Thursday, December 16, 2021

 


                                             படக்கதை  


கதைகள் நமக்கு அறிவைக் கற்பிக்கின்றன. சிறு பிள்ளைகள் முதல் முதியர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பார்கள். எல்லாக் கதைகளும் நமக்குக் குறைந்தது ஒரு கருத்தையாவது சொல்லும். அவை நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.

 

திருமதி கமலா அடுக்குமாடியில் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவரும் ஒரு தொழில்சாலையில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதனை வயது முதிர்ந்த  அம்மா பார்த்துக்கொள்கிறார்.

 

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். கமலா வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு நினைத்தார். அதனால் தன்னுடைய பிள்ளையும் தூக்கிக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றார்.

 

திருமதி கமலா அங்கே தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கினார். பின்னர், தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு காசாளரிடம் சென்றார். அன்று பேரங்காடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள்.

கமலாவின் குழந்தை அழத்தொடங்கியது.

 

அவர் வேண்டிய பொருள்களை  வாங்கிய பின்னர் வீட்டிற்குத் திரும்பினார். பேரங்காடியில் குழந்தையையும் பொருள்களையும் அவரால் தூக்க முடியவில்லை. கடையின் உதவியாளர் இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் விரைவாக வந்து கமலாவுக்கு உதவி செய்தார்.

 

கமலா தன்னுடை பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடந்தார். உதவியாளர் பொருள்களை கடையின் வாசல்வரை கொண்டுவந்தார். அப்பொழுது வாடகை உந்துவண்டி வந்தது. கமலா பொருள்களை உந்துவண்டியில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய பிள்ளையுடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

 

இக்கதையிலிருந்து மற்றவர்கள் கேட்காமலே நாம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 

 


No comments:

Post a Comment