Wednesday, November 24, 2021

              என்ன கவலையோ!


இப்படியொரு கவலையா உனக்கு 

அப்படியென்ன கவலை தெரியலையே 

நெஞ்சில் ஓடுதோ  ஆயிரம் 

நினைவில் வந்து முட்டுதோ!


அம்மா உனக்குப் பால்கொடுகலயா 

அப்பா தோளில் சுமக்கலயா

அண்ணன் வந்து விளையாடலையா

அக்கா அதட்டி தூங்கவைக்கலையா


பாட்டி உனைத்தட்டிக் கொடுக்கலையா  

பாசம்காட்டி இன்று கொஞ்சலையா

 தாத்தா நன்குதள்ளிச் செல்லலையா 

தாவிநீயும் எழுந்து அமர்ந்தாயே! 


தூக்கம் போய்விடும் பேராண்டி

தூள்ளித் திரிந்திடு காலையிலே

கனவில் வந்ததை மறந்துவிடு

காற்றில் அதனை மிதக்கவிடு


எல்லாம் மறைந்திடும் உனைவிட்டு

எழுந்து நின்று விளையாடுவாய் 

ஏக்கத்தை நீயும்தொலைத் திடுவாய் 

எனதருமைப் பேராண்டி நீயே!!

                                                           - சிகு







No comments:

Post a Comment