Sunday, December 6, 2009

வெள்ளை நிறக் கொக்கு
வேகம் காட்டும் கொக்கு
துள்ளிப் பறக்கும் கொக்கு
தூய வெள்ளிக் கொக்கு


கருத்தை விளக்குக.
சொல்லப்பட்டுள்ள உவமை பொருந்துமா? விளக்குக.

Tuesday, September 29, 2009

உயர்நிலை 1 (விரைவு / உயர்தமிழ்) வகுப்புக்குப் பொருத்தமான மாதிரிக் கட்டுரை வடிவம். 1


கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்
இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, மாறுபட்ட பண்புகளை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக நாள்தோறும் போராடி உயிர் வாழ்கின்றன. அவை சிந்திக்கும் திறன் பெற்றவை. னால், சிந்தித்த கருத்துகளைப் பற்றிப் பகுத்தறியத் தெரியாதவை. அவற்றுள் டு, மாடு போன்றவை மனித இனத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்து வருகின்றன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இவற்றின் பாலை மருத்துவரின் லோசனையின்படி நாள்தோறும் குடித்துவந்தால் மிகவிரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு ஏற்படும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமையும் ற்றலும் உள்ளவை. இவை இரண்டும் அவற்றின் இனப்பண்புகள் கும். அவை பிறந்த சில மாதங்களில் அங்குமிங்கும் ஓடியாடித் தன்னம்பிக்கையுடன் தமக்கு வேண்டிய உணவினை வேட்டையாடி வாழ்கின்றன. டு, மாடு, மான், போன்ற விலங்குகள் அஞ்சி வாழ்பவை. அவை தமக்கு வேண்டிய உணவு கிடைக்காதபோதும்கூட மாமிச உணவைத் தின்னாமல் உயிரை விடும். ஓநாய். கரடி, நரி போன்றவை வஞ்சக உணர்வு உள்ளவை. மற்ற உயிரினங்களையும் அவை வேட்டையாடிய உணவினையும் எளிதில் அபகரித்துக் கொள்பவை. இவற்றில் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொல்லும் ற்றலுடையது. இதனை வஞ்சகக் குணம் உள்ள விலங்கு என்று விலங்கியல் துறையினர் பிரிப்பர்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பல்திறப்பட்ட குணங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மனித சமுதாயத்திற்கு நன்மையைத் தருகின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள் என்று உளவில் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்குணங்களை நம்மை விட்டு நாம் நீக்கும்போது மனிதத் தன்மை பெற்றவர்களாக மாறிவிடுவோம். ஒருவர் மனித நேயத்துடன் வாழும்போதுதான் மற்றவர்கள் அவரை மதித்துத் தலைவணங்குவார்கள்.


எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களை அவசியம் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்களும் சிறப்புடன் வாழ்வதற்கு நாம் வழிகாட்டுவதோடு அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய பண்புகளை நாம் பெருக்கிக்கொள்ளும்போது மனித உறவு வலுப்பெறும். அத்துடன் நாம் உயர்வடைவதோடு நம்மைச் சார்ந்திருக்கின்ற சமூகமும் உயர்வடையும்.


உயர்நிலை 1 வழக்கம் தொழில் நுட்பம் / வழக்கம் (மாதிரிக் கட்டுரை 2)
கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்

இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை பல குணங்களை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக போராடி உயிர் வாழ்கின்றன. விலங்குகளால் நன்மை தீமைகளை யோசித்துப் பார்க்க முடியாது. டு, மாடு, ஒட்டகம் போன்றவை மனித இனத்திற்கு நன்மையைச் செய்து வருகின்றன. இவற்றின் பால் உடலுக்கு மிகவும் சக்தியைத் தரும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் தைரியமானவை. அதனால், அவை மற்ற விலங்குகளை எளிதில் கொன்றுவிடும். டு, மாடு, மான், போன்ற விலங்குகள் பயந்து வாழ்பவை. அவை செடி, கொடிகளைத் தின்று உயிர் வாழும். கரடி, நரி போன்றவை தந்தரம் உடையவை. இவை மற்ற விலங்குகளை நம்பவைத்து ஏமாற்றும். இவற்றுள் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. அத்துடன் இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொன்று விடும்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பலவகைக் குணங்கள் உள்ளன. அவற்றில் பல மக்களுக்கு நன்மையைச் செய்கின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள். இக்குணங்கள் இல்லாதவர்களை மக்கள் மதித்துத் தலை வணங்குவார்கள்.

எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் குணத்தை நாம் வளர்த்துக்கொள்ளவது நல்லது. இதன் மூலம் மனித உறவு வலுப்பெறும். நாம் உயர்வடைவதோடு நம்மைச் சுற்றி இருக்கும் சமூகமும் உயர்வடையும்.

Wednesday, September 23, 2009

வளர்த்தநரி 24.09.2009

கவிதை (கதை) இலக்கியம். இக்கவிதைக்குக் கவிதை நயம் எழுதுக

வளர்த்தநரி 24.09.2009

காட்டில் ஒரு குட்டிநரி
காணாமல் அது போனது
போன வழி மறந்தது
புலம்பி அது தவித்தது!

சிங்கம் ஒன்று பார்த்தது
சினத்தை அது மறந்தது
பாசம் காட்டி நின்றது
பால் கொடுத்து மகிழ்ந்தது!

கொஞ்ச காலம் சென்றது
கொஞ்சும் காலம் மறைந்தது
நரிக்குட்டி அங்கிருந்து பிரிந்தது
நாடிதன் கூட்டத்தோடு இணைந்தது!

காலம் விரைந்து சென்றது
கால் வீரம் இழந்தது
படுத்துச் சிங்கம் இருந்தது
பார்த்து நரிக்கூட்டம் வந்தது!


வஞ்சகமாய் வளர்த்தநரி நின்றது
வாழ்வை முடிக்க நினைத்தது
சீறிப்பாய்ந்து சிங்கத்தைக் கொன்றது
சில்லறையாய் உடல் மறைந்தது!

- எழுதியவர் ஆசிரியர் குருசாமி

Sunday, September 20, 2009

கதையும் சிந்தனையும் 21.09.209


இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டைபோல் அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன. மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன. மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் எங்குச் செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது. ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் பார்த்தது. அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் கொடுத்தது. நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அது சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில சென்றன. சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. அதனால், சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் செல்லும். ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தைத் தாக்க வந்தது. அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் தெரிந்தது. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது. அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் உயிர் பிரியும் நேரம் வந்தது. இறுதியாகச் சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.

1. கோட்டையூர் என்று மக்கள் அழைக்கக் காரணம் என்ன?

2. மலையில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் யாவை?

3. மலையில் வாழும் இரண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறுக.

4. ஆற்றங்கரையில் சிங்கம் என்ன செய்துகொண்டிருந்தது?

5. நரிக்குட்டி முதலில் ஏன் மகிழ்ச்சி அடைந்தது?

6. சிங்கம் எப்போது மகிழ்ச்சி அடைந்தது?

7. சிங்கத்தால் ஏன் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை?

8. சிங்கத்தின் உயிர் எப்போது பிரிந்தது?

9. இக்கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

10. நீ சென்றுவந்த ஒரு மழைப்பகுதியைப் பற்றிக் கூறுக.




கோடிட்ட இடங்களை நிரப்புக.

இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டை ______________________ அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன.



மலையின் அடிவாரத்தில் ___________________ காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன.


மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக __________________ வந்தன.



ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் ____________________ செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது.


ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் ________________________.



அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் _____________________.



நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. _________________ சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.


நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில ______________________.


சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. ______________________, சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் சென்றன. ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தை ______________________ வந்தது.


அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் ____________________. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது.


அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் ____________________ பிரியும் நேரம் வந்தது. இறுதியாக, சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.




கோடிட்ட இடங்களை நிரப்புக.


இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டை ______________________ அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன. மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன. மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக __________________ வந்தன.


ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் ____________________ செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது. ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் ________________________. அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் _____________________. நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. _________________ சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.


நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில ______________________. சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. ______________________, சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் சென்றன. ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தை ______________________ வந்தது.


அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் ____________________. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது. அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் ____________________ பிரியும் நேரம் வந்தது. இறுதியாக, சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.



வாக்கியத்தில் கூறுக.


அழைத்தனர்
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

வளர்ந்திருந்தன
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

கூட்டங்கூட்டமாக
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

தெரியாமல்
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________
ஓய்வு
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

வாடியிருப்பதை
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________
மகிழ்ச்சி
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

காணவில்லை
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

தெரிந்தது
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________




மேலே குறிப்பிட்டுள்ள சொற்களில் உனக்குப் பிடித்த ஐந்து சொற்களைக் கொண்டு உமது குழுவினருடன் கலந்துபேசி ஒரு சம்பவம் அல்லது கதை உருவாக்குக.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



கதையும் சிந்தனையும்


பூஞ்சோலை என்ற ஊர் மலையின் அடிப்பாகத்தில் உள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் மரம் செடி கொடிகள் அதிகம் இருக்கும். அவை பசுமை நிறத்தில் காட்சி அளிக்கும். அக்காட்சி பார்ப்பர் மனத்தை எளிதில் கவரும். அவ்வூரைச் சுற்றிப் பூக்கள் அதிகமாக இருக்கும். எனவே, பூஞ்சோலை என்று அப்பகுதி மக்கள் அவ்வூரை அழைத்தனர். அங்குள்ள மலைப்பகுதியில் விலங்குகளும் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கும்.

அங்கு வசித்த சாம்பல் நிற மயில் ஒன்றும் புள்ளி மான் குட்டி ஒன்றும் கூட்டத்தை விட்டுப் பிரிந்தன. அவை இரண்டும் சிறந்த நண்பர்களாக மாறின. அவ்வூரில் ஓராண்டு மழை பெய்யவில்லை. பறவைகளும் விலங்குகளும் இடம் மாறிச் சென்றன. ஆனால், மயிலும் மானும் பிறந்த மண்ணை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டன. அவை ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டன. மயில் உயரமான மரத்திலுள்ள இலைகளை மான்குட்டி தின்பதற்குத் தேவையான போது கொத்தித் தரும். மேலும், மயில் மரப்பொந்துகளில் உள்ள தவளைகளையும் புழுப்பூச்சிகளையும் கொத்தித் தின்னும். இவ்வாறு முயலும் கொக்கும் கஷ்ட காலத்தில் வாழ்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு மழை பெய்தது. ஊரை விட்டுச் சென்ற விலங்குகளும் பறவைகளும் மீண்டும் பூஞ்சோலைக்கு வந்து சேர்ந்தன. அவை மயிலும் மானும் உயிரோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டன. அவற்றின் உண்மையான நட்பைப் பாராட்டின. இதனை நரி ஒன்று கவனித்தது. அது மயில் மற்றும் மானின் மீது பொறாமைப்பட்டது. எனவே, நரி அவற்றைப் பிடித்துத் தின்பதற்குத் திட்டம் தீட்டியது.

முதலில் மயிலிடம் நரி பழகத்தொடங்கியது. நரி மயிலிடம் மானைப் பற்றிக் குறைகூறியது. மயில் தொடக்கத்தில் நம்ப மறுத்தது. நரி வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் மயிலிடம் முயலைப் பற்றிக் குறைகூறியது. இறுதியில் நரி மயிலிடம் அதன் தோற்றத்தைப் பற்றி மான் குறை கூறுவதாகக் கூறியது.

மயில் மெல்ல மெல்ல நம்பத் தொடங்கியது. பின்னர், மயிலுக்கு மானின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அது மான் நன்றி மறந்து விட்டதாக நினைத்தது. எனவே, மயில் மானைக் காட்டிக்கொடுக்க நினைத்தது. ஒருநாள் அது இருக்கும் செடிக்கு அருகில் பறந்து சென்று நின்றது. அதனைக் கண்ட நரி மானின் இருப்பிடத்திற்கு விரைந்து சென்றது. அது மானை தன்வாயால் கைவிப்பிடித்தது. அதோடு தன் அருகில் நின்றுகொண்டிருந்த மயிலின் கழுத்தில் மிதித்துக் கொன்றது.


1.பூஞ்சோலை என்ற பெயர் அவ்வூருக்கு ஏற்பட்டதன் காரணம் யாது?

1 அவ்வூர் பூப்போன்று இருந்ததால்
2. அவ்வூர் பசுமை நிறமாக இருந்ததால்
3. அவ்வூர் பூவைப் போல மனத்தை இழுப்பதால்
4. அவ்வூரைச் சுற்றிப் பூக்கள் இருப்பதால் ( )


2. மயிலும் மானும் ஏன் அவ்வூரை விட்டுச் செல்ல வில்லை?

1. அவ்வூரில் அவை வாழ்ந்ததால்
2. அவ்வூரில் அவை தோன்றியதால்
3. அவ்வூர் அவற்றிற்குப் பிடித்ததால்
4. அவ்வூரை அவை நேசித்ததால்


3. மானின் உணவுப் பிரச்சினையை மயில் எவ்வாறு தீர்த்தது?

1. தவளைகளைக் கொத்திக் கொடுத்தது
2. பூச்சிகளைக் கொத்திக் கொடுத்தது
3. இலைகளைக் கொத்திக் கொடுத்தது
4. மரத்தைக் கொத்திக் கொடுத்தது


4. மற்ற விலங்குகள் எதனைப் பாராட்டின?

1. மயிலின் அன்பைப் பாராட்டின
2. மானின் நட்பினைப் பாராட்டின
3. அவைகளின் உண்மையான நட்பைப் பாராட்டின
4. அவை உயிரோடு இருந்ததைப் பாராட்டின



5. மயில் மானை ஏன் காட்டிக்கொடுத்தது?


1. மான் நன்றி மறந்துவிட்டதாக நினைத்தது
2. மயில் நரியின் சொல்லை நம்ப மறுத்தது
3. மயில் நட்பின் மீது நம்பிக்கை இழந்தது
4. மயில் நரியுடன் நட்புக் கொள்ள நினைத்தது




Saturday, August 29, 2009

பிரிவோம் சந்திப்போம்

கவிதையைப் படித்த பின்னர் அதில் அமைந்துள்ள கவிநயத்தை விளக்கி எழுதி ஆசிரியரிடம் சரிபார்த்துக்கொள்ளவும்


பட்டம் பெறுவோம்
பாரினில் உயர்வோம்
கூடி மகிழ்வோம்
குற்றம் காணோம்

இல்லறம் இணைவோம்
நல்லறம் புரிவோம்
இன்றுபோல் என்றும்
இணைந்து இருப்போம்

சாதித்து நிற்போம்
சந்ததி தொடர்வோம்

சந்திப்போம் பிரிவோம்
பிரிவோம் சந்திப்போம்!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி



கவிதையைப் படித்த பின்னர் உனக்குப் பிடித்த வரியைத் தேர்வு செய்து அது பிடித்ததற்கான காணங்களை விளக்கி எழுதிய பின்னர் சரிபார்க்கவும்.


அன்பைப் பெருக்கி
ஆற்றலை வளர்த்து
இல்லாமை நீங்கி
ஈன்றோரை மதித்து
உள்ளம் நிறைந்து
ஊருக்கு உதவி
எந்நாளும் சிறந்து
ஏறுபோல் நின்று
பல்லாண்டு வாழ
நெஞ்சார வாழ்த்துகிறது
செயலினை எண்ணி
நம்நிலையம் உங்களை!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

Tuesday, August 25, 2009

நனைந்த காலம்

கீழ்க்கண்ட பாடலைப் படித்தபின்னர் அதன் கருத்தினையும் நயத்தினையும் எழுதுக.

நனைந்த காலம்

அந்தக் காலம் இந்தக் காலம்
எந்தக் காலம் நம்ம காலம்
சொந்தக் காலம் வந்தகாலம்
சொர்க்கம் தந்த நல்ல காலம்!

சோகம் மறந்த நம்ம காலம்
சொல்லிக்கொள்ளும் இன்பக் காலம்
பள்ளிசென்று பறந்த காலம்
பாசம் நிறைந்த அன்புக் காலம்!

கல்வி வளர்ந்த வசந்தகாலம்
கல்லூரி சென்ற நம்ம காலம்
உள்ளம் செழித்து நனைந்த காலம்
உறவை வளர்த்த இல்லறக் காலம்!
- குருசா

Saturday, August 8, 2009

இலக்கியம் - இலக்கியம் - கவிதையும் நயமும்


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.


பள்ளி திறக்கும் நேரம்

பள்ளிசெல்லும் காலம்
பார்த்துநிற்கும் கோலம்
முந்திப்பறக்கும் நேரம்
முனங்கிச்செல்வோம் நாமே!

இன்பமான காலமிதனை
என்றும்நினைப்போம் நாமே
துன்பம்வந்த போதும்
துவண்டிடாமல் செல்வோம்!

பச்சைவண்ணம் நமக்குப்
பாதை காட்டும்போது
இச்சையுடன் நாமும்
இன்பமாகச் செல்வோம்!

அங்குமிங்கும் திரும்பாது
அண்ணன்தம்பி நினையாது
பள்ளிசெல்ல நினைப்போம்
பாதைபார்த்து நடப்போம்!

அன்புதனைப் பெருக்கி
அனைவரையும் மதிப்போம்
இன்பம்பல பெற்றிட
இல்லோரை நேசிப்போம்!
உள்ளவரை சிறந்திட
உண்மையை அறிந்திடுவோம்
பண்புதனைக் கற்றுக்
பார்போற்ற வாழ்ந்திடுவோமே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

இலக்கியம் - கவிதையும் நயமும் -

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்கவும்



1 நாம் நம் உடல்நலத்தை எவ்வாறெல்லாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?

குறிப்பு:

உடலில் உறுதியுடையோர் அடையும் நன்மைகள்- சுத்தமுள்ள இடத்தின் நன்மைகள் - உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் - உணவு உண்ணும் முறை – வருமுன் நோயைக் காக்கும் வழிமுறைகள் - போன்ற அமைப்பில் விடை அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


2 இவ்வுலகம் முன்னேற்றம் அடைவதற்குக் கவிஞர் கண்ணதாசன் கூறும் வழிமுறைகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்பு:

விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைவதால் ஏற்படும் நன்மைகள் – மண்ணையும் விண்ணையும் ஆய்வு செய்யும்போது இவ்வுலகிற்கு ஏற்படும் நன்மைகள் - நீர்வளத்தால் ஏற்படும் நன்மைகள் - தொழில் வளத்தால் ஏற்படும் நன்மைகள் - போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


3 பெண்கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கவிஞர் வாலி குறிப்பிடும் கருத்தினைத் தொகுத்து எழுதுக.


குறிப்பு:

பெண்கள் ஏன் படிக்க வேண்டும்? - உலகம் பாராட்டும்படி படித்தல் – படிக்கும் முறை - உயர்ந்தோர் சொல்லிய கருத்துகள் – படிப்பின் மூலம் அடையும் நன்மைகள் - தேடிவரும் கணவன் - போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


4 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள கோகிலாவின் பண்பு நலன்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.


5 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள அனந்தராமன் ஓர் அவசரப்புத்திக்காரன் என்பது பொருந்துமா? தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

6 நண்பனின் வருகைக்குப் பின்பு கோகிலா மற்றும் அனந்தராமனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்து எழுதுக.


7 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலின் மூலம் அதன் ஆசிரியர் ஜெயகாந்தன் கூறும் கருத்துகளை நீ ஏற்றுக்கொள்கிறாயா? தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.

8 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலில் கூறும் கருத்துகள் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? விளக்குக.


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.



எங்கள் நாடு

தங்கக்குணம் நிறைந்த
தங்கநிகர் நாடு
தரணியில் சிறந்த
எங்கள் நாடு
பொன்னும் பொருளும்
மிகுந்த நாடு
பொறுப்புள்ள தலைவர்கள்
பிறந்த நாடு!

மலையென மாண்பினை
மங்காப் புகழினை
மாறாப் பண்பினை
மகிழ்வுடன் பெற்றநாடு
பசுமையாய் தோன்றும்
பரவை நாடு
பார்க்கத் தூண்டும்
பார்போற்றும் நாடு!


உழைப்பின் உயர்வை
உணர்த்திடும் நாடு
உலகமே வியக்கும்
உயர்கலை நாடு
நான்கினம் வாழும்
நனிசிறந்த நாடு
நாளும் போற்றுவோம்
வாழ்க் வாழ்கவென்றே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

கோடிட்ட இடத்தை நிரப்புக-வாக்கியங்களை முடித்து எழுதுக- கட்டுரை எழுதும் பயிற்சி

கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு ஏற்ற சொற்றொடர்கள் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கு ஏற்ற மிகப்பொருத்தமான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.



1 கோபு அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் வீட்டிற்குப் போனவுடன் _______________________ காணப்பட்டார்.


2 குழந்தைவேலு என்பவர் நண்பர்களைப் பற்றி ________________
கூறும் குணத்தை உடையவராக இருந்ததால் அவருடைய நண்பர்கள் அவரை விட்டு விலகினர்.


3 சபீர் சிறு சிறு தவறுகளைச் செய்யத் தொடங்கியபோதே அவனுடைய பெற்றோர் அவனை ____________________ திருத்தினர்.


4 மாறன் துணி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைப் பழ வியாபாரம் செய்து _____________________.




5 நாம் எப்பொழுதும் ______________________ இணைந்து வாழவேண்டும்








1 உற்றார் உறவினரிடம்

2 தட்டிக்கேட்டு


3 கண்ணீரும் கம்பலையுமாக

4 இல்லாததும் பொல்லாததும்

5 தட்டிக்கொடுத்து

6. ஈடுகட்டினார்

7. கதைகட்டும்

8. இனிக்கப்பேசி

9. ஆறப்போட்டார்


10. இளைத்துக் களைத்து




வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


6 ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


7 ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.


8 நம் நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்ற திரு. லீ பல
புதிய திட்டங்களை அறிவித்தார்.


நம் நாட்டில் பதவி ஏற்ற புதிய பிரதமர் திரு. லீயால்
____________________________________________________.



9 நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.


நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


10
ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.

.

அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (11) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(12) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (13) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (14) _________________ வந்தார்.

அதியமான் வேட்டையாடுவதில் (15) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (16) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (17) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (18) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (19) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.

ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (20) ___________________, அந்த நெல்லிக் கனியை வையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.



மிகவும்
பின்னர்
அவற்றை

வாழ்ந்த
தங்கிய
வந்தார்

அறிவிலும்
சென்றார்
ஆற்றலிலும்

எடுத்தார்
பலர்
போற்றி

வந்தனர்
ஆர்வம்
பறித்தார்

பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு உம் சொந்த நடையில் விடை எழுதுக.


இயற்கையை வெல்லுகின்ற அளவிற்கு இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இவ்வுலகில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் பலர் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களின் வழிவந்த இன்றைய அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுகள் காலத்திற்கு ஏற்ற தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.

மனிதனின் தேவையின் பொருட்டுக் காலங்காலமாகப் புதிய கண்டுபிடிப்புகள் இருந்து வருவதை நாம் காணலாம். இயற்கையாக நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து நெருப்பின் பயனைக் கற்றுக் கொண்டான். மேலும், ஒளி வெப்பம் ஆகியவற்றின் ஆற்றலை அறியத் தொடங்கினான். காலப்போக்கில் மனிதன் சுட்ட செங்கற்களைச் சுண்ணாம்புப் பொருள்களைக் கொண்டு கட்டடங்கள் கட்டத் தொடங்கினான். அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று பல மாடிக்கட்டடங்களாக உருப்பெற்று வருவதை நாம் காணலாம்.

இன்றைய உலகில் இருக்கும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. இந்தத் தேவையை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒன்று தனிமனிதனின் தேவை ஆகும். இது ஒருமனிதனின் எண்ணம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. தனிமனிதனின் தேவைதான் இவ்வுலகில் முதலிடத்தைப் பெறுகிறது. இது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தத் தேவை நிறைவேறுவதைப் பொருட்டுத் தனிமனிதனின் வாழ்க்கை முறை அமைகிறது.

தனிமனிதனின் தேவைகளைப் போல் சமுதாயத்திற்கென்று சில தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகள் ஒரு சமுதாயம் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவக் கூடியனவாக இருக்கவேண்டும். அவற்றுள் முதல் தேவையாக இருப்பது
கல்வி அறிவைப் பெறுவதே ஆகும். காலத்திற்கு ஏற்ற மிகப் பொருத்தமான கல்வியைப் பெற்ற சமுதாயம் மிகவும் வேகமான வளர்ச்சியைப் பெறுகிறது.

கல்வியறிவு ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்கிறது. அதனால் கல்விமுறையில் சமூக மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் கட்டாயம் அமைய வேண்டும். இவை அச்சமுதாயத்தைச் சார்ந்த முன்னோர்கள் சேர்த்துவைத்த அரிய செல்வங்கள் ஆகும். இவற்றைத் தொடர் நடவடிக்கைகளாகச் சமுதாயம் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவற்றை அச்சமுதாயம் கைவிடக்கூடாது. அப்படிக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டால் காலப்போக்கில் அச்சமுதாயம் தனக்கு உரிய அடையாளத்தை இழந்துவிடும். இக்கூறுகளைப் பெறுகின்ற சமுதாயமாக அமையாவிட்டால் அந்தச் சமுதாயம் அறிவை மட்டும் பின்பற்றுகின்ற சமுதாயமாகத்தான் அமையும்; பண்பும் கனிவும் மிக்க சமுதாயமாக அமையாது.

எனவே, வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இன்றைய இயந்திர உலகில் அழியாச் செல்வமாக இருக்கக் கூடிய கல்விச் செல்வத்துடன் பண்பாட்டுச் செல்வத்தையும் கட்டாயம் ஊட்டி வளர்க்க வேண்டும். இப்படி வளர்த்தால் ஒரு நாடு தலைசிறந்த நாடாக விளங்க முடியும். இவற்றால் அந்நாடு படிப்படியாக வளர்ச்சி அடைந்து காலப்போக்கில் நிலைத்த வளமுடைய பொருளாதாரத்தைப் பெறமுடியும்.


வினாக்கள்

21. மனிதர்களின் இடைவிடாத் தேவைகளை நிறைவேற்றுபவை
யாவை?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

22. ஆதிமனிதன் தன் தேவைகளை எப்போது அறிந்து
கொண்டான்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

23. கல்விமுறை ஒரு சமுதாயத்திற்கு எப்போது பயன்மிக்க
ஒன்றாக அமையும்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

24. ஒரு சமுதாயம் எப்போது முழுமைபெற்ற சமுதாயமாக
அமையும்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



சொற்பொருள்

கீழ்க்காணும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை எழுதுக.


25. ஆற்றலை ______________________
26. மாறுபடுகிறது ______________________
27. பொருத்தமான ______________________
28. உரிய ______________________
29. கட்டாயம் ______________________




கட்டுரை எழுதும் பயிற்சி


கீழ்க்காணும் தலைப்பில் 170 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை ஒன்று எழுதுக.

1. இணைப்பாட நடவடிக்கைகளால் மாணவர்கள் அடைந்துவரும்
நன்மைகளை விளக்கிக் கட்டுரை ஒன்று எழுதுக.


அமைப்பு முறை

கட்டுரை முன்னுரை, பொருள் பகுதி, முடிவுரை என்ற அமைப்பில் அமைந்திருக்க வேண்டும்.

முன்னுரையில் கட்டுரையின் தலைப்பின் விளக்கமும் நோக்கமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பொருள்பகுதியில் இணைப்பாட நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் அடைந்துவரும் நன்மைகள் பற்றிய விளக்கம் இடம்பெறவேண்டும்.

முடிவுரையில் எழுதிய அனைத்துக் கருத்துகளின் சுருக்கம் இடம்பெற வேண்டும்.

முன்னுரை (மாதிரி அமைப்பு முறை)

மாணவர்களின் நலம் கருதி பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை மாணவர்களின் மனநிலையையும் உடல் நிலையையும் சிறப்பாக வைத்திருக்க மிகவும் உதவி செய்கின்றன. கல்வி ஒன்றே மாணவர்களை முழுமனிதர்களாக மாற்றும் என்று சொல்லமுடியாது. கல்வியோடு இணைப்பாட நடவடிக்கைகளும் சேரும்போது மாணவர்களின் உடலும் உள்ளமும் வலுப்பெறுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை வளர்ச்சி அடைகிறது. மாணவனுக்கும் சமூகத்திற்கும் நன்மைகள் பல ஏற்படுகின்றன. இவற்றை விளக்கி இங்கே எழுதப்போகிறேன்.



விளக்கம்

உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கின்றன. உடல் வலுப்பெறுகின்றது. நோய்நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். நன்றாக உழைக்கலாம், நிம்மதியாக வாழலாம்.


மனத்திற்கு ஏற்படும் நன்மைகள்

மனம் புத்துணர்ச்சி பெறுகின்றது. இணைப்பாட நடவடிக்கைகள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு மிகவும் உதவி செய்கின்றன. மனம் சிறந்த ஓய்வைப் பெறுகின்றது.

சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள்

நல்ல குடிமக்கள் உருவாகுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வார்கள் - சமூகத்தொடர்பை வளர்க்கும்

நாட்டிற்கு ஏற்படுத்தும் நன்மைகள்

இந்நடவடிக்கைகளின் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் உலக நாடுகளில் தனித்தன்மை பெற்றவர்களாக விளங்குவார்கள். இதன் மூலம் நம் நாட்டின் பெருமை உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்
.

முடிவுரை எழுதிய கருத்துகள் அனைத்தையும் சுருக்கமான விளக்கத்துடன் தொகுத்து எழுதவேண்டும்.

தனிமனிதன் சமூகம், நாடு ஆகியவற்றிற்கு ஏற்படும் நன்மைகளைத் தொகுத்து எழுதவேண்டும்.

************************************************************************



Thursday, July 30, 2009

ஒருபக்கக் கதை - கருத்தைக்கூறித் தலைப்பிடுக.

ஒருபக்கக் கதை - கருத்தைக்கூறித் தலைப்பிடுக.


`அப்பா.. . அப்பா இதோ இந்தியச் சாப்பாட்டுக்கடை` என்று வலாகச் சொன்னான் அமுதன். `உன் கண்ணுக்குத்தான் பட்டுன்னு எதுவும் தென்படும்` என்று சொல்லி அமுதனைப் பாராட்டினார் அழகேசன்.

`சரி சரி பேசிக்கிட்டே இருந்தேங்கன்னா வண்டி இந்த இடத்தைத் தாண்டிரும்` என்று கூறினாள் மனைவி மீனா. `ப்ளீஸ் ஸ்டாப்` என்று ங்கிலத்தில் அழகேசன் அன்பாக அந்த வாடகை உந்து வண்டி ஓட்டுநரிடம் கூறினான். அருகில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினர். `நல்ல வேளை இன்னும் ஒரு சிக்னல் இருந்தா மீட்டர் ஒரு வெள்ளி கூடக்காட்டிரும்` என்றான் அமுதன்.

பைகளை எடுத்த மாத்திரத்தில் மூன்றாவது மாடியிலுள்ள உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தனர். விடுதியின் உரிமையாளர் இந்திய முறைப்படி ஏதோ ஒருமொழியில் வணக்கம் கூறி அமரும் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.


மூன்றுநாள் ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு உணவுப்பட்டியலை விரித்தபோது அப்பளம் வந்துவிட்டது. `இது வடநாட்டு அப்பளம் மிளகு சற்றுத் தூக்கலாக இருக்கும் உடலுக்கு நல்லது` என்று அழகேசன் கூறினார்.


`உணவு அரைமணி நேரத்தில தயாராயிரும்` என்று வேலையாள் தமிழில் சொல்லிவிட்டுத் தென்னாட்டு வெங்காய வடகத்தை வேண்டுமளவு அழகிய மூங்கில் கூடையில் வைத்துச் சென்றார். `இது உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்` என்று சொல்லி முடித்தாள் பெற்றோரின் எதிரில் அமர்ந்திருந்த மேனகா.


உணவில் தமக்கு மிகவும் பிடித்த முளைப்பயற்றாலான கூட்டைச் சுவைத்துச் சாப்பிடும்போது பளிச்சென்று நினைவுக்கு வந்தது மினி சூட்கேஸ். அதை அமுதனிடம் கொடுத்து வண்டியில் இருக்கையின் பின்பக்கத்தில் பத்திரமாக வைக்கச் சொன்னாள். இது பற்றி உடனே சொல்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் மீனா.


`என்னங்க.. நம்ம அமுதங்கிட்ட கொடுத்த சூட்கேஸை வண்டியில மறந்து விட்டுட்டோமே அதிலதான நம்ம பாஸ்போட்டும் மீதப் பணமும் இருக்கு, இப்ப என்னங்க செய்றது. வண்டி நம்பரும் தெரியல. மொழி தெரியாத ஊர்ல யார்ட்ட சொல்ல` என்று கண்ணீர் ததும்பக் கூறினாள் மீனா.


`நீ பயப்படாத இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நம்மமொழி தெரிஞ்ச இந்தப் பையன்ட இதப்பத்திக் கேப்போம்` என்று வேலையாள் சொல்லியபோது இருவரின் கனத்த மனத்தைக் கரைத்தது வேலையாளின் றுதல் மொழி.

அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்தபோது இரண்டு மணி நேரம் சென்றதை அறிந்து வருந்தினர். கடையின் அருகில் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தபோது மூன்று வண்டிகள் நிற்காமல் சென்றபின் ஒரு வண்டி வந்து நின்றது. அதைக் கண்டபோது அனைவரின் மனமும் குளிர்ந்தது.


எழுதியவர்: சி. குருசாமி


கதைமாந்தர்கள்

1 அழகேசன் – குடும்பத்தலைவர்

2. மீனா - குடும்பத்தலைவி

3. அமுதன் – மகன்

4. மேனகா - மகள்

5. தமிழ்மொழி தெரிந்த பணியாளர் -
உணவு விடுதி உரிமையாளர்

6 வாடகை உந்துவண்டி ஓட்டுநர்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஒருபக்கக் கதை - மாணவர் பங்கு

1. கதையின் சுருக்கம்

2. கதையிலிருந்து நீ அறிந்துகொண்ட செய்திகள்

3. கதை உணர்த்தும் சமூகப் பழக்க வழக்கங்கள்

4. அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல்

5. கதையில் உன்னைக் கவர்ந்த வரிகள்

6. அந்த வரிகள் உணர்த்தும் செய்திகள்

7. கதையைத் திறனாய்வு செய்யவும்

(வீட்டுப்பாடம்)


தெரிந்துகொள்ளும்
செய்திகள்:

1. எந்தச் சூழலிலும் கவனமாக இருத்தல்

2. பாராட்டும் மனம் பெறுதல்

3. பொறுமையுடன் செயல்படுதல்

4. பாரம்பரியப் பழக்கத்தைப் பின்பற்றுதல்

5. மொழியுணர்வுடன் இருத்தல்

6. தாயுள்ளத்துடன் செயல்படுதல்
7. அவசரத்திலும் நிதானமாகச் செயல்படுதல்

8. பிரச்சினையைச் சமாளிக்கும் திறனறிதல்

9. நேர்மையுடன் செயல்படுதல்


################################################

முக்கியப் படிகள்

1. கதைத் தலைப்பு

2. கதையாசிரியரின் பெயர்

3. திறனாய்வின் விளக்கம்

4. கதைத் தளம் (நடைபெற்ற சூழல்)

5. கதைச் சுருக்கம்

6. கதைமாந்தர்களின் அமைப்பு

7. கதைமாந்தர்களின் பண்பு நலன்கள்

8. கதையின் தொடக்கம் – விளக்கம்

9. கதையின் வளர்ச்சி - விளக்கம்

10. கதையின் உச்சம்

11. கதையின் முடிவு

12. உன்னைக் கவர்ந்த வரிகள்

13. அவற்றின் மூலம் நீ தெரிந்துகொண்டவை

14. ஒப்பீட்டு அணுகுமுறை

15. கதை இன்னும் சிறப்பாக அமைவதற்கு யோசனைகள்

16. திறனாய்வின் முடிவு

தயாரித்தவர்: சி. குருசாமி
***************************************************************

தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

குழுமுறையில் அமைத்துள்ளவைகளில் சில

பொதுவாக இந்தியர்கள் ஒருசிலவற்றைக் குழுமுறையில் (குடும்ப முறையில்) வகைப்படுத்தி உள்ளனர். அவை நவதானியம், நவக்கிரகம், நவராத்திரி, நவரசம், நவமணி போன்றவை கும். நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்பது பொருளாகும்.


நவதானியம் (ஒன்பது வகைத் தானியங்கள்)

மனிதனின் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒன்பது வகையான உணவுப்பொருள்களை நவதானியம் என்று தமிழர்கள் அழைப்பர். இவை இந்திய உணவுமுறைப் பண்பாட்டோடு தொடர்புடையவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றைச் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம். நவதானியம் உடலுக்கு வலுவைத் தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.


அவை: அவரை, உளுந்து, கடலை,
கொள்ளு, கோதுமை, துவரை, நெல்,
எள், பயறு.

நவகிரகம், நவராத்திரி - மக்களின் நம்பிக்கைக்குரியவை.

நவரசம் (ஒன்பது வகை இலக்கியச் சுவைகள்)

நவரசம் என்பது ஒன்பது வகை இலக்கியச்சுவைகளைக் குறிக்கும்.

நம்மிடம் உள்ள மிகப்பழமை வாய்ந்த தொல்காப்பியம் என்ற நூல் எட்டு வகை இலக்கியச் சுவையைக் குறிக்கின்றது. இத்துடன் சாந்தத்தையும் சேர்த்துக்கொள்ளும்போது ஒன்பது வகை இலக்கியச்சுவை தோன்றுகிறது. இச்சுவைகள் மனிதனின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.


நவமணி (ஒன்பது வகை மணிகள்)


மக்கள் விரும்பும் ஒன்பது வகை விலையுயர்ந்த பொருள்களை நவமணி என்று அழைக்கிறோம். அவை மரகதம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம், நீலம்.

நவமணிகளின் சிறப்பினை நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். சிலப்பதிகாரத்தில் நவமணிகளில் இரண்டு முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவை முத்து, மாணிக்கம். இவை இரண்டும் கண்ணகியும் பாண்டிய மன்னனின் மனைவியும் காலில் அணிந்திருந்த சிலம்பினுள் இருந்த பரல்கள் (சிறிய உருண்டைகள்) கும். இவை இரண்டும் சிலப்பதிகாரக் கதையின் ஓட்டத்திற்கும் கதையில் திருப்புமுனை ஏற்படுவதற்கும் மிகவும் பயன்படுகின்றன.


நவமணிகளில் சிலவற்றின் சிறப்பினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியப் பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், இவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியா என்ற பக்கத்தை நாடலாம்.


இவற்றுள் மாணிக்கத்தின் பொதுத்தன்மை







மாணிக்கம் என்பது பூமியிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள் (கல்). பொதுவாக இது பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகமாகக் கிடைக்கிறது. பெரும்பாலும் இது சிகப்பு நிறத்திலிருக்கும். புறாவின் இரத்தத்தை ஒத்த நிறத்தை உடைய மாணிக்கக்கல்லை மிகவும் மதிப்பு மிக்க கல் என்று கூறுவர். இது நகைகள் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. நம் நாட்டிலுள்ள நகைக்கடைகள் பலவற்றில் இதனை நாம் காணலாம்.

`கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?` என்ற வினாவினைத் தொடுத்துச் சென்றுள்ளார் கவிஞர் கண்ணதாசன். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.


எழுதியவர்: குருசாமி **************************************************************************************************************************
மாணிக்கம் காணாமல் போகிறான் –
கதை - ரெ. கார்த்திகேசுக்கு நன்றி உரித்தாகுக

கதையின் ஓட்டத்திற்குக் காரணமாக இருப்பவன் மாணிக்கம் என்பவன். இவன் முத்துச்சாமியின் தம்பி. அவருடைய தாய் தந்தையருக்கு இளைய மகன். இவன் எழுதிய கடிதத்தின் மூலம் இவன் மாணிக்கத்தின் தன்மையினைப் பெற்ற உயர்ந்த குணத்தை உடையவன் என்பதை நாம் அறியலாம்.


மாணிக்கம் காணாமல் போகிறான் – விளக்கம்


மலேசியத்திரு நாட்டில் வசிக்கும் சராசரி இந்தியக் குடும்பத்தைப் பற்றிய ஒரு கதை. இக்கதை சராசரி வாழ்க்கைத் தரத்தை உடைய இந்தியக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மலைத்தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவரின் பொறுப்பற்ற வாழ்க்கையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. இது பெற்றோர்களின் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது.

மாணவப் பருவத்தில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை இச்சமுதாயத்திற்கு விளக்குகிறது. பொறுப்பற்ற பெற்றோர் (மலைத்தோட்டத்தில் வசிப்பவர்கள் - எஸ்டேட் வாசிகள்) பிள்ளைகளால் (பினாங்கில் வசிப்பவர்கள் - நகரவாசிகள்) குடும்பத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை எளிமையாக விவரிக்கிறார்.


இச்சிறுகதை பொதுவாக மனிதர்கள் இருக்கும்போது ஒருவரின் சிறப்பினை உணர்ந்துகொள்வதில்லை என்பதையும் இல்லாதபோதுதான் அவரின் பெருமையை உணருவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.


கதாப் பாத்திரங்கள்

முத்துசாமியின் பண்பு நலன்கள்

1. மாணிக்கத்தின் அண்ணன்

(சிறந்த குடும்பத் தலைவன் – முன்னேறத் துடிப்பவன்)

2. அரசாங்கத்தில் மாதச்சம்பளம் பெறும் ஓர் ஊழியன்

3. பொருளாதாரச் சிக்கல் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்

4. குடும்பத்திற்காக இரவு பகல் கடுமையாக உழைப்பவன்

5. தம்பியின் மீதும் குடும்பத்தினரின் மீதும் அதிக அன்பு செலுத்துபவன்

6. மனைவியை விட்டுக்கொடுக்காத மனம் படைத்தவன்

7. குடும்பத்துப் பிரச்சினை நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டும் என்று நினைப்பவன்


8. மற்ற இனத்தவர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை உள்ளவன்

9. பெற்றோரிடம் அன்பாகவும் மதிப்புடனும் பேசும் குணமுடையவன்

10. சராசரி மனிதர்களிடம் உள்ள குறைகளை நினைத்துப் பார்ப்பவன்

கமலாவின் பண்பு நலன்கள்


1. முத்துச்சாமியின் மனைவி (இல்லத்தரசி)
பொறுப்புள்ள குடும்பத்தலைவி

2. மாணிக்கத்தின் மீதும் கணவன் மீதும் அதிக அன்பு செலுத்துபவள்

3. கணவனைப் போல் குடும்பப்பிரச்சினை நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவள்

4. பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும் கொழுந்தனைத் தம் வீட்டில் வைத்துப் படிக்க வைக்க நினைப்பவள்


மாணிக்கத்தின் பண்புநலன்கள்

1. கதை மாணிக்கத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது

2. மாணிக்கக்கல்லைப் போல மதிப்பு மிக்கவன்

3. மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்பவன்

4. செய்த தவற்றை நினைத்து வருந்துபவன்


கதையிலிருந்து வெளிப்படுபவை

1. பொறுப்புள்ள அண்ணன் முத்துச்சாமி

2. பொறுப்புள்ள அண்ணி கமலா

3. மாணவப்பருவத்தை உடைய மாணிக்கம்

4. மலேசிய நாட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தைப் பற்றிய கதை

5. பொறுப்பற்ற தாய் தந்தையர்

6. சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்

7. டிரைவர் பெரியசாமி - சிறந்த குடும்ப நண்பர்

8. கிராணியார் - முத்துச்சாமிக்குத் தெரிந்தவர்

9. காவல் நிலையத்தில் பணிபுரியும் பொறுப்பான கார்ப்பரல்



சிறந்த அமைப்புடைய சூழல்கள்
சில வரிகளுக்கு விளக்கம் அளித்தல்.


மாணிக்கம் அனாக் லெலாக்கி மாடசாமி
(மாணிக்கத்தின் அப்பா மாடசாமி)


``நண்பர்களை எல்லாம் கேட்டுவிட்டேன்
யார்வீட்டிலும் இல்லை. வெள்ளிக்கிழமை
மாலையில் போனவன்.
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை ..``



``இந்தக்காலத்துப் பையன்கள் கோழைகள்.
பரீட்சையில் பெயிலானால் தற்கொலை!
அப்பா அம்மா ஏசினால் தற்கொலை``



``வேலை செய்துகொண்டே படிக்கலாம்.
அதைவிட்டு ஏன் ஓடி ஒளியவேண்டும்?
என்முகத்தில் விழிக்கமுடியாத அளவுக்கு
நான் அவ்வளவு கொடுமைக்காரனா?``


``தன் வீட்டுக்கதவின் வெளியே சுருட்டுப்
பிடித்தவாறு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர்
அப்பாதான் என்று தெரிந்துவிட்டது.
அவர் பக்கத்தில் அவர்கள் குடும்ப நண்பரான
டிரைவர் பெரியசாமி நின்று கொண்டிருந்தார்.``


``வந்ததில இருந்து இப்படித்தாங்க!
அடுத்தடுத்த வீட்டுச் சீனக் குடும்பங்க
வந்து வேடிக்கை பார்க்குது``


``ஈ.பி.எப். பணம் வந்ததும் ஆயிற்று
என முத்துச்சாமிக்குத் தெரியும்.
பணம் வந்ததும் சில நண்பர்கள் வந்தார்கள்.
குடியுடன் விருந்துகள் நடந்தன.``


``என்னைச் சிறிது காலத்திற்குத்
தேடவேண்டாம் என்று அண்ணனிடம்
சொல்லுங்கள்.ஒருநாள் திரும்பி வந்தால்
விளக்கம் சொல்லுகிறேன். நான் சொல்லாமல்
ஓடிப்போனதால் உங்களுக்கு ஏதும்
சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.``

உங்கள் தம்பி மாணிக்கம்.


வடிவமைப்பு: சி. குருசாமி31.07.2009

Wednesday, July 29, 2009

கதை - மாணவர் பங்கு - முக்கியப் படிகள்

மாணவர் பங்கு

1. கதையின் சுருக்கம்

2. கதையிலிருந்து நீ அறிந்துகொண்ட செய்திகள்

3. கதை உணர்த்தும் சமூகப் பழக்க வழக்கங்கள்

4. அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல்

5. கதையில் உன்னைக் கவர்ந்த வரிகள்

6. அந்த வரிகள் உணர்த்தும் செய்திகள்

7. கதையைத் திறனாய்வு செய்யவும் (வீட்டுப்பாடம்)


கதையிலிருந்து தெரிந்துகொள்பவை

1. எந்தச் சூழலிலும் கவனமாக இருத்தல்

2. பாராட்டும் மனம் பெறுதல்

3. பொறுமையுடன் செயல்படுதல்

4. பாரம்பரியப் பழக்கத்தைப் பின்பற்றுதல்

5. மொழியுணர்வுடன் இருத்தல்

6. தாயுள்ளத்துடன் செயல்படுதல்

7. அவசரத்திலும் நிதானமாகச் செயல்படுதல்

8. பிரச்சினையைச் சமாளிக்கும் திறனறிதல்

9. நேர்மையுடன் செயல்படுதல்


முக்கியப் படிகள்

1. கதைத் தலைப்பு

2. கதையாசிரியரின் பெயர்

3. திறனாய்வின் விளக்கம்

4. கதைத் தளம் (நடைபெற்ற சூழல்)

5. கதைச் சுருக்கம்

6. கதைமாந்தர்களின் அமைப்பு

7. கதைமாந்தர்களின் பண்பு நலன்கள்

8. கதையின் தொடக்கம் – விளக்கம்

9 கதையின் வளர்ச்சி - விளக்கம்

10. கதையின் உச்சம்

11. கதையின் முடிவு

12. உன்னைக் கவர்ந்த வரிகள்

13. அவற்றின் மூலம் நீ தெரிந்துகொண்டவை

14. ஒப்பீட்டு அணுகுமுறை

15. கதை இன்னும் சிறப்பாக அமைவதற்கு நீ கூறும் யோசனைகள்

16. திறனாய்வின் முடிவு

உரிமை: ஆசிரியர் சி. குருசாமி

Tuesday, July 28, 2009

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.


இப்பூமி நீர்வளமும் நிலவளமும் நிறைந்த ஒன்றாகும். தண்ணீர் ஏரி, குளம், ஊற்று, கடல் (1) ___________________________ கிடைக்கின்றது. இவற்றில் கடல் நீர் விரிந்த எல்லையை உடையது. (2)________________________ உப்புத்தன்மை உடையது. இந்நீரில் நிலத்தில் வாழும் உயிரினங்களை (3) ________________ ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இவ்வுயிரினங்கள் நீண்ட காலமாக (4) ______________________________.

இவ்வுயிரினங்களில் மீன்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவற்றைப் பக்குவப்படுத்தி மனிதர்களில் பெரும்பாலோர் உணவுடன் (5) ____________________ உண்ணுகிறார்கள். மீன்கள் மிகவும் சத்துநிறைந்தவை. (6) _____________________ எளிதில் செரிக்கும் தன்மை வாய்ந்தவை. சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் (7) ______________________ மீன்களை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. (8)____________________ கண்பார்வை தெளிவடையும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக (9) _______________ மீன்களிலிருந்து மருந்தும் மாத்திரைகளும் ஏராளமாகத் தயாரிக்கின்றனர். மீன் மாத்திரைகள் தோலில் (10) _____________________ பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. மிகவும் மெலிந்த உடலை உள்ளவர்களுக்கு மீன்மாத்திரைகள் மிகவும் பயன்படுகிறது.




அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

மனிதன் சிறப்புடன் வாழ்வதற்குத் தேவையானவை பல உள்ளன. அவற்றுள் (1) ___________________ கல்வி. இது நம்முடைய பொது அறிவையும் உலக அறிவையும் வளர்ப்பதற்கு மிகவும் (2) _________________ செய்யும். அத்துடன் நாம் (3) __________________ வருமானம் பெறுவதற்கும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். (4) _________________ மற்றவர்களால் திருடமுடியாது. மிகப்பெரிய காட்டாற்று வெள்ளத்தாலும் கடல்நீராலும் இதனை அழிக்கமுடியாது. இது கொடுக்க (5) ____________ வளரும் மிகப் பெரிய செல்வம். இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது கொடுத்தவர்களும் வளர்ச்சி (6) __________________ அதனைப் பெற்றவரும் தொடர்ந்து வளருவர். அதனால்தான் பழங்காலத்திலேயே மன்னர்களும் மக்களும் கல்வியைப் போற்றினர்.

நமக்குத் துன்பம் ஏற்படும்போது (7) ____________ துன்பத்திலிருந்து நம்மைக் காப்பதற்குக் கல்வி பயன்படுகிறது. நாம் நன்றாகச் சிந்தித்துச் செயல்படுவதற்கும் மிகவும் உதவி (8) _____________. இன்றைய உலகில் கல்விக் கூடங்களில் படித்தவர்கள் பட்டத்தைப் பெறுவதோடு பண்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கல்விக் கூடங்களுக்குச் செல்லாமல் பலர் (9)________________ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தையே கல்வியாகக்கொண்டு அவற்றின் மூலம் வாழ்க்கையில் உயர்வு பெறுகிறார்கள். வாழ்க்கை (10) ______________ சக்கரம் முறையாகச் சுற்றுவதற்குக் கல்வி மிகவும் உறுதுணையாக விளங்குகிறது.

Monday, July 27, 2009

கதையும் கருத்தும் – புரிதல்!

கதையும் கருத்தும் – புரிதல்!

முத்துவும் அவருடைய நண்பர்களும் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரே வட்டாரத்தில் வசித்து வந்தனர். அவர்களுடைய பெற்றோர் வறுமையில் வாடினர். அதனால், அவர்களைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தனர். அங்கு முத்து இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து நேர்மையாகச் செயல்பட்டார். எனவே, தொழிற்சாலையின் முதலாளி முத்துவைப் பொருள்களின் தரத்தை முடிவு செய்யும் குழுவில் ஓர் உறுப்பினராக நியமனம் செய்தார். நாளடைவில் முத்துவுக்குப் பதவி உயர்வும் அதிகச் சம்பளமும் கிடைத்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு முத்துவின் முதலாளி விபத்தில் மரணம் அடைந்தார். அதன்பின்னர் முதலாளியின் மகன் கதிரேசன் அத்தொழிற்சாலையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கதிரேசனுக்கு அத்தொழிற்சாலையை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லை. இருப்பினும், அவர் தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்க எண்ணினார்.

கதிரேசன் தன் தொழிற்சாலையில் இளையர்கள் பணி புரிந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார். அதனால், அவர் வயதுமிகுந்த முத்துவையும் அவருடைய நண்பர்களையும் வேலையிலிருந்து நிறுத்தினார். கதிரேசன் புதிய பணியாளர்களை அவ்வேலைக்கு அமர்த்தினார். புதிய பணியாளர்களுக்கு அனுபவம் குறைவாக இருந்ததால் சம்பளம் குறைவாகக் கொடுத்தார்.

முத்துவும் அவருடைய நண்பர்களும் தம் திறமைகள் வீணாகப்போவதை விரும்பவில்லை. அதனால், பக்கத்திலுள்ள தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தனர். கதிரேசனின் தொழிற்சாலையில் உற்பத்தியின் அளவு பெருகியதே தவிர அவை தரத்தில் குறைந்து இருந்தன. பொருள்களை விற்க முடியவில்லை. காலப்போக்கில் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியது. இதனை நடத்துவதற்குக் கதிரேசன் ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அந்நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நண்பனின் உதவியை நாடினார். அவருடைய நண்பர் தொழிற்சாலையை நடத்துவதற்கு வேண்டிய வழிமுறைகளை வழங்கினார்.

கதிரேசன் தம் நண்பரின் ஒத்துழைப்புடன் தொழிற்சாலையில் பல மாற்றங்களைச் செய்தார். அதன்பின்னர் தொழிற்சாலையில் அதிக லாபம் கிடைத்தது. அப்போதுதான் கதிரேசன் ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு அனுபவமும் திறமையும் தேவை என்பதைப் புரிந்து கொண்டார். மேலும், அனுபவம் பெறுவதற்குப் போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.

பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்புக் குறியினுள் எழுதுக. (10 மதிப்பெண்கள்)


Q1 நேர்மையாக உழைத்த முத்துவுக்கு முதலாளி என்ன
கொடுத்தார்?

1 பதவி உயர்வு கொடுத்தார்
2 அதிகச் சம்பளம் கொடுத்தார்
3 அங்கத்தினராக நியமனம் செய்தார்
4 தொழிலாளர்களின் பிரதிநிதியாக நியமனம் செய்தார்

( )


Q2 கதிரேசன் முதலில் எண்ணியது யாது?

1 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டுமென்று
2 தொழிற்சாலையைப் பெரிய நிறுவனமாக்க வேண்டுமென்று
3 தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்று
4 தொழிற்சாலைக்குப் புதிய ஆட்களைச் சேர்க்க
வேண்டுமென்று
( )

Q3 மூத்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச்
செல்லக் காரணம் என்ன?

1 அவர்கள் புதிய சூழலை விரும்பியதால்
2 அவர்கள் வேலையை இழந்துவிட்டதால்
3 அவர்கள் அதிக ஊதியம் பெற நினைத்ததால்
4 அவர்கள் ஆற்றல் பயனற்றுப்போவதை விரும்பாததால்
( )

Q4 தொழிற்சாலை ஏன் நஷ்டம் அடைந்தது?

1 பொருள்களை விற்க முடியாததால்
2 பொருள்களின் தரம் குறைந்திருந்ததால்
3 பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்
4 பொருள்களின் விலை அதிகமாக இருந்ததால் ( )

Q5 கதிரேசனின் பிரச்சினை எப்போது தீர்ந்தது?

1 நண்பன் வருகை தந்தபோது
2 தொழிற்சாலையின் கடன் தீர்ந்தபோது
3 நண்பனின் சொல்லைக்கேட்டு நடந்தபோது
4 தொழிலாளர்களைப் பயிற்சிக்கு அனுப்பியபோது
( )

************************************************************************************************************************************************

Sunday, July 19, 2009

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

`அப்பா.. . அப்பா இதோ இந்தியச் சாப்பாட்டுக்கடை` என்று ஆவலாகச் சொன்னான் அமுதன். `உன் கண்ணுக்குத்தான் பட்டுன்னு எதுவும் தென்படும்` என்று சொல்லி அமுதனைப் பாராட்டினார் அழகேசன்.

`சரி சரி பேசிக்கிட்டே இருந்தேங்கன்னா வண்டி இந்த இடத்தைத் தாண்டிரும்` என்று கூறினாள் மனைவி மீனா. `ப்ளீஸ் ஸ்டாப்` என்று ஆங்கிலத்தில் அழகேசன் அன்பாக அந்த வாடகை உந்து ஓட்டுநரிடம் கூறினான். அருகில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினர். `நல்ல வேளை இன்னும் ஒரு சிக்னல் இருந்தா மீட்டர் ஒரு வெள்ளி கூடக்காட்டிரும்` என்றான் அமுதன்.

பைகளை எடுத்த மாத்திரத்தில் மூன்றாவது மாடியிலுள்ள உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தனர். விடுதியின் உரிமையாளர் இந்திய முறைப்படி ஏதோ ஒருமொழியில் வணக்கம் கூறி அமரும் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.

மூன்றுநாள் ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு உணவுப்பட்டியலை விரித்தபோது அப்பளம் வந்துவிட்டது. `இது வடநாட்டு அப்பளம் மிளகு சற்றுத் தூக்கலாக இருக்கும் உடலுக்கு நல்லது` என்று அழகேசன் கூறினார்.

`உணவு அரைமணி நேரத்தில தயாராயிரும்` என்று வேலையாள் தமிழில் சொல்லிவிட்டுத் தென்னாட்டு வெங்காய வடகத்தை வேண்டுமளவு அழகிய மூங்கில் கூடையில் வைத்துச் சென்றார். `இது உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்` என்று சொல்லி முடித்தாள் பெற்றோரின் எதிரில் அமர்ந்திருந்த மேனகா.

உணவில் தமக்கு மிகவும் பிடித்த முளைப்பயற்றாலான கூட்டைச் சுவைத்துச் சாப்பிடும்போது பளிச்சென்று நினைவுக்கு வந்தது மினி சூட்கேஸ். அதை அமுதனிடம் கொடுத்து வண்டியில் இருக்கையின் பின்பக்கத்தில் பத்திரமாக வைக்கச் சொன்னாள். இது பற்றி உடனே சொல்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் மீனா.

`என்னங்க.. நம்ம அமுதங்கிட்ட கொடுத்த சூட்கேஸை வண்டியில மறந்து விட்டுட்டோமே அதிலதான நம்ம பாஸ்போட்டும் மீதப் பணமும் இருக்கு, இப்ப என்னங்க செய்றது. வண்டி நம்பரும் தெரியல. மொழி தெரியாத ஊர்ல யார்ட்ட சொல்ல` என்று கண்ணீர் ததும்பக் கூறினாள் மீனா.

`நீ பயப்படாத
இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நம்மமொழி தெரிஞ்ச இந்தப் பையன்ட இதப்பத்திக் கேப்போம்` என்று அவர் சொல்லியபோது இருவரின் கனத்த மனத்தைக் கரைத்தது அவனின் ஆறுதல் மொழி.

அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்தபோது இரண்டு மணி நேரம் சென்றதை அறிந்து வருந்தினர். கடையின் அருகில் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தபோது மூன்று வண்டிகள் நிற்காமல் சென்றபின் ஒரு வண்டி வந்து நின்றது. அதைக் கண்டபோது அனைவரின் மனமும் குளிர்ந்தது.

உரிமை: ஆசிரியர் சி. குருசாமி

Sunday, July 12, 2009

அலைபாயும் மனம்

அலைபாயும் மனம்

கோமதி அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள், கதவைத் தட்டும் ஓசை .. வேகமாகச் சென்று கதவைத் திறந்த கோமதிக்குக் காத்திருந்தது அதிசயம்!

அவள் கண் ஓராண்டாகத் தேடிய பெற்றோர். நிழலா நிஜமா என்று யோசித்தாள். மகளின் தலையைத் தடவினாள். வேலைக்குச் செல்லவேண்டும் என்பதை மறந்தாள் கோமதி. ஒருவினாடியில் நினைவுக்கு வந்தது வேலையிடம்

`அம்மா அப்பாவுக்கு வீட்டில் இருக்கும் சாப்பாட்டைக்கொடு, சாயங்காலம் சீக்கிரம் வந்திருவேன்` என்று கோமதி சொல்லியபோது அவளது ஈரக்கூந்தல் வெளியில் செல்லச் சொட்டடித்தது.


மகிழ்ச்சியோடு வாசலில் வந்து வழியனுப்பினர் பெற்றோர். அவசரமாகப் பறந்தாள் வேட்டைக்குச் செல்லும் புலியைப்போல .. அவள் மனமோ மாலை நேர மயக்கத்தை அடைந்தது . . அருகில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்தாள் கோமதி, வண்டி புறப்பட்டது. அடேயப்பா நாள்தோறும் எவ்வளவு பயணப்போராட்டம் என்று அலுத்துக்கொண்டாள் .. அருகில் உள்ளவர் வாயைத்திறந்து கொட்டாவி விட்ட காற்று அவளை நோக்கி வந்தது. நெருங்கி நின்றவளின் மஞ்சள் மணம் அதற்குள் மூக்கிற்குள் பாய்ந்தது.


வேலையிடத்தில் இருப்பதற்கு இருப்பதோ 20 நிமிடங்கள். 10 நிமிடங்கள் பஸ் பயணம் என்று நினைத்துப் பஸ்ஸை நோக்கியபோது பஸ் விரைந்து சென்றது.


வேலை இடத்தை அடைவதற்கு ஒருமணி நேரம் ¬கிவிடும் என்று நினைத்தபோது அந்த மாத அனுமதி நேரம் அவள் மனத்தைத் தேற்றியது.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபோது இளைய மகள் குமுதாவின் அமைதியான வாழ்க்கை கண்முன் வந்தது. ``அம்மா சாப்பிடுங்க சமையல் வேலை எல்லாம் முடிஞ்சிருச்சு என் மாப்பிள்ளையும் பிள்ளைகளும் வர இன்னும் நாலு மணி நேரம் இருக்கிது. நம்ம வெளியே போய்ட்டு வருவோமா .. அம்மா, தம்பி எப்படி இருக்கான் நல்லா படிக்கானா, பக்கத்துவீட்டு பானு எப்படி இருக்கா .. என்றவாறு அவள் அம்மாவின் கையைப் பிடித்து நடந்து சென்றாள்


வீடு திருப்பினாள் கோமதி அவள் கணவரும் வந்தார் அவருக்கு வேண்டியதை உடனே செய்யத் தொடங்கினாள்.

கதை - சி. குருசாமி

ஒரு பக்கக் கதையின் முக்கியக் கூறுகள்.

1. எளிய ஓட்டத்தில் கதை இருக்கவேண்டும்

2. கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கவேண்டும்


3. ஒவ்வொரு காதாப்பாத்திரமும் உயிரோட்டம் உள்ளதாக
இருக்க வேண்டும்


4. பொதுவாக ஓரிரு பிரச்சினைகள் மட்டும் இருக்கலாம்

5. கதை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக
இருக்கலாம்


6. படித்தவுடன் புதிய செய்தியைப் புரிந்துகொள்ளும் திறன்
இருக்கவேண்டும்


7. அன்பு, பாசம், பண்பாடு, நட்பு, கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
கொண்டிருந்தால் நல்லது


8. சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்

9. கதை எழுதப்பட்ட சூழலுக்கும் நாட்டுக்கும் ஏற்ப அந்தக்
கதையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


தயாரித்தவர் - சி. குருசாமி

ஒரு பக்கக் கதையின் முக்கியக் கூறுகள்.

1. எளிய ஓட்டத்தில் கதை இருக்கவேண்டும்
2. கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கவேண்டும்
3. ஒவ்வொரு காதாப்பாத்திரமும் உயிரோட்டம் உள்ளதாக
இருக்க வேண்டும்
4. பொதுவாக ஓரிரு பிரச்சினைகள் மட்டும் இருக்கலாம்
5. கதை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக
இருக்கலாம்
6. படித்தவுடன் புதிய செய்தியைப் புரிந்துகொள்ளும் திறன்
இருக்கவேண்டும்
7. அன்பு, பாசம், பண்பாடு, நட்பு, கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
கொண்டிருந்தால் நல்லது
8. ழமான கதைக் கருவும் இடம் பெறலாம்
9. சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்
10. கதை எழுதப்பட்ட சூழலுக்கும் நாட்டுக்கும் ஏற்ப அந்தக்
கதையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
.


தயாரித்தவர் - சி. குருசாமி

Wednesday, July 1, 2009

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்


சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இது தமிழில் உள்ள காப்பியங்களுள் (தொடர்நிலைச் செய்யுள்) மிகவும் பழமையானது. ஒருகாலத்தில் புலவர்கள் மன்னர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும்தாம் இலக்கியங்களைப் படைத்தனர். அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதனால், இதனைக் குடி மக்கள் காப்பியம் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைப்பர்.

சங்ககாலத்தில் தமிழ்நாடு மூன்று பெரும்பிரிவுகளாக இருந்தது. அம்மூன்று பிரிவையும் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைத்தனர். இதனை முப்பெரும் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இம்முப்பெரும் மன்னர்களின் சிறப்பையும் மக்களின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

இளங்கோவடிகள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காப்பியத்தைத் தொடங்குகிறார். இது மூன்று காண்டங்களை உடையது. இக்காண்டங்களை முப்பது உட்பிரிவுகளாகப் பிரித்துள்ளார். காப்பியத்தின் தொடக்கம் புகார்க்காண்டம்.
புகார்க்காண்டம் சோழமன்னன் சிறப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பு நலன்களையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் இது பாண்டிய மன்னனின் வாழ்க்கை முறையையும் அவனின் அவசரக்குணத்தையும் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் வஞ்சிக் காண்டம். இக்காண்டத்தில் இன்று கேரளா என்று அழைக்கப்படும் சேர மன்னனின் குண இயல்புகளையும் அவனின் வீரச் சிறப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.






Sunday, April 19, 2009

இலக்கியம் – பயிற்சி வினா

இலக்கியம் – பயிற்சி வினா

1 பின்னிணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ள இலக்கியம் – பயிற்சி வினா படித்து அதன் நயத்தினை விளக்கி எழுதுக.

2 பின்னிணைப்பு 2-இல் கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துத் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் கதைக்கரு, நிகழ்ச்சிப் பின்னல், பாத்திரப்படைப்பு, மொழிநயம் முதலியவற்றை விளக்கி எழுதுக.


பூமியைப்புனிதத் தாயென்றும்

புகழ்பெற்ற கங்கையை

அன்னையென்றும் நெடுங்காலமாய்ப்

போற்றி வந்தோம்

நம்மில்லவாழ் அன்னைதனை

என்றென்றும் போற்றுமுகமாய்

எழிலுடன் வணங்கிடவே

எடுத்திட்டோம் அன்னையர் தினம்!


வாழட்டு மன்னையர்புகழ்

வளமானநம் நாடுதனிலென்று

கொட்டிடுவோம் முழவுதனை

எல்லாரும் கேட்டிடவே

வாழ்க அன்னையர்தினம்

வளமான நெஞ்சுதனில் - நம்

இல்லந்தோறுங் கொண்டாடி

இல்லாரு மின்பமடைவோமே !

- குருசாமி





கனியும் மனம்!


அவனுகுள் எழுந்த இந்த மாற்றம், அறுபதைத் தாண்டியபோது, வாழ்க்கையில் சுறுசுறுப்பைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை அமுதன்.

ம்.. எப்பொழுதும் வாழ்க்கையைத் திட்டமிடுதல், உயர்வை எண்ணிப் போராடுதல் இவற்றைத் தவிர எதையும் பார்த்ததில்லை அவன். பிள்ளைப் பருவ உணர்வு அவனைத் தூண்டியது

`வாழ்கையின் இலக்கணம் அமுதன்` இது ஊரார் கூற்று.

கமலா அமுதனின் மனைவி. அன்பிற்கு இலக்கணம் கண்டவள். குடும்பத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவள். கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.

படித்துப் பட்டம் பெற்ற அன்புச் செழியன், ___ய்வுப் பட்டத்தை முடிக்கத் துடிக்கும் அகிலன்.. இவர்களின் வாழ்க்கையோட்டத்தோடும் தன்னைக் கரைத்தவள்தான் அவள் ..

எஞ்சியுள்ள காலத்தையும் இதுபோல் கழிப்போம் என்ற உணர்வு அவளுக்குள் இல்லாமல் இல்லை. அப்பாவி பெண்.. அழுதுகூடப் பார்த்ததில்லை..

படுக்கை அறையில் இருக்கும்போதும் இல்லறப் பணி முடிந்தபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்க மறந்தவள் ...

இன்னும் சொல்லப்போனால் .. அவள் ஓர் ஒளிவிடும் மெழுகு வர்த்தி!
இன்று அவள் மனம் கல்பாறை பனிப்பாறையாக உருகும்போது மகிழ்ச்சி கண்டது.

கமலா.. கமலா .. இனி நாம் இரவில் சேர்ந்து சாப்பிடுவோம்
சப்பாத்தி றினாலும் பரவாயில்லை .. ஒன்றும் நினைக்காதே என்று கூறியபோது அவளுக்குள் ____யிரம் வண்ணச் சிறகுகள்
முளைக்கத்தொடங்கினனந்த வெள்ளத்தில் மூழ்கினாள் .. அமுதன் மடியில் சாய்ந்தாள்

நெஞ்சுக்குள் யிரம் மருத்துவர் சொன்னபோது வாழ்க்கையில் செய்ய மறந்த செயல்கள் மீண்டும் முளைத்தன அவனுக்குள். அய்யகோ என்று அலறினான் அமுதன்.

தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு தாம் வாழும் நாடு நோக்கிப் பறந்தனர் அன்பறியா பிள்ளைகள் ..
கதை சிரியர் -
சி. குருசாமி