Monday, August 14, 2023

 வாக்கியம் (சொற்றொடர்) 

விளக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கருத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாகப் புரியவில்லை என்றாலும் அதனை வாக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாறும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் சொல்லாகவும் கொள்ளலாம்.


கருத்துமாறா வாக்கியங்கள்

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கருத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன் பொருள் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பள்ளம் இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்குக் காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 



No comments:

Post a Comment