Wednesday, July 24, 2013

மதிப்பீடுகள் - கையெழுத்துப்படிகளில் உள்ளவை.

`மதிப்பீடுகள்' என்னும் சிறுகதையில் கார்த்திகேயன் தன் நண்பனிடம் கொடுத்த கையெழுத்துப்படிகளில் காணப்பட்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

1 நாட்டுக்கு ஆபத்தானவர்கள் இல்லை என்பதை அறிந்த பின்னரே விடுதலை செய்தல்
2 கொடுமையான கைதிகளை அந்தக் காலத்தில் அந்தமான் எனப்படும் தீவுக்கு
அனுப்புதல்
3 சிவகாமசுந்தரரும் அவருடைய வங்காளி நண்பன் லத்தீப்பும் புக்கிட்தீமா மலைப்
  பக்கம் புதுவாழ்வு தேடினர்
4 கடும் உழைப்பு, காட்டை அழித்துக் காய்கறிகளைப் பயிரிடுதல்
5 மக்களின் பார்வை - கேவலமாகப் பார்த்தல், நடத்துதல், ஒதுக்கிவைத்தல்– ஊர்
   உருவாகக் காரணமாக இருத்தல்
6 `கிள்ளிங் கிள்ளிங்' என்று அழைத்தல்–மலாயர்களும் சீனர்களும் இந்தியாவில்
  இருந்துவந்த அத்தனைபேரையும்,`கிள்ளிங் கிள்ளிங் என்று அழைத்தல்
7 சொந்த ஊர்க்காரனும் கொடிய கைதிகளாக நினைத்து ஒதுங்குதல்
8 மற்றவர்கள் இந்தியர்கள் எல்லோரையும்,`கிள்ளிங்' என்று அழைத்தல்
9 லத்தீப் குடும்பஸ்தன் ஆகிவிட்டான், பணக்காரனும் ஆகிவிட்டான் - மலாய்ப்
பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்
10 கவிதைகளிலும் கனவுகளிலும் மயக்கம் கொண்ட சிவகாமசுந்தரர் பணக்காரராகவும்
   ஆகமுடியவில்லை, ஓர் இந்தியப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளவும்
   முடியவில்லை.
11 மதத்தின் முன் `கிள்ளிங் என்று அழைப்பது லத்தீப் வாழ்க்கையில் மறைந்துவிட்டது
12 குற்றக்கைதி என்னும் அடையாளத்தைத் தூக்கி எறிதல்
13 மதமும் இனமும் சிவகாமசுந்தரருக்கு நல்வழி காட்டவில்லை, அவர் மலாக்காச் செட்டிப் பெண்ணைத் திருமணம் செய்தல்
14 `துபாஸ்', சதாசிவப்பண்டிதரோடும், சிங்கை நேசன் ஆசிரியர் மகதூம் சாயுபோடும்
   சிவகாமசுந்தரருக்குப் பழக்கம் ஏற்படுதல் அவர்களிடமும் சிவகாம சுந்தரர் அவர்
ஒரு பிரிட்டிஷ் குற்றக்கைதி என்ற விசயத்தைச் சொல்லவில்லை. நான் சொல்லி
ஒருவேளை அவர்களும் மற்றவர்களைப்போல் என்னைப் பார்க்கத் தொடங்கிவிட்டால்...


No comments:

Post a Comment