Sunday, October 24, 2010

பயிற்சி 37
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – சிந்தனைச் சிற்பி கவிஞர் வாலி இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி உரித்தாகுக.

கவிதை 3 - படி


பாடலின் கருத்து

பெண்ணே!. படித்த பெண்ணைத்தான் இவ்வுலகம் பாராட்டும். எனவே, நீ பாராட்டும்படி படிக்க வேண்டும்.

நீ நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். நீ கல்வியைக் கற்றுக்கொடுக்கும் கல்விச் சாலையின் வாயிற் படியில் ஏறிச் சென்று படிக்க வேண்டும்.

பாரதியாரும் பாரதிதாசனும் மீண்டும் மீண்டும் படித்துச் சாதனைகள் செய்தபடி நீ படிக்க வேண்டும்.

நீ படித்தது நன்றாகப் புரியும்படி ஆழமாகவும், அகலமாகவும் படிக்க வேண்டும். இம்முறையில் படிக்கும்போது அனைத்துப்பாடங்களும் உனக்கு மிகவும் எளிமையாகிவிடும்.

நீ சிறந்த முறையில் படிக்கும்போது படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அதனால், பெண்ணே! படிப்பு உனக்கு முக்கியம் ஆகும்.

நீ இருக்க வேண்டிய இடம் சமையல் கூடம் என்று யாராவது சொன்னால் நீ அவர்கள் மீது கோபப்படு. வாழ்க்கை என்னும் படகை முறைப்படி நன்றாகச் செலுத்துவதற்குக் கல்விதான் நீ கையில் ஏந்தவேண்டிய துடுப்பாக இருக்கிறது..

பெண்ணே! படித்து முடித்தபின்னர் நீ வேலைக்குப் போனால் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால் ஆண்பிள்ளை வீட்டாரைத் தேடிப்போகாமல் அவர்களாகவே வீடு தேடி உன்னைப் பெண்பார்க்க வருவார்கள்.

திருமணத்திற்குப் பின்பு உன் கணவனின் தாயாருக்கு ஓரளவு நீ கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். மேலும், நீ நம் முன்னோர்கள் கூறியுள்ள மரபுப்படி நடக்கவேண்டும்.

1
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
2
பெண்கள் ஏன் கல்வி கற்கவேண்டும் என்று வாலி கூறுகிறார்?
3
பெண் கல்வி கற்பதால் அடையும் நன்மைகள் யாவை?
4
கவிஞர் வாலி எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?
5
மரபு வழி வந்த பெண்களைப் பற்றி கவிஞர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
6
படித்த பெண்களின் சிறப்புகளைக் கவிஞர் வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
7
`படி` என்னும் கவிதையில் அமைந்துள்ள சொல்லாட்சி சிறப்பினை விளக்கி எழுதுக.

No comments:

Post a Comment