தேடல்
எதிலும் தேடல் வேண்டும்
எதையும் தேடல் வேண்டும்
தேடலே வாழ்வின் நாதம்
தேடலின்றி வாழ்வேது நிதம்!
நல்லன்பைத் தேடி நிற்போம்
நல்லறிவை நாடிச் செல்வோம்
பல்லறிவை நாடிச் சென்றால்
பகுத்தறிவு வளர்ந்து நிற்குமே!
சொல்லறிவை நாடிச் சென்றால்
சொர்கத்தை மனத்தில் கொள்ளலாம்
இல்லறிவை நாடிச் சென்றால்
இல்லாமை மறைந்திடு மன்றோ!
கல்லறிவு வாழ்ந்திட வழிகாட்டும்
காலமெல்லாம் மகிழ்ந்திட செய்திடும்
பட்டறிவு பெற்று நின்றால்
பகுத்தாயும் மனத்தைப் பெறுவோமே!
---- சிகுரு
No comments:
Post a Comment