Saturday, September 24, 2011

பாடலின் கருத்தை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடுக.

பக்குவம் பெற்றிட

வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்
வீர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்
தம்மிடம் இருப்போர்த் தழுவிச் செல்லும்
தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!

எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்
மாறாமனித நேயம் இருந்திட வேண்டும்
பணிபல முடிந்திடினும் பார்போற்றி வந்திடினும்
பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!

உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம் வேண்டும்
தத்துவ மறிந்திடினும்மனத் தத்துவம் உணர்ந்திடவேண்டும்
உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்த கொள்கைதனை
வகுத்தொளிவின்றி உயர்ந்துநின்றிடவேண்டும்
-கவிமொழி
வாக்கியத்தில் எழுதவும் (அகராதியைப் பயன்படுத்தவும்)

1. இறுக்கி
___________________________________________________
___________________________________________________
2. சுருக்கி
__________________________________________________
__________________________________________________
3. பெருக்கி
__________________________________________________
__________________________________________________
4. உருக்கி
_________________________________________________
_________________________________________________
5. கிறுக்கி
_________________________________________________
_________________________________________________