Saturday, October 23, 2010

தயாரிப்பு ஆசிரியர் சி. குருசாமி
குறிப்பு –
சிலர் வலைப்பூவில் உள்ள கருத்துகளைப் படித்துப் பயன்படுத்தி வருவதால் நேரில் நன்றி கூறுகிறீர்கள், அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தாங்களின் தேவைகளையும் கருத்துகளையும் படித்தபின்னர் தட்டச்சு செய்து அனுப்பினால் நலம் பயக்கும்.

பயிற்சி 32


கவிதையில் பொதுவாக இருக்கவேண்டிய கருத்துகள்

நோக்கம்

கவிதை – கரு / களம்

கருத்துகள்
நேரடிக் கருத்துகள், மறைமுகக் கருத்துகள்

முக்கிய உறுப்புகளின் அடிப்படையில் இனிமை இருத்தல்

சுருக்கமும் தெளிவும்

பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்து இருக்கலாம்

தேவையை அடிப்படையாக க் கொண்டும் அமையலாம்

உயர்ந்த கொள்கைகளை விளக்குவதற்கும் எழுதலாம்

அறிவுத்திறனை வளர்ப்பதற்கும் எழுதலாம்

தனிமனிதனின் பிரச்சினையும் சமூகத்தின் பிரச்சினையும் இடம்பெறலாம்

கவிதை என்பதன் விளக்கம்

உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
உரு வெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை - தேசிக விநாயகம்



* வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் கருத்துப் பெட்டகம்

* பொதுவாக மனிதனையும் மனிதன் சார்ந்திருக்கின்ற இயற்கையையும் கொண்டு அமையும்

* சொல்லவிரும்பும் கருத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே கவிஞனின் கடமை


எது கவிதை?

அறிஞர் கிறுக்குவது
நற்கவிதை யன்றோ
ஆன்றோர் கூற்று
பொற்கவிதை யன்றோ
வறியோர் புலம்புவது
வாழ்கவிதை யன்றோ
வற்றாத நதியினொலி
வளர்கவிதை யன்றோ!

இல்லோர் ஏங்குவது
இன்கவிதை யன்றோ
களம்பல பாடுவது
கவிபரணி யன்றோ
வள்ளுவர் வகுத்தநெறி
வான்கவிதை யன்றோ! - - கவிமொழி

கற்பனை

மீனினம் ஓடிப் பறக்குதம்மா - ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா - இந்த
மாட்சியிலுள்ளம் முழுகுதம்மா - தேசிக விநாயகம்


பொருள் சிறப்பு

கார்மேகம் திரண்டு நிற்க
கானத்து மயில்கள் நோக்க
விசிறி விரிந்து அசைய
விவரம் சொல்லி நிற்குதே! - குரு

மொழி

திக்கெட்டும் சென்றிடும்
செந்தமிழாய் நின்றிடும்
செம்மொழியின் சிறப்புதனைப்
பிறர்சொல்ல மகிழ்ந்திடுவோம்! - கவிமொழி

எதிர்காலச் சிந்தனை

மனிதக்கழிவை மனிதன்
மறைத்துச் சுமக்கும்காலம்
மனிதத் திறத்தால்
மலையேறிப் போயாச்சு - கவிமொழி


அறநெறிக் கருத்துகள்

(நீதி, நேர்மை, வாழ்வாங்கு வாழும் முறை)
``பாயும் புலியகம் ஒழிந்திட வேண்டும் `` குரு

உலகச்சிந்தனை

``.....
விதை போட வேண்டும்
வன்முறை என்றும் ஒழிவதற்கு
வையத்தில் வாழும்முறை அறிவதற்கு ..``
















மாணவர்களே கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொற்களை உருவாக்கிப் பெற்றோர்களிடம் சொல்லிக்காட்டுங்கள். இது போன்ற பயிற்சிகளை உருவாக்கும்போது உங்களின் சொல்வளம் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

உறவையறி - உறவை அறி


இறுதியில் சொல் எழுதுக

உறவை ___________________
உண்மை ___________________
பகுத்து ___________________


அன்பைக் கொடு
அறிவைப் பெறு

_____________ கொடு
____________ பெறு
____________ கொடு
____________ பெறு

No comments:

Post a Comment