அன்புள்ள பாபு
வணக்கம். நீ நலமாக இருக்கின்றாயா? உன் நண்பர்கள் நலமா?
உன் கடிதம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தேர்வு தொடங்கப்போகிறது.
அதனால்தான் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.
நானும் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி என்னுடைய பெற்றோரிடம்
கருத்துக் கேட்டுள்ளேன். அதோடு என் மாமாவிடமும் கருத்துக் கேட்டுள்ளேன். என்னுடைய
நண்பர்களிடம் கேட்டுள்ளேன். என்னுடைய
ஆசிரியரிடமும் சில வழிகளைக் கேட்டுள்ளேன். அவர்கள் சில வழிகளை எனக்குச்
சொன்னார்கள். அவை நிச்சயமாக எனக்கு உதவிசெய்யும்.
இறுதியாக நான் அறிவியல் துறையில் (மருத்துவத்துறை, ஆசிரியர், எழுத்தர், விளையாட்டு வீரம், இராணுவத்துறை, ஆராய்ச்சியாளர், பேராசிரியர்)
அதற்கு உரிய புத்தகங்களை அவ்வப்போது படித்துவருகிறேன். புத்தகங்களின் மூலம்
புதிய செய்திகளைத் தெரிந்துவருகிறேன். அச்செய்திகளில் சந்தேகம் வந்தால் என்னுடைய
பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை என்னுடைய பெற்றோருக்குச் சந்தேகம்
இருந்தால் அவர்களுடைய நண்பர்களிடம் கேட்டு எனக்கு வழிகாட்டுவார்கள்.
இதனால் எனக்குச் சில யோசனைகள் வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றி அதற்குரிய
பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன்.
இவற்றின் மூலம் என்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும்
என்று நம்புகிறேன்.
எனக்குப் பதில் எழுதவும்.
நன்றி
No comments:
Post a Comment