Saturday, December 25, 2021

 


                கல்வி 

கற்பனையின் ஊற்றும்நீயே

கனவின் விருச்சம்நீயே 

காற்றின் ஓட்டம்நீயே

கருத்தின் பெட்டகமானாயே!


சிந்தனையின் சீர்தூக்கல்நீயே

சிந்திக்கும் ஆசானும்நீயே

புத்தம்புதிய ஓட்டம்நீயே

புவியின் நாட்டமும்நீயே!


அன்பைத்தரும் அகல்விளக்குநீயே

ஆதரிக்கும் பணப்பைநீயே 

தோண்டத்தோண்ட ஊற்றும்நீயே

தோல்விகாணா பாட்டும்நீயே!


மனத்தை மயக்கும் சிறப்புநீயே

மாண்பைத்தரும் மலரும்நீயே!

மானிடம்போற்றும் தெய்வம்நீயே

மனத்தைமாற்றும் மருந்தும்நீயே!! 


கல்வியில்லையேல் ஏதுவுலகம்

காற்றுப்போன உடலாகிடுமே!

கல்வியைத் தேடிச்செல்வோம்

காலமெல்லாம் காத்திடுமே!!

                                                                    - சிகு

Wednesday, December 22, 2021

 


விதையும் விருச்சமும்


விதையில்லாமல் விருச்சம் ஏது

வினையில்லாமல் விளைவு ஏது

வினையே புவியில் விளைந்து

விண்ணில் கலையாய் மலர்ந்தது!

 

கடுகளவை காற்றளவாக்கிடும் உலகில்

காலமெல்லாம் கற்பனையில் நனைந்து

கற்றதை படைத்து காட்டிடுவர்

கற்றறிந்த கலைஞர் இவ்வுலகில்தானே!

 

வற்றிய கண்ணும் வடிவத்தைக் கொடுத்திட

வற்றாத மனமும் வாழ்வியலை அளித்திட  

கற்பனைக் கெட்டா அற்புத வடிவந்தனை

கலையாகப் படைத்து வாழ்ந்தனரே

 

காட்டியவை மறைந்திடா வண்ணம்

காண்பவர் வாழ்வியல் திறனைக்கற்றிட  

முறைமாறா முழுவடி மனைத்தும் 

முத்திரை யாக்கினர் மூதறிஞர்களே!

 

நன்றி செப்புவோம் நாமும் என்றும்

நாம்வாழ வழிசெய்த உழைத்தோர்தமை  

ஊருக்குக் காட்டிய உன்னதத் தலைவர்களை

உளம்நிறைய வாழ்த்தி வணங்குவோமே!!

                                   -சி.கு

 

 


Tuesday, December 21, 2021

 


                  காலம்

காலம் நம்மை மாற்றிடும்

கற்பனை எல்லாம் கொன்றிடும்!

காலம் நம்மை மாற்றிடும்

கல்மனத்தையும் உருக்கிடும்!


காலம் நம்மை மாற்றிடும்

காவியக் கதை சொல்லிடும்!

காலம் நம்மை மாற்றிடும்

கனியும் மனத்தையும் கொன்றிடும்!

 

காலம் நம்மை மாற்றிடும் 

காவியமாய் நம்மோடு நின்றிடும்

காலம் நம்மை மாற்றிடும் 

கற்பனைச் சிறகை விரித்திடும்!!



 

                யானை

காட்டுக்குள் ஒரு யானை

கரியநிற யானை தானே

பாட்டுக்குள்  ஒரு யானை

பாரதி வென்றிட்டார் அதனை


ஓட்டுக்குள் ஒரு யானை 

ஒளியைத் தேடியவர் தொலைத்தார்

பட்டணம்  சென்று வந்தாரே

பட்டனத்தார் என்ற அடிகள்!


வீட்டுக்குள் ஒரு யானை

விலகிச் சென்றால் அழியும்

மனக் கூட்டுக்குள் ஒருயானை

மதம்பிடிக்காமல் காத்திடுவோமே!

                                                                       சி.கு



Saturday, December 18, 2021

 


                               பழுது

பார்ப்போரெல்லாம் பழுது அல்லர்

பழகுவோரெல்லாம் நற்பழமும் அல்லர்

பழகும்போது தெரிவதில்லை தீயோர்

பல்லைக் காட்டிப் பழகிடுவாரே!


பார்த்துப் பழகிடல் வேண்டும்

பழுதுநிறைந்த உளம் உடையோரிடம்  

பாழும் நிலைக்கு செல்லாமல் இருக்கவே

பாரினில் பார்த்துப் பார்த்துப் பழகவேண்டும்!


பார்த்துப் பார்த்துப் பழகினாலும்

பாழ்மனம் கொண்டோர் தெரிவதில்லை

பதுங்கியிருப்போரைக் காண்பது அரிதே

பார்த்துச் சீர்தூக்கிப் பழகிடவேண்டும்.


Thursday, December 16, 2021

 

அன்புள்ள பாபு   

 

வணக்கம். நீ நலமாக இருக்கின்றாயா? உன் நண்பர்கள் நலமா?

உன் கடிதம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தேர்வு தொடங்கப்போகிறது. அதனால்தான் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.

 

நானும் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி என்னுடைய பெற்றோரிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அதோடு என் மாமாவிடமும் கருத்துக் கேட்டுள்ளேன். என்னுடைய நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.  என்னுடைய ஆசிரியரிடமும் சில வழிகளைக் கேட்டுள்ளேன். அவர்கள் சில வழிகளை எனக்குச் சொன்னார்கள். அவை நிச்சயமாக எனக்கு உதவிசெய்யும். 

 

இறுதியாக நான் அறிவியல் துறையில் (மருத்துவத்துறை, ஆசிரியர், எழுத்தர், விளையாட்டு வீரம், இராணுவத்துறை, ஆராய்ச்சியாளர், பேராசிரியர்)

 

அதற்கு உரிய புத்தகங்களை அவ்வப்போது படித்துவருகிறேன். புத்தகங்களின் மூலம் புதிய செய்திகளைத் தெரிந்துவருகிறேன். அச்செய்திகளில் சந்தேகம் வந்தால் என்னுடைய பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை என்னுடைய பெற்றோருக்குச் சந்தேகம் இருந்தால் அவர்களுடைய நண்பர்களிடம் கேட்டு எனக்கு வழிகாட்டுவார்கள்.

 

இதனால் எனக்குச் சில யோசனைகள் வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றி அதற்குரிய பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன்.

 

இவற்றின் மூலம் என்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

 

எனக்குப் பதில் எழுதவும்.

 

நன்றி

 

 


                                             படக்கதை  


கதைகள் நமக்கு அறிவைக் கற்பிக்கின்றன. சிறு பிள்ளைகள் முதல் முதியர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பார்கள். எல்லாக் கதைகளும் நமக்குக் குறைந்தது ஒரு கருத்தையாவது சொல்லும். அவை நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.

 

திருமதி கமலா அடுக்குமாடியில் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவரும் ஒரு தொழில்சாலையில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதனை வயது முதிர்ந்த  அம்மா பார்த்துக்கொள்கிறார்.

 

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். கமலா வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு நினைத்தார். அதனால் தன்னுடைய பிள்ளையும் தூக்கிக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றார்.

 

திருமதி கமலா அங்கே தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கினார். பின்னர், தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு காசாளரிடம் சென்றார். அன்று பேரங்காடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள்.

கமலாவின் குழந்தை அழத்தொடங்கியது.

 

அவர் வேண்டிய பொருள்களை  வாங்கிய பின்னர் வீட்டிற்குத் திரும்பினார். பேரங்காடியில் குழந்தையையும் பொருள்களையும் அவரால் தூக்க முடியவில்லை. கடையின் உதவியாளர் இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் விரைவாக வந்து கமலாவுக்கு உதவி செய்தார்.

 

கமலா தன்னுடை பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடந்தார். உதவியாளர் பொருள்களை கடையின் வாசல்வரை கொண்டுவந்தார். அப்பொழுது வாடகை உந்துவண்டி வந்தது. கமலா பொருள்களை உந்துவண்டியில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய பிள்ளையுடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

 

இக்கதையிலிருந்து மற்றவர்கள் கேட்காமலே நாம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 

 


                                 புன்னகை


மனத்தில் இருப்பது புன்னகை

மலரில் இருப்பதும் புன்னகை

மாண்பைத் தருவது புன்னகை

மானிடராக்குவது  நற்பெரும் புன்னகை!


புன்னகை மறந்தோர் பலருண்டு

பூமியில் பிரச்சினை பார்ப்பதுண்டு 

நானெனும் அகந்தை ஒழித்தவரே  

நாள்தோறும் காட்டிடுவார் நற்புன்னயே!!



Wednesday, December 15, 2021

 


செய்வதை நீ உணர்வாய்!


காகத்தின் நிறம் கருப்பு

காணும்போது எங்கும் இருக்கு

பாலின் நிறம் வெள்ளை

பளிச்சிட்டு எங்கும் நிற்கும் 


மனத்தின் நிறம் ஒளியே

மாசு வராமல் தடுப்பாய் 

செயலின் நிறம் சிறப்பே

செய்வதை நாம் உணரும்போது.