Saturday, September 13, 2014

உயர்நிலை 1 உயர்தமிழ் மாணவருக்கான மாதிரி வினா


மாதிரித் தாள் 2014
உயர்நிலை 1 உயர்தமிழ்
தமிழ் – தாள் 1
நாள்:                                              மொத்த மதிப்பெண்கள்: 60
                                                             நேரம்: 2 மணி



குறிப்பு: ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.


``’’ பிரிவு (மின்னஞ்சல்)


பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 100 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும்.                (20 மதிப்பெண்கள்)


  
1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
  எழுதவும்.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSpNgmXGv52xQ6xFK9eN7Hud9JBIYIdDrGNi3klVl_tmxbEz306qFmsi_o File     Edit      View     Tools      Message     Help        

அனுப்புநர்
kamali @hotmail.com  
பெறுநர்
mala @gmail.com
பொருள்
பார்க்கத் தகுந்த இடங்களும் நன்மைகளும்

மாலா,
வணக்கம்.

நாங்கள் நலம். உன் குடும்பத்தினர் அனைவரும் நலமா? அடுத்த மாதம் எங்கள் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் வரத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு வேண்டிய திட்டத்தைச் செய்து விட்டோம். எங்கள் தாத்தா, பாட்டியையும் சிங்கப்பூருக்கு எங்களுடன் அழைத்து வருகிறோம். அவர்களுக்குச் சிங்கப்பூர் மிகவும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் பார்க்கத் தகுந்த இடங்கள் யாவை என்பதையும் அவற்றின் மூலம் எத்தகைய நன்மைகளைப் பெறலாம் என்பதையும் மின்னஞ்சல் ஒன்றில் நீ எனக்கு விளக்கி எழுதவும்.  


நன்றி.
கமலி


2 பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.


உன் குடியிருப்புப் பேட்டையில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. அங்குப் பயிற்சி செய்வதற்குப் பலர் வருகின்றனர். அவர்களுள் ஒருசிலர் பயிற்சிக்கூடத்தில் இருக்கும் கருவிகளைச் சேதம் செய்கின்றனர். அவர்களுக்கு அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்பதை நீ உணர்ந்துகொள்கிறாய். எனவே அவர்களின் செயல்பாடுகள் குறித்துச் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று எழுது.


மின்னஞ்சல் முகவரி:
அனுப்புநர்:      selva @hotmail.com
 பெறுநர்:    moorthy @gmail.com

``’’ பிரிவு (கட்டுரை)


பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 180 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.                                       (50 மதிப்பெண்கள்)


 3
மூதியோர்களால் நம் சமுதாயம் பல நன்மைகளை அடைந்து வருகின்றது. அவற்றைப் பற்றி விளக்கி எழுது.

        
4
உன் பள்ளி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை விளக்கி எழுது.

5
உன் நண்பனிடமிருந்து நீ கற்றுக்கொண்ட உயர்ந்த பண்புகளை விளக்கி எழுது.



No comments:

Post a Comment