மெல்லத் தவழும் தென்றல்
மெல்லத் தவழும் தென்றல்
மேனியில் மிதந்திடும் தென்றல்
பள்ளம் பாரா தென்றல்
பதுங்கிச் செல்லா தென்றல்!
தின்னும் கரும்பே தென்றல்
தெவிட்டா இன்பமே தென்றல்
பள்ளிப் பருவத் தென்றல்
பவளம் போன்ற தென்றல்!
மனத்தின் இன்பமே தென்றல்
மகிழ்ச்சி அளித்திடும் தென்றல்
பண்பைக் காட்டிடும் தென்றல்
பாசத்தின் பிணைப்பே தென்றல்!
குற்றாலம் கொடுத்திடும் தென்றல்
குளிரில் மிதந்திடும் தென்றல்
தமிழாய் நின்றிடும் தென்றல்
தரணியெங்கும் மிதந்திடும் தென்றல்!!
-சிகு
No comments:
Post a Comment