Tuesday, August 25, 2009

நனைந்த காலம்

கீழ்க்கண்ட பாடலைப் படித்தபின்னர் அதன் கருத்தினையும் நயத்தினையும் எழுதுக.

நனைந்த காலம்

அந்தக் காலம் இந்தக் காலம்
எந்தக் காலம் நம்ம காலம்
சொந்தக் காலம் வந்தகாலம்
சொர்க்கம் தந்த நல்ல காலம்!

சோகம் மறந்த நம்ம காலம்
சொல்லிக்கொள்ளும் இன்பக் காலம்
பள்ளிசென்று பறந்த காலம்
பாசம் நிறைந்த அன்புக் காலம்!

கல்வி வளர்ந்த வசந்தகாலம்
கல்லூரி சென்ற நம்ம காலம்
உள்ளம் செழித்து நனைந்த காலம்
உறவை வளர்த்த இல்லறக் காலம்!
- குருசா

No comments:

Post a Comment