விதையும் விருச்சமும்
விதையில்லாமல் விருச்சம் ஏது
வினையில்லாமல் விளைவு ஏது
வினையே புவியில் விளைந்து
விண்ணில் கலையாய் மலர்ந்தது!
கடுகளவைக் காற்றளவாக்கிடும் உலகில்
காலமெல்லாம் கற்பனையில் நனைந்து
கற்றதைப் படைத்துக் காட்டிடுவர்
கற்றறிந்த கலைஞர் தானே!
வற்றிய கண்ணும் வடிவத்தைக் கொடுத்திட
வற்றாத மனமும் வாழ்வினை அளித்திட
கற்பனைக் கெட்டா அற்புத வடிவம்தனை
கலையாகப் படைத்து வாழ்ந்தனரே!!
எழுதியவர் சி.கு
காட்டியவை மறைந்திடா வண்ணம்
காண்பவர் வாழ்வியல் திறனைக்கற்றிட
முறைமாறா முழுவடி மனைத்தும்
முத்திரை யாக்கினர் மூதறிஞர்களே!
நன்றி செப்புவோம் நாமும் என்றும்
நாம்வாழ வழிசெய்த உழைத்தோர்தமை
ஊருக்குக் காட்டிய உன்னதத் தலைவர்களை
உளம்நிறைய வாழ்த்தி வணங்குவோமே!
No comments:
Post a Comment