பழுது
பார்ப்போரெல்லாம் பழுது அல்லர்
பழகுவோரெல்லாம் நற்பழமும் அல்லர்
பழகும்போது தெரிவதில்லை தீயோர்
பல்லைக் காட்டிப் பழகிடுவாரே!
பார்த்துப் பழகிடல் வேண்டும்
பழுதுநிறைந்த உளம் உடையோரிடம்
பாழும் நிலைக்கு செல்லாமல் இருக்கவே
பாரினில் பார்த்துப் பார்த்துப் பழகவேண்டும்!
பார்த்துப் பார்த்துப் பழகினாலும்
பாழ்மனம் கொண்டோர் தெரிவதில்லை
பதுங்கியிருப்போரைக் காண்பது அரிதே
பார்த்துச் சீர்தூக்கிப் பழகிடவேண்டும்.
No comments:
Post a Comment