Thursday, September 23, 2010

கோடிட்ட இடத்தை நிரப்புக

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் _________________. ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை ___________________ கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். _______________________ அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். ________________________ அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் ____________________ அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல _________________________ நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.

No comments:

Post a Comment