தனிநிலை
விடைப் பகுதியைக்
கண்டுபிடியுங்கள்
வினாக்களோடு
தொடர்புடைய தனிப் பகுதிகள்
முதல் பிரிவினர் எதிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் மனச்சோர்வு ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள். அவர்கள் வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
மேலும், முதல் பிரிவினர் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள்.
மேலும், முதல் பிரிவினர் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள்.
இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர். முதல் பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக் கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.
இரண்டாவது பிரிவினர் `நம்மால் எதுவும் செய்ய முடியாது` என்று நினைத்து வருத்தப்படுபவர்கள். இவர்கள் தங்களின் தலைவிதி தானாக மாறாதா? என்றும் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறோம் என்றும் நினைத்து மிகவும் வருத்தப்படுவர்.
மேலும், இரண்டாம் பிரிவினர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்கள் துன்பம் தானாக விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். அதனால், இவர்களைத் தவறான மனப்போக்கினை உடையவர்கள் என்று கூறலாம்.
கபில்தேவ், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு கோடை விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடினான். விடுமுறைக்குப் பின்னர், கபில்தேவின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். அதனால்தான் கபில்தேவ் என்ற விளையாட்டு வீரன் முதல் பிரிவினரோடு ஒப்பிடப்படுகிறான்.
இந்தியக் கிரிக்கட் வீரர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் கபில்தேவ். அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவரின் திறமையைக் குறைவாக மதிப்பிட்ட ஆசிரியர்கள் அவரை விட்டுவிட்டு மற்ற மாணவர்களைக்கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இது அந்த இளைஞனின் மனத்தில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தன் நண்பர்களிடம்,``விளையாட்டில் சாதனைசெய்து காட்டுவேன்” என்று சபதம் செய்தான்.
வினாக்கள்
2.
ஒருவர் எப்போது வெற்றி பெறும்
சூழல்
உருவாகும்?3. வெற்றி பெறுபவர்கள் அடையும்
நன்மைகள் யாவை?
4.
இரண்டாம் பிரிவினர்கள்
எப்படிப்பட்ட
குணத்தை உடையவர்கள்?5. தவறான மனப்போக்கினை
உடையவர்கள் யாவர்?
6.
கபில்தேவின் மனநிலையில்
மாற்றத்தை
ஏற்படுத்திய நிகழ்ச்சி எது?7. கபில்தேவை எந்தப் பிரிவினரோடு
ஒப்பிட்டுக் கூறலாம்? ஏன்?
குழு நிலை
அட்டையில் வரிசைப் படி
ஒட்டுக.
(ஒட்டியபின் வரிசை
முறையை
ஒப்பிட்டுச்
சரிபார்த்தல்)
கருத்தறிதல்
வினாக்களுக்குரிய விடைகளின் தொகுப்பு
இவ்வுலகில்
இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர். முதல்
பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக்
கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.
முதல்
பிரிவினர் எதிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் மனச்சோர்வு
ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள். அவர்கள்
வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும்
பெறுவார்கள்.
இலட்சியமும்
மனித வாழ்க்கையும்
மனிதனின்
பொதுவான மனப்போக்கு இலட்சியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். எனவே, உலகில் வாழும் பெரும்பாலோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்
அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்றே நினைப்பர். இதனை நினைத்தே அவர்களுடைய எதிர்கால
குறிக்கோளை வகுப்பார்கள். நாம் மேற்கொள்ளும் இலட்சியத்தில் தோல்வி அடையாமல் இருப்பதற்கு முதலில் நம்
இலட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும். இதனைப் பற்றிக் கூறவந்த
திருவள்ளுவர்,
``எண்ணித் துணிக
கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு’’
என்று
குறிப்பிடுகிறார். அதாவது, செய்யத்தொடங்கும்
எச்செயலையும் நன்றாக ஆராய்ந்த பின்னரே அதனைத் தொடங்கவேண்டும். அச்செயலைச்
செய்யத்தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது
குற்றமாகும் என்று கூறுகிறார். எனவே, நம்முடைய இலக்கு என்னவென்பதையும் அதனை
அடையும் வழிகள் எவை என்பதையும் பற்றி நன்கு சிந்தித்த பின்னரே அதனை அடையும் செயலில் ஈடுபடவேண்டும் என்பதை இதன் மூலம் நாம்
அறியலாம்.
மு.வரதராசனார்
தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்தார். இறுதியில் அவர் பல்கலைக் கழகத்தில் துணை
வேந்தராகப் பணி ஆற்றினார். மு.வ ஐம்பதுக்கும்
மேற்பட்ட நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். அதனால், என்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும். அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில்
நம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வினாக்கள்
Q1
ஒருவரின் குறிக்கோள் எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?
(4 மதிப்பெண்கள்)
ஒருவரின் குறிக்கோள் எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?
(4 மதிப்பெண்கள்)
Q2
நாம் தோல்வி அடையாமல் இருப்பதற்கு எவற்றைப் பின்பற்றவேண்டும்?
ஒரு செயலில் ஈடுபடும் முன்னர் நாம் செய்யவேண்டிவை யாவை?
(5 மதிப்பெண்கள்)
Q3
(6 மதிப்பெண்கள்)
Q4
இவ்வுலகில் நிலைத்த இடத்தைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?
(4 மதிப்பெண்கள்)
Q5
மு.வ தமிழ்மொழியின் மீது அதிகப் பற்றுக்கொண்டவர்
என்பதை எவ்வாறு அறியலாம்? (6 மதிப்பெண்கள்)
பின்வரும்
சொற்கள் மேற்கண்ட பகுதியில்
இடம்பெற்றுள்ளன.
அச்சொற்களின் பொருளை
விடைத்தாளில்
எழுதவும். (5 மதிப்பெண்கள்)
Q6
|
எதிர்கால -
|
Q7
|
நினைப்பது -
|
Q8
|
ஏற்படவிருக்கும் -
|
Q9
|
சமீபத்தில் -
|
Q10
|
திண்ணம் -
|
தொடர்நடவடிக்கை
நூல்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
சில வினாக்களும்
விடையும்
1
|
மகாகவி பாரதியார் என்பவர்
யார்?
சிறந்த தமிழ்க்
கவிஞர்
|
2
|
பாரதியாரைப் பற்றி
மக்கள் நினைத்த கருத்துகள் இரண்டு கூறு.
முறைப்படி அவர்
பாடவில்லை, தோன்றியதை எல்லாம்
எழுதினார்
|
3
|
பாரதியின் கவிதை
எப்படி இருந்தது?
சொல்லும் சுவையும்
புதிதாக இருந்தன
|
4
|
தாகூரின் பாட்டி
எதில் குறித்து வைத்தார்?
நாட்குறிப்பில்
|
5
|
தாகூரின் சிறப்பு
என்ன?
இரண்டு நாடுகளுக்கு
நாட்டுப்பண் பாடியிருக்கிறார்
|
6
|
தாகூரின்
பாட்டியின் வருத்தத்துக்குக் காரணம் என்ன?
தாகூரின்
எதிர்காலம் பற்றி நினைத்தார்
|
7
|
இறுதியில் வெற்றி
பெறுபவர் யார்?
தன்னை
உணர்ந்துகொள்பவர் அதாவது தன்னைப்பற்றி அலசுபவர்
|
8
|
தாகூரைப் பற்றித்
தெரிந்த செய்தி ஒன்று கூறு.
சிறந்த கவிஞர், நோபல் பரிசு பெற்றவர்,
ஓர் இந்தியர்
|
மீளக்
கற்பித்தல் தொகுப்பு
1
|
பாட
அறிமுகம்
தனிநிலை
– வினாக்களும் விடையும்
|
`உன்னையறிந்தால்’ என்ற தலைப்பில் திரு சுகி சிவம் நம் நாட்டில் ஆற்றிய உரையின் ஒலி-ஒளி (YouTube) காட்சியில் கேட்டவற்றை
அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வினா விடை.
ஆசிரியர் - வினா
விடை
|
|
2
|
தனிநிலை
- விடைகளைக் கண்டுபிடித்தல்
|
துணுக்குகளை
அடிப்படையாக் கொண்டு விடைகளைக் கண்டுபிடித்தல்
|
|
3
|
குழு
நிலை - அட்டையில் வரிசைப்படி ஒட்டிப் படைத்தல்
|
4
|
சுயவிடைக்
கருத்தறிதல் (வினா விடை)
ஒரு வினாவிற்குரிய
விடையைத் தட்டச்சு செய்தல்
|
6
|
தனிநிலை
- தொடர்நடவடிக்கை
|
7
|
கண்டு மகிழ்ந்த
திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, நம் நிலைய மாணவர்கள் தயாரித்த குறும்படம், படித்துத் தெரிந்த கதைப் புத்தகப் பனுவல் ஆகியவற்றில் ஒன்றிற்கு
மட்டும் மாறுபட்ட வினாக்களைத் (ஏன்?,
எதற்கு?,
எப்படி?,
காரணம் என்ன?,
என்னென்ன?,
யாவை?, எதனால்?...) தொகுத்து வருக.
|
முற்றும்
No comments:
Post a Comment