Saturday, September 13, 2014




உயர்தமிழ் 3 தாள் 1 மாதிரி வினாத்தாள் 


மாதிரித் தாள் 2014
உயர்நிலை 3 உயர்தமிழ்
தமிழ் – தாள் 1
நாள்:                                            மொத்த மதிப்பெண்கள்: 90
                                                             நேரம்: 2 மணி



குறிப்பு: ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.


``’’ பிரிவு (மின்னஞ்சல்) 



பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 130 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும்.                  (20 மதிப்பெண்கள்)


  
1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
  எழுதவும்.



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSpNgmXGv52xQ6xFK9eN7Hud9JBIYIdDrGNi3klVl_tmxbEz306qFmsi_o File     Edit      View     Tools      Message     Help        

அனுப்புநர்
kamali @hotmail.com  
பெறுநர்
mala @gmail.com
தேதி
15.09.2014
பொருள்
பார்க்கத் தகுந்த இடங்களும் நன்மைகளும்

மாலா,
வணக்கம்.

நாங்கள் நலம். உன் குடும்பத்தினர் அனைவரும் நலமா? அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பண்பாட்டுத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். உங்கள் நாட்டில் பண்பாட்டுத் திருவிழா எப்படி நடைபெறும் என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் எங்கள் சமூக மன்றத்தின் சார்பில் மாபெரும்  திருவிழா ஒன்று நடைபெற உள்ளது.

உங்கள் நாட்டில் நடைபெறும் திருவிழாவினைக் கொண்டாட எப்படித் திட்டமிட்டீர்கள். திருவிழாக் கொண்டாட்டக்குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருந்தார்கள்.  அவர்களின் பணி என்னென்ன என்பன போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவை எங்களுக்குத் திட்டமிடும்போது மிகவும் உதவி செய்யும்.  

பதிலினை மின்னஞ்சல் ஒன்றில் நீ எனக்கு விளக்கி எழுதவும்.  


நன்றி.
கமலி












2 பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

உன் குடியிருப்புப் பேட்டையில் விளையாட்டுத் திடல் இல்லை. புதிதாக விளையாட்டுத்திடல் ஒன்றை அமைத்துத் தரும்படியும் அதன் மூலம் உன் வட்டாரவாசிகள் அடையவிருக்கும் பயன்கள் குறித்தும் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று எழுது.
மின்னஞ்சல் முகவரி:
அனுப்புநர்:      selva @hotmail.com
 பெறுநர்:    moorthy @gmail.com

``’’ பிரிவு (கட்டுரை)


பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 260 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.                                       (70 மதிப்பெண்கள்)


 3
உன மனநிலையைப் பாதித்த ஒரு சம்பவத்தையும் அதிலிருந்து நீ கற்றுக்கொண்ட பாடத்தையும் விளக்கி எழுது.

        
4
மூத்தகுடிமக்கள் நம் நாட்டிற்குச் செய்துள்ள நன்மைகளையும் அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும் விளக்கி எழுது.

5
ஒருவர் தம் அடையாளத்தை அறிந்துகொள்ள தாய்மொழி மிகவும் உதவிசெய்துவருகிறது கருத்துரைக்க.


முற்றும்





























No comments:

Post a Comment