யானை
காட்டுக்குள் ஒரு யானை
கரியநிற யானை தானே
பாட்டுக்குள் ஒரு யானை
பாரதி வென்றிட்டார் அதனை
ஓட்டுக்குள் ஒரு யானை
ஒளியைத் தேடியவர் தொலைத்தார்
பட்டணம் சென்று வந்தாரே
பட்டனத்தார் என்ற அடிகள்!
வீட்டுக்குள் ஒரு யானை
விலகிச் சென்றால் அழியும்
மனக் கூட்டுக்குள் ஒருயானை
மதம்பிடிக்காமல் காத்திடுவோமே!
சி.கு
No comments:
Post a Comment