்ளுதல்
பிறர் மனம் புண்படாமல் பேசும் தன்மை
உயர்விலும் பணிவன்பு
கனிவுகொண்ட மனம்
குடும்பத்தினரை மதிக்கும் மனப்பான்மை
செல்வாக்கையும் பதவியையும் பொருட்படுத்தாமல் இருத்தல்
பதவியைப் பிறருக்கு உதவி செய்ய இயற்கை அளித்த நன்கொடையாக நினைத்தல்
தனித்திறன்களை வளர்த்தல்
பொறாமை இல்லாத பண்பை வளர்த்தல்
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்காமல் இருத்தல்
மூத்தோரை மதிக்கும் பண்பைப் பெற்றிருத்தல்
குடும்பப் பாரம்பரியத்தின் சிறப்பினைக் காத்து நிற்றல். அதோடு வழி வழியாகக் காக்கும் திறனை வளர்த்தல்
உதவி செய்தவரை என்றும் மறவாமல் இருத்தல்
உதவி செய்ததைச் சொல்லிக்காட்டாமல் இருத்தல்
மனதாரப் பாராட்டும் பண்பினை வளர்த்தல்
பேராசை இல்லாமல் இருத்தல்
நியாயமான ஆசையையே வளர்த்தல்
கடுஞ்சொல் பேசாமல் இருத்தல்
சினம் கொள்ளாமல் இருத்தல்
ஏட்டிக்குப் போட்டியாகப் பேசாமல் இருத்தல்
வாழ்க்கைப் பண்பாக நடிப்பைக் கொள்ளாமல் இருத்தல்
போலி கௌரவம் இல்லாமல் இருத்தல்
செல்வாக்கும் பணமும் இல்லாமல் இருக்கும்போது இருப்பதுபோல் நடித்தல்
அன்பு உணர்வைக் கொண்டிருத்தல்
தன்மீது நம்பிக்கை வைத்தல்
அறிவைத் தேடிப் பெறவேண்டும் மற்றவர் அறிவுச்சொத்தில் மாற்றம் செய்து தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது.
அறிவுச்சொத்தைப் பயன்படுத்தும்போது நன்றி தெரிவிக்கும் பண்பை வளர்த்துகொள்ளவேண்டும் (கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமானது, மு.வ. புத்தகத்திலிருந்து எடுத்தது)
படைப்பாற்றல் சிந்தனையை வளர்த்தல்
முடிந்தவரை ஒத்துப் போகும் குணத்தைப் பெறுதல்
குடும்பம், சமூகம், நாடு போன்றவற்றில் அக்கறை செலுத்துதல்
ரகசியத்தைக் காப்பாற்றும் மனப்பான்மையை வளர்த்தல்
மன நிறைவுடன் வாழ முயற்சித்தல்
நேரத்தையும் பொருளையும் வீணாக்காமல் இருத்தல்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தல், கஞ்சத்தனத்தை வெறுத்தல்
உரிமை ஆசிரியர் சி. குருசாமி
பயிற்சி 16 / 2010
பிரித்தல் 3

சொற்கள்
பிரித்து எழுதுக

முக்கடல்


மரமொன்று


ஆட்பலம்


வடமேற்கு


தென்மலை


மேலைநாடு


பொற்றேர்


பற்பசை


தமிழார்வம்


உயிரோவியம்


குருதியோட்டம்


வடமேற்கு


வடமொழி


பற்பொடி


கற்றூண்


தற்காப்பு


பணப்பை


மல்லிகைப்பூ


கொடி மலர்


மரப்பட்டை

தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 15 / 2010

பிரித்தல் 3
சொற்கள்
பிரித்து எழுதுக

அகத்தாய்வு


அகப்பாட்டு


அறஞ்செய்ய


மரவேர்


பாரவண்டி


உள்ளக்கோயில்


அகவாழ்வு


கற்கோயில்


கன்மலை


கட்குடம்


உட்பாகம்


பத்தாண்டு


முக்காலம்


அறுசுவை


முச்சாலை


முக்கனி


முச்சங்கம்


மும்மூர்த்தி


ஐம்பால்


முப்பால்


நூற்றாண்டு


இருகுரல்


பொற்கோயில்


பொற்சாலை




தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)
பயிற்சி 14 / 2010
வ. எண்
சொற்கள்
பொருள்
1
அறுசுவை

2
முச்சாலை

3
முக்கனி

4
முச்சங்கம்

5
புத்திரன்

6
ஐம்பால்

7
முப்பால்

8
கொடி மலர்

9
சிற்றாறு

10
ஒத்திகை

11
பயிற்றுநர்

12
நடத்துநர்

13
கடவுச்சீட்டு

14
மருந்தகம்

15
மருத்துவமனை

16
மறுமலர்ச்சி

17
மறுபதிப்பு

18
மாற்றுக்கருத்து

19
பெருஞ்சுவர்

20
குறிஞ்சி நிலம்

21
முல்லை நிலம்

22
மருதம் நிலம்

23
நெய்தல் நிலம்

24
பாலை நிலம்

தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)

Wednesday, April 7, 2010

சொல்லும் பொருளும்
பகுதி 1
பயிற்சி 11 / 2010
வ. எண்
சொற்கள்
பொருள்
1
அடைக்கலம்
2
உருவாக்கி
3
தெளிவற்ற
4
கல்விபுகட்ட
5
குறிப்பாக
6
கருதப்படுகிரறார் 7

முகப்பு அட்டை
8
மங்கிவருதல்
9
குன்றி
10
வழு
11
வழுக்கல்
12
மனப்போக்கு
13
வேட்கை
14
சிதைவு
15
சீர்திருத்தம்
16
தீவிரமாக
17
விற்றுவிடுதல்
18
விட்டுவிடுதல்
19
மட்டும்
20
மற்றும்
21
மாற்றுக்கருத்து
22
தோன்றிவிடவில்லை

ஆசிரியர். சி. குருசாமி (3)

சொல்லும் பொருளும்
பயிற்சி 12 / 2010

வ. எண்
சொற்கள்
பொருள்
1
அதிநவீன
2
உறைவிடம்
3
தீர்ப்பு
4
திருத்தப்பட்ட
5
தீர்மானித்தேன்
6
இதயம்
7
கடும்பயிற்சி
8
அம்சங்களை
9
பரிணமித்த்து
10
உன்னதக்கலை
11
நேர்காணல்
12
எண்ணியவர்
13
நல்வழிப்படுத்துதல்
14
திகழ்ந்தான்
15
உபசரித்து
16
அறுசுவை
17
முப்பழம்
18
முக்கனி
19
முக்கோணம்
20
களஞ்சியம்
21
பிரதிபலித்த்து
22
தலைதூக்கி


ஆசிரியர். சி. குருசாமி (1)

பயிற்சி 13 / 2010


வ. எண்
சொற்கள்
பொருள்
1
உயிரற்ற
2
அசம்பாவிதம்
3
ஊழியர்கள்
4
ஆயத்தம்
5
விளைவிக்கின்றன
6
வாடிக்கை
7
வீழ்ச்சி
8
முதலீடு
9
பிரதமர்
10
செவ்வனே
11
மெய்சிலிர்த்தது
12
பளிச்சிட்டது
13
பற்றியது
14
விழிப்படைந்தார்
15
முற்றும் துறந்தவர்
16
இரண்டற
17
இல்லறம்
18
கட்டுப்பாடு
19
சொக்கி
20
சொற்களஞ்சியம்
21
உள்ளுணர்வு
22
நாலடியார்
23
நாணம்
ஆசிரியர். சி. குருசாமி (1)

Sunday, March 28, 2010

பயிற்சி 01 / 2010.
அகராதியின் துணைகொண்டு அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருள் கண்டு பிடித்துச் சூழல் உருவாக்குக.


இனிப்புப் பொங்கல்

இயற்கையை வணங்கும் பொங்கல்
இல்லம் செழிக்கும் பொங்கல்
கவலை நீக்கும் பொங்கல்
கருத்துப் பெருகும் பொங்கல்!

உழைத்தவர் மகிழும் பொங்கல்
ஊருக்குக் காட்டும் பொங்கல்
உவகை ஊட்டும் பொங்கல்
உள்ளொளி வளர்க்கும் பொங்கல்
!

தமிழர் போற்றும் பொங்கல்
தமிழரைக் காட்டும் பொங்கல்
மங்காமல் பொங்கும் பொங்கல்
மனமெல்லாம் இனிக்கும் பொங்கல்!



பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.


பயிற்சி 03 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக


செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்


கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.


திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.


இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.


மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.


பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________


பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.


அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.


ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.


பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.


குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் ,ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.

பயிற்சி 06 / 2010.
கீழ்கண்ட பகுதியில் குறில் நெடில் எழுத்துகள் அமைந்த சொற்களை அடையாளம் கண்டு அச்சொற்களை கோடிட்ட இடங்களில் நிரப்புக.

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) மதிக்கும் _____ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும்
(Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

___________________________ _______________________________
___________________________ ________________________________
___________________________ _________________________________
___________________________ _________________________________




பயிற்சி 07 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) __________________ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் (Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.


பயிற்சி 08 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவற்றுள் ஒரு சில மிகவும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. ______________________ உணவு, உடை, இருப்பிடம் முதலியன ஆகும். இம்மூன்றும் இல்லாமல் மனிதனால் ________________________ வாழமுடியாது. ________________________ உணவு மிகவும் முக்கியத் தேவையாக அமைகிறது. உணவு இல்லாவிட்டால் உயிரினங்களால் நிச்சயமாக உயிர் வாழமுடியாது.

உணவுமுறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சைவ உணவு, மற்றொன்று அசைவ உணவு. செடி கொடி, மரங்களிலிருந்து ________________________ம் உணவைச் சைவ உணவு என்கிறோம். இவ்வகை உணவு உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. இது உடலைச் சீராக வைத்துக்கொள்ள _________________. சைவ உணவை இயற்கை உணவு என்று கூறுகிறோம்.

பயிற்சி 09 / 2010.

கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

இந்த உலகில் பல இனமக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனமும் வெவ்வேறு வாழ்க்கை _________________________ அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. மக்களின் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு பண்பாட்டுக் கூறுகள் _____________________. தமிழர் பண்பாடும் பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

நமது பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்பண்பாடு ____________________ புறப்பண்பாடு. அகப்பண்பாட்டில் குடும்ப வாழ்க்கையையும் கொடைத் தன்மையையும் _______________________. புறப்பண்பாடு என்பது வெளி உலகில் மனிதன் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களை _____________________. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்முன்னோர்கள் பின்பற்றிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் நம்மால் பின்பற்ற முடியவில்லை. ஆனால், சில முக்கியக் கூறுகளை நாம் அவசியம் பின்பற்றித்தான் நடக்கவேண்டும்.


பயிற்சி 10 / 2010.

பின்வரும் சொற்களை அவற்றின் பொருள் விளங்கும் வகையில் வாக்கியங்களில் அமைத்து எழுதுக.


Q1. ஆராய்ந்து
______________________________________________________________________________________________________

Q2. கதிகலங்கி
________________________________________________________________________________________________________

Q3. விருந்துண்ண
________________________________________________________________________________________________________

Q4. வேலைப்பாடு
________________________________________________________________________________________________________

Q5. நிரூபிக்க

______________________________________________________________________________________________________________________________________________


பயிற்சி 10 / 2010.

கீழ்க்கண்ட சொற்களை அகராதியைப் பயன்படுத்திப் பொருள் எழுதுக. அவற்றுள் உனக்குப் பிடித்த இரண்டு சொற்களைக் குறிப்பிட்டு அவை ஏன் பிடித்தன என்று சிறு குறிப்பு எழுதி அவற்றிற்கு வாக்கியங்கள் அமைக்கவும்.


கையேடு, எண்ணப்பதிவுகள், இயக்குநர், அனுப்புநர், பெறுநர், மதிப்பிற்குரிய, இல்லாமை, கொல்லாமை, உண்ணாமை,

Saturday, March 6, 2010

பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.


பயிற்சி 03 / 2010.

செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்


கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.


திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.


இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.


மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.


பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________

பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.


அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.


ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.


பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.


பகுதிகளாகப, குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் , ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.

Sunday, January 17, 2010

பயிற்சி 01 / 2010.

இனிப்புப் பொங்கல்


இயற்கையை வணங்கும் பொங்கல்
இல்லம் செழிக்கும் பொங்கல்
கவலை நீக்கும் பொங்கல்
கருத்துப் பெருகும் பொங்கல்!


உழைத்தவர் மகிழும் பொங்கல்
ஊருக்குக் காட்டும் பொங்கல்
உவகை ஊட்டும் பொங்கல்
உள்ளொளி வளர்க்கும் பொங்கல்!


தமிழர் போற்றும் பொங்கல்
தமிழரைக் காட்டும் பொங்கல்
மங்காமல் பொங்கும் பொங்கல்
மனமெல்லாம் இனிக்கும் பொங்கல்!