Tuesday, July 28, 2009

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.


இப்பூமி நீர்வளமும் நிலவளமும் நிறைந்த ஒன்றாகும். தண்ணீர் ஏரி, குளம், ஊற்று, கடல் (1) ___________________________ கிடைக்கின்றது. இவற்றில் கடல் நீர் விரிந்த எல்லையை உடையது. (2)________________________ உப்புத்தன்மை உடையது. இந்நீரில் நிலத்தில் வாழும் உயிரினங்களை (3) ________________ ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இவ்வுயிரினங்கள் நீண்ட காலமாக (4) ______________________________.

இவ்வுயிரினங்களில் மீன்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவற்றைப் பக்குவப்படுத்தி மனிதர்களில் பெரும்பாலோர் உணவுடன் (5) ____________________ உண்ணுகிறார்கள். மீன்கள் மிகவும் சத்துநிறைந்தவை. (6) _____________________ எளிதில் செரிக்கும் தன்மை வாய்ந்தவை. சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் (7) ______________________ மீன்களை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. (8)____________________ கண்பார்வை தெளிவடையும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக (9) _______________ மீன்களிலிருந்து மருந்தும் மாத்திரைகளும் ஏராளமாகத் தயாரிக்கின்றனர். மீன் மாத்திரைகள் தோலில் (10) _____________________ பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. மிகவும் மெலிந்த உடலை உள்ளவர்களுக்கு மீன்மாத்திரைகள் மிகவும் பயன்படுகிறது.




அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

மனிதன் சிறப்புடன் வாழ்வதற்குத் தேவையானவை பல உள்ளன. அவற்றுள் (1) ___________________ கல்வி. இது நம்முடைய பொது அறிவையும் உலக அறிவையும் வளர்ப்பதற்கு மிகவும் (2) _________________ செய்யும். அத்துடன் நாம் (3) __________________ வருமானம் பெறுவதற்கும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். (4) _________________ மற்றவர்களால் திருடமுடியாது. மிகப்பெரிய காட்டாற்று வெள்ளத்தாலும் கடல்நீராலும் இதனை அழிக்கமுடியாது. இது கொடுக்க (5) ____________ வளரும் மிகப் பெரிய செல்வம். இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது கொடுத்தவர்களும் வளர்ச்சி (6) __________________ அதனைப் பெற்றவரும் தொடர்ந்து வளருவர். அதனால்தான் பழங்காலத்திலேயே மன்னர்களும் மக்களும் கல்வியைப் போற்றினர்.

நமக்குத் துன்பம் ஏற்படும்போது (7) ____________ துன்பத்திலிருந்து நம்மைக் காப்பதற்குக் கல்வி பயன்படுகிறது. நாம் நன்றாகச் சிந்தித்துச் செயல்படுவதற்கும் மிகவும் உதவி (8) _____________. இன்றைய உலகில் கல்விக் கூடங்களில் படித்தவர்கள் பட்டத்தைப் பெறுவதோடு பண்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கல்விக் கூடங்களுக்குச் செல்லாமல் பலர் (9)________________ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தையே கல்வியாகக்கொண்டு அவற்றின் மூலம் வாழ்க்கையில் உயர்வு பெறுகிறார்கள். வாழ்க்கை (10) ______________ சக்கரம் முறையாகச் சுற்றுவதற்குக் கல்வி மிகவும் உறுதுணையாக விளங்குகிறது.

No comments:

Post a Comment