மாற்றிடுவோம்
எத்தனை கனவுகள் வந்தாலும்
அத்தனையும் உண்மையாகுமா?
அகிலம் நமக்குக் கிடைத்திடுமா?
அற்புதக் கனவு நிலைத்திடுமா!
மாறிவாழ்வதற் கேற்பவே சீறிடும்
குணத்தை நாமும் விட்டொழிப்போம்
சிறுமைப் பண்பை ஒழித்திடுவோம்
சீற்றந்தனை எப்போதும் அழித்திடுவோம்!
சீற்றமெல்லாம் அழிந்திடும்வபோது
சிறப்புப் பண்பு புகுந்திடுமே!
உத்தமராக நடித்திடாமல் நாம்
உண்மையில் மாறிடுவோம்.
பிறர்நோக நடந்திடாமல் நம்
பிறவிக்குணத்தை மாற்றிடுவோம்
போலிவேசம் போட்டிடாமல் புகழினை
பெற்றிடுவோம்! நிலைத்து வாழ்வதற்கே!
மனிதனுக்கு மனிதனென்ன அடிமை
மடமைப் பண்பை மாற்றிப்பழகு
மற்றவருனை என்றும் நினைத்திடவே
மாசிலா மனத்தைப் பெற்றிடுவாய்!
- சி. குருசாமி
No comments:
Post a Comment