Wednesday, July 24, 2013

ஆறுசெல்வம் - சுருக்கம்

1. ஆறு செல்வங்களுள்,`அறிவுச் செல்வமே' சிறந்தது என்பதை டாக்டர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின்,`அறிவுச் செல்வம்' என்னும் கட்டுரையின் துணைகொண்டு விளக்குக.

1 அறிவே செல்வம்
2அறிவுச் செல்வத்தைப் பெற்றுவிட்டால் அனைத்துச் செல்வமும் வந்துசேரும்
3 அறிவுச் செல்வம் தன்னைக் காப்பதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காக்கும்
4 அறிவுச்செல்வம் காலத்தால் அழியாது
5 மனம் மயங்கும் அறிவு மயங்காது
6 அறிவு கலங்காது (மனம் வாய்க்காலில் ஓடும் நீர், அறிவு அதன் இருகரை)
7 ஒரு கருத்தைப் பகுத்துப் பார்க்கும் ஆற்றல் அறிவுக்கு உண்டு
8 அனைவரையும் நண்பர்களாக்கிக்கொள்ளும் ஆற்றல் உண்டு, எதிர்காலத்தை அறியும்
ஆற்றல் அறிவுச் செல்வத்துக்குண்டு
9 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் பழி பாவங்களைக் கண்டு அஞ்சுவர்
10 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் குறைவாகப் பேசி, பகைவர் உள்ளத்தில்
பதிக்கவேண்டிய கருத்தைப் பதிப்பர்
11 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் உண்மைகளை ஆராய்வர்
12 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள்,``ஒன்றே குலம், ஒருவனே தேவன், யாதும் ஊரே
யாவரும் கேளிர்'' என்ற கொள்கையைப் பின்பற்றி நடப்பர்
13ஒரு செயலைச் செய்யும் முன்னர் அதன் நன்மை தீமைகளை ஆராய்வர்
14 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவர்
15 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் தங்களை அறிவாளி என்று
நினைத்துக்கொள்வதில் தவறு இல்லை
16 அறிவுச் செல்வம் கல்வி மற்றும் கேள்விச் செல்வத்தைவிடப் பெரியது
17 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்களால் நாடும் மொழியும் வளம்பெறும்


No comments:

Post a Comment