மற்றவர் காண!
கணக்கற்ற வடிவத்தைக் காட்சிப்படுத்தி
மனத்திரையில் பதிந்ததை மற்றவர்காண
பொறுப்பில் உள்ளோர் புகழினைப் பரப்ப
என்றும் அழியா அற்புத வடிவமாக்கி
எண்ணத் திரையில் விண்ணைப் பதித்தனர்
வண்ணத் திரையில் வாழ்வைக் காட்டினர்
கடுகளவைக் கடலளவாய்க் காட்டிடும் உலகில்
கடலளவைக் கடுகளவாய் காட்டி நின்றனரே
நெற்றிவியர்வை
தனில்நிலம் குளித்திட
கல்லனைத்தும் காட்சியாக்கி
கற்பனையை வடிவமாக்கி
பல்வன் படைத்து தமிழரை உயர்த்தினான்
அங்கமெல்லாம் சோர்ந்தாலும் என்றும் அயர்வதில்லை மனத்தாலே
நன்றி கொண்ட மனம்வேண்டும் என்பதை நமக்குக் காட்ட
நல்முத்திரையாக்கி நிலைக்க வைத்தனரே
வாழ்வோர் அறிந்திட வகைவகையாய்
படைத்தனரே முத்திரை வடிவில்
காட்சியாகப் படைத்தனரே அச்சுதனில்
ஊற்றை பெருகச் செய்து கொடுக்கும் சரித்திரம்தனை
No comments:
Post a Comment