Saturday, May 14, 2022

 சொல்ல மறந்த கதை


சொல்ல மறந்தகதை ஆயிரமாயிரம்

சொல்லி முடித்தகதை ஆயிரமாயிரம்

அத்தனையும் நெஞ்சின் குமுறல்

நெஞ்சு சொல்லி முடித்த கதை


மனைவியிடம் சொல்லும்  கதை ஆயிரம்

மக்களிடம் சொல்லும் கதை பலவாயிரம்

பார்ப்பவரிடம் பகிரும்  கதை சிற்சில

பதுங்கிப் பதுங்கிச் சொல்லும் கதைபல


எத்தனை கதைகள் சொன்னாலும்  என்கதைக்கு

என்றும்  விடிவில்லை என்னிடம் மனத்தில் பொய்யில்லை  

புகழ்பாட மனமும் இல்லை பொறுப்பில் உயரவழியுமில்லை  

சொல்லமறந்த கதையா  மறைந்து நிற்கட்டுமே!!


No comments:

Post a Comment