Saturday, August 29, 2009

பிரிவோம் சந்திப்போம்

கவிதையைப் படித்த பின்னர் அதில் அமைந்துள்ள கவிநயத்தை விளக்கி எழுதி ஆசிரியரிடம் சரிபார்த்துக்கொள்ளவும்


பட்டம் பெறுவோம்
பாரினில் உயர்வோம்
கூடி மகிழ்வோம்
குற்றம் காணோம்

இல்லறம் இணைவோம்
நல்லறம் புரிவோம்
இன்றுபோல் என்றும்
இணைந்து இருப்போம்

சாதித்து நிற்போம்
சந்ததி தொடர்வோம்

சந்திப்போம் பிரிவோம்
பிரிவோம் சந்திப்போம்!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி



கவிதையைப் படித்த பின்னர் உனக்குப் பிடித்த வரியைத் தேர்வு செய்து அது பிடித்ததற்கான காணங்களை விளக்கி எழுதிய பின்னர் சரிபார்க்கவும்.


அன்பைப் பெருக்கி
ஆற்றலை வளர்த்து
இல்லாமை நீங்கி
ஈன்றோரை மதித்து
உள்ளம் நிறைந்து
ஊருக்கு உதவி
எந்நாளும் சிறந்து
ஏறுபோல் நின்று
பல்லாண்டு வாழ
நெஞ்சார வாழ்த்துகிறது
செயலினை எண்ணி
நம்நிலையம் உங்களை!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment