அலுவலகக் கடிதம் மாதிரி
2 பின்வரும்
தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.
உன் குடியிருப்புப் பேட்டையில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது.
அங்குப் பயிற்சி செய்வதற்குப் பலர் வருகின்றனர். அவர்களுள் ஒருசிலர்
பயிற்சிக்கூடத்தில் இருக்கும் கருவிகளைச் சேதம் செய்கின்றனர். அவர்களுக்கு
அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்பதை நீ உணர்ந்துகொள்கிறாய். எனவே
அவர்களின் செயல்பாடுகள் குறித்துச் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று
எழுது.
|
||||||||
|
||||||||
மாலா,
வணக்கம்.
நான் சிராங்கூன் வட்டாரத்தில் சுமார் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் பெயர் கமலி. நான் உயர்நிலை 3-இல் படித்து வருகிறேன். எங்கள் வட்டாத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெறும் குறும்புச் செயல்கள் பற்றி இக்கடிதத்தில் வட்டார வாசிகள் சார்பில் குறிப்பிட விருக்கிறேன்.
எங்கள் வட்டாரத்தில் பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு வட்டார வாசிகளின் சார்பில் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் எங்கள் வட்டாரத்தில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைத்துத்தந்துள்ளீர்கள். அக்கூடத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை பல பயிற்சிகளைச் செய்து வருகின்றனர். இவற்றின் மூலம் எங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும், இவ்வட்டாரத்தில் வசிக்கும் முதியோர்கள் பலர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இக்கூடத்தில் செய்து வரும் பயிற்சிகள் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று கூறும் திருமூலர் கூற்றை மெய்யாக்குவதற்கு எங்களுக்கு மிகவும் உதவி வருகின்றன.
சில நாட்களாக அருகில் உள்ள வட்டாரத்தில் வசிக்கும் சிறுவர்கள் பலர் இங்கு வந்து உடற்பயிற்சி செய்வதுடன் பயிற்சிக்கூடத்தில் உள்ள பயிற்சிக்கருவிகளைச் சேதம் செய்து வருகின்றனர். இவர்களின் குறும்புத்தனம் எங்களுக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. நாங்கள் அவர்களிடம் பல முறை கூறியும் அவர்கள் தொடர்ந்து குறும்புத்தனம் செய்து வருகின்றனர். அவர்களுக்குப் பொதுச்சொத்தைப் பாதுகாக்கும் மனம் இல்லை. அவர்களைக் கண்காணிக்கும் வண்ணம் கேமராக்களை உடற்பயிற்சிக் கூடத்தில் பொருத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவற்றின் மூலம் பயிற்சிக் கருவிகளை நாசம் செய்யும் சிறுவர்களைப் பிடித்து அவர்களுக்குக் காவல்துறையின் மூலம் தக்க அறிவுரை கூறும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
கமலி
|
||||||||
|
No comments:
Post a Comment