தமிழ் இலக்கியம் - திருக்குறள் – மக்கட்பேறு, விருந்தோம்பல் பற்றிய விளக்கம்
உதவிய நூல்களுக்கு நன்றி உரித்தாகுக.
1. திருக்குறள்
மக்கட்பேறு (மக்கள் செல்வம்)
அதிகார விளக்கம்
நன்மக்களால் அடையும் இன்பமும்
பயனும் பிறவும் பற்றிப் பத்துப்பாடல்களில் தெளிவாகத் திருவள்ளுவர் விளக்குவதால்
இவ்வதிகாரம் மக்கட்பேறு அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது.
குறள்
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை
அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற (61)
பொருள்
பெறுமவற்றுள் - ஒருவன் பெறுகின்ற
செல்வங்களுள்
அறிவு - அறியவேண்டுவனவற்றை
அறிந்த - அறியக்கூடிய
மக்கட்பேறு - சிறந்த மக்களைப்
பெறுதல்
அல்ல - அல்லாமல்
பிற - மற்ற செல்வங்களை
யாம் அறிவதில்லை – யாம் அறிந்திருக்கவில்லை
விளக்கம்
ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள்
அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்ற செல்வங்களை
யாம் மதிப்பது இல்லை
குறள் 2.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம்
மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (64)
பொருள்:
அமிழ்தினும் - அமிழ்தத்தினைவிட
ஆற்ற – மிகவும்
இனிதே - இனிமையானதாக இருக்கும்
தம் - தமது
மக்கள்- குழந்தைகள்
சிறு - சிறிய
கை- கைகளால்
அளாவிய-கலைக்கப்பட்ட
கூழ்-சோறு
விளக்கம்
தமது மக்கள் சிறுகைகளால் பிசைந்த
சோறானது சுவையான அமிழ்தத்தினையும்விட மிகவும் இனிமையானதாக இருக்கும்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி
அவையத்து
முந்தி யிருப்பச் செயல் (64)
ஈன்ற பொழுதின் பெதிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேடட தாய் (69)
மக்கட்பேறு
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் குறள் 67
பொருள்
தந்தை - தகப்பனார்
மகற்கு - தனது மகனுக்கு
ஆற்றும் - செய்ய வேண்டிய
நன்றி - நன்மையான கடமை (எது
என்றால்)
அவையத்து - கற்றோர் இருக்கும்
சபையில்
முந்தி - சிறப்பாக முற்பட்டு
இருப்ப – இருக்குமாறு
செயல்-செய்வதாகும்
தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய
நன்மை எதுஎன்றால் கற்றவர் நிறைந்த சபையில் அவரினும் சிறப்புற்று
முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும். அதாவது தந்தையின் கடமை
என்னவென்று சொல்வோமானால் அறிஞர்கள் நிறைந்த சபையில் சிறப்புப் பெறுமாறு மகனை
உண்டாக்குவது ஆகும்.
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
பொருள்.
இல் இருந்து – இல்லற வாழ்க்கையில்
இருந்துகொண்டு
ஓம்பி - பொருள்களைக் காத்து
வாழ்வது – வாழ்கின்றது
எல்லாம் - எல்லாம்
விருந்து – விருந்தினரை
ஓம்பி - போற்றிப் பேணி
வேளாண்மையை - உதவியை
செய்தல் - செய்யும்
பொருட்டு - காரணத்திற்கே ஆகும்
கருத்து
இல்வாழ்க்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து
வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்தற்
பொருட்டே ஆகும்.
நன்றி - உரையாசிரியர் வீ. முனிசாமி
விருந்தோம்பல்
பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம்
என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார் - குறள் 88
பொருள்
விருந்து ஓம்பி வேள்வி
தலைப்படாதார் - விருந்தினரைப் பேணி அவருக்கு
வேண்டிய
உயர்ந்த உணவை
விரும்பிப்
படைக்காமல் இருப்பவர்
பரிந்து ஓம்பி
பற்று அற்றேம் என்பர் - அந்த
தர்மகாரியங்களுக்குச்
செலவிடவேண்டிய பொருளை
நிலையான பொருள் என்று
பாதுகாத்துப் பின்பு இழந்து
விட்டதனால் இன்று எனக்கு
எந்தப் பற்றுக்கோடும் இல்லை
என்று வருந்துவர்
கருத்து
அறிவற்றவர்கள் விருந்தினரைப் பாதுகாத்து அந்த வேள்வியின் மூலம் கிடைக்கக்
கூடிய நற்பயனை அடையமாட்டார்கள். அவர்கள் பொருளை வீணே காத்துவைப்பர். பின்னர்
அப்பொருளை இழந்து ஆதரவற்றவர்களாக ஆகிவிடுவர். அதனால், அவர்கள் வருந்தும் நிலை
ஏற்படும்.
விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு குறள் 89
உடைமையுள் இன்மை
விருந்துஓம்பல் ஓம்பா
மடைமை - செல்வம்உடைய காலத்திலும் வறுமை
என்று சொல்வது
விருந்தினரை
புறக்கணிக்கும் தன்மை
அறிவற்ற தன்மை
ஆகும்.
மடமை மடவார்கண் உண்டு - அது அறிவற்றவர்களிடத்தில்
இருக்கிறது.
கருத்து:
செல்வ நிலையிலும் உள்ள வறுமை
என்பது, விருந்தினரைப்
போற்றிப் பாதுகாக்காத அறியாமை
ஆகும். இத்தன்மை
அறிவுடையவர்களிடம் உண்டாகாது.
அறிவற்றவர்களிடம் மட்டும்
இருக்கும்.
விளக்கம்:
ஒருவர் செல்வம் நிறைந்திருக்கும்
காலத்திலும் விருந்தினரை
உபசரிக்காமல் இருப்பது வறுமையை
உடையவராக
இருப்பதற்குச் சமமாகும். இத்தகைய
நிலைமை
அறிவுடையவர்களிடம் ஏற்படாது.
வறுமை அறிவற்றவர்களிடம்
தோன்றும்.
தயாரித்தவர்
ஆசிரியர். சி. குருசாமி