Saturday, December 25, 2021

 


                கல்வி 

கற்பனையின் ஊற்றும்நீயே

கனவின் விருச்சம்நீயே 

காற்றின் ஓட்டம்நீயே

கருத்தின் பெட்டகமானாயே!


சிந்தனையின் சீர்தூக்கல்நீயே

சிந்திக்கும் ஆசானும்நீயே

புத்தம்புதிய ஓட்டம்நீயே

புவியின் நாட்டமும்நீயே!


அன்பைத்தரும் அகல்விளக்குநீயே

ஆதரிக்கும் பணப்பைநீயே 

தோண்டத்தோண்ட ஊற்றும்நீயே

தோல்விகாணா பாட்டும்நீயே!


மனத்தை மயக்கும் சிறப்புநீயே

மாண்பைத்தரும் மலரும்நீயே!

மானிடம்போற்றும் தெய்வம்நீயே

மனத்தைமாற்றும் மருந்தும்நீயே!! 


கல்வியில்லையேல் ஏதுவுலகம்

காற்றுப்போன உடலாகிடுமே!

கல்வியைத் தேடிச்செல்வோம்

காலமெல்லாம் காத்திடுமே!!

                                                                    - சிகு

No comments:

Post a Comment