Tuesday, December 21, 2021

 

                யானை

காட்டுக்குள் ஒரு யானை

கரியநிற யானை தானே

பாட்டுக்குள்  ஒரு யானை

பாரதி வென்றிட்டார் அதனை


ஓட்டுக்குள் ஒரு யானை 

ஒளியைத் தேடியவர் தொலைத்தார்

பட்டணம்  சென்று வந்தாரே

பட்டனத்தார் என்ற அடிகள்!


வீட்டுக்குள் ஒரு யானை

விலகிச் சென்றால் அழியும்

மனக் கூட்டுக்குள் ஒருயானை

மதம்பிடிக்காமல் காத்திடுவோமே!

                                                                       சி.கு



No comments:

Post a Comment