Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

கொழுக்கட்டை

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். சில வருடங்களில் ஐந்தாயிரம் வெள்ளியைச் சேமித்தார். அதனைக் கொண்டு ஒரு பலகாரக்கடையைத் திறந்தார். அவருடைய பலகாரக்கடையில் கொழுக்கட்டை செய்பவர் ஒருவர் இருந்தார். அவர் செய்யும் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருந்தது. அதனால் அதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

மாதவன் புதிதாக மற்றொரு பலகாரக்கடையைத் தொடங்கினார். இதன்மூலமும் அதிகமான வருமானம் கிடைத்தது. மாதவன் பக்கத்து ஊர்களிலும் கடைகளைத் தொடங்கினார். அவருக்கு வியாபாரம் சூடுபிடித்தது. அழிந்துவரும் பண்பாட்டுப் பலகாரம் மக்கள் மத்தியில் மீண்டும் தனி இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. மாதவனுக்கு அதிக இலாபம் கிடைத்தது. ஒருமுறை மாதவன் அவருடைய ஊரில் கொழுக்கட்டைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அத்திருவிழாவில் கொழுக்கட்டைக்குள் ஒரு தங்கக் காசை வைத்து மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

அன்று நடைபெற்ற கொழுக்கட்டைத் திருவிழாவின் மூலம் மாதவனின் வியாபாரம் மேலும் பெருகத்தொடங்கியது. காலப்போக்கில் அவர் ஒரு பணக்காரர் ஆனார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத்தொடங்கினார். அவருடைய ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டினார். அதில் மாணவர்கள் படிப்பதற்குக் கட்டணம் வாங்கவில்லை. பத்து ஆண்டுகளில் அந்த ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த ஊர்மக்களுக்கு வருமானமும் கூடியது. மாதவனின் பேரும் புகழும் பரவியது. 

 (சொற்களின் எண்ணிக்கை 130)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

பிறர் வாழ்வில் அக்கறை செலுத்தும்போது மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

பயிற்சி வினாக்கள் 

தொடக்கவரிகளைக் கொண்டு கதை ஒன்று உருவாக்குக.

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இக்கதையில் இருந்து அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment