Wednesday, November 17, 2021

 

கதையும் சிந்தனையும்   

ராசி

 

``அப்பா அப்பா இதைப் பாருங்க. எப்படி ஆயிடிச்சுன்னு’’ என்று சொல்லியபடி  மீனா அவளுடைய அப்பாவைப் பார்த்தாள். என்னமோ ஏதோ என்று பதறிய அப்பா, மீனாவைப் பார்த்து ``என்னடா இதை உடைச்சுட்ட, இதுதான் ராசியானதுன்னு அடிக்கடி சொல்வ. ஏன் இப்படிச் செய்த, தரையில் வைத்து அழுத்தியதுபோல இருக்கு நாளைக் காலையில் உனக்குத் தேர்வு இருக்கு. அப்ப என்ன செய்வ?’’ என்று கோபத்துடன்  கேட்டார்.  

 

``அப்பா நான் சொல்ரத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இதை நான் உடைக்கல அப்பா, நம்ம’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது  `கொர் கொர் என்று ஒரு சத்தம் மீனாவின் நாற்காலிக்கடியில் இருந்து வந்தது. அந்த ஒலியைப் கேட்ட அப்பா,``நாற்காலிக்கடியில் ஏதாவது வந்து படுத்திருக்கா’’ என்று மீனாவிடம் கேட்டார். ``அதெல்லாம் இல்லப்பா, நம்ம குட்டித்தம்பிதான் பயத்தில நாற்காலிக்கடியில ஒழிஞ்சான். கொஞ்சநேரத்தில தூங்கிட்டான் போல’’ என்று சொல்லி முடித்தாள் மீனா.

 

இவை எல்லாம் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்த  மீனாவின் அம்மா ருக்குவின் காதுக்குக் கேட்டது. அவர் வேகமாகச் சமையல் அறையிலிருந்து வெளியே வந்து, ``பரவாயில்லை மீனா உனக்கு ராசியான மற்றொன்று தருகிறேன், பயப்படாதே, கொஞ்சம் பொறு. நான் கொடுக்கிறத இப்பப் பயன்படுத்திப் பாரு’’ என்று சொல்லிக்கொண்டே புத்தக அறைக்குள் சென்றார்.  அவர் வெளியில் வந்ததும் இது மிகவும் ராசியானது. என்னுடைய உயர்வுக்கெல்லாம் காரணமாக இருந்தது’’ என்று சொல்லி முடித்துவிட்டு  சமைப்பதற்குச் சமையலறைக்குள் மீண்டும் சென்றார்.  

 

இப்பகுதியில் இருந்து நீ தெரிந்துகொண்ட செய்திகள் யாவை?

 

 

 

 

 

 

 

 










தேர்வு முடிந்தவுடன் மீனா மலர்ந்த முகத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். அவளைக் கண்டதும் நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனாள் ருக்கு. மகளின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது அவளுக்குத்தான் தெரியும். மீனாவைப்  பக்கத்தில் அமரச் செய்தார் ருக்கு. அவர் மீனாவைப் பார்த்து, ``நான் உனக்குக் கொடுத்தது நேற்றுக் காலையில்தான் கடையிலிருந்து வாங்கி வந்த பேனா’’ என்று கூறி முடித்தார். மீனாவின் மனத்திலும் அருகிலிருந்த மீனாவின் அப்பாவின் மனத்திலும் பல புதிய மாற்றங்கள் தோன்றின. அவர்கள் அப்போதுதான் மனமே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொண்டனர். 

 

 (சொற்களின் எண்ணிக்கை 203)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

நீதிக்கருத்து: நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது நம்முடைய பண்புகளில் ஒன்று.   


No comments:

Post a Comment