Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்


முன்னேற்றம்

முல்லை ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி. பெற்றோர்கள் தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். முல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்துகொண்டாள். அதனால், பெற்றோர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வாள்.

முல்லை, அவளுடைய அன்றாடச் செலவுகளைச் சுருக்கிக்கொள்வாள். அவளுடைய பாடங்களில் முழுக் கவனமும் செலுத்தி வந்தாள். அவளுடைய பெற்றோர்களும் நண்பர்களும் முல்லையின் நடத்தையைப் பாராட்டி வந்தனர். முல்லை உயர்நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாள். அவளுடைய பெற்றோர்களிடம் அவளைத் தொடர்ந்து படிக்கவைப்பதற்குப் போதிய பணம் இல்லை. அதனால், அவளுடைய படிப்பைத் தொடரமுடியவில்லை. அதனை அவளுடைய தோழியின் மூலம் ஆசிரியர்கள் புரிந்துகொண்டனர்.

ஆசிரியர்கள் ஒருநாள் முல்லையைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துவருமாறு அவளுடைய தோழியிடம் கூறினர். முல்லை ஆசிரியர்களை வந்து சந்தித்தாள். அவர்கள் முல்லையிடம் அரசாங்க உபகாரச் சம்பளத்தைப் பற்றியும் பிற அமைப்புகள் செய்து வரும் உதவிகளைப் பற்றியும் எடுத்துக்கூறினர். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றிய முல்லை, இன்று ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

(சொற்களின் எண்ணிக்கை 111)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.


No comments:

Post a Comment