சொல்ல மறந்த கதை
சொல்ல மறந்தகதை ஆயிரமாயிரம்
சொல்லி முடித்தகதை ஆயிரமாயிரம்
அத்தனையும் நெஞ்சின் குமுறல்
நெஞ்சு சொல்லி முடித்த கதை
மனைவியிடம் சொல்லும் கதை ஆயிரம்
மக்களிடம் சொல்லும் கதை பலவாயிரம்
பார்ப்பவரிடம் பகிரும் கதை சிற்சில
பதுங்கிப் பதுங்கிச் சொல்லும் கதைபல
எத்தனை கதைகள் சொன்னாலும் என்கதைக்கு
என்றும் விடிவில்லை என்னிடம் மனத்தில் பொய்யில்லை
புகழ்பாட மனமும் இல்லை பொறுப்பில் உயரவழியுமில்லை
சொல்லமறந்த கதையா மறைந்து நிற்கட்டுமே!!
No comments:
Post a Comment