Saturday, October 22, 2011

சுயவிடைக் கருத்தறிதல் - ஒரு கண்ணோட்டம்

மனத்தில் கொள்ளவேண்டியவை

* சுயமாக விடையை எழுதவேண்டும்

* சொந்தக் கருத்தை எழுதாமல் இருக்கவேண்டும்

* பொருத்தமற்ற மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது

* பனுவலை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்

* பொதுவான மையக் கருத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்

· உடன் பாட்டு வினாக்களையும் எதிர்மறை வினாக்களையும் அடையாளம் கண்டு அதற்குத் தகுந்தாற்போல் கருத்தறிதலில் அமைந்துள்ள விடையை மாற்றி எழுதும் திறனைப் பெறுதல்


· வினாக்களின் அமைப்பு முறை

வினா அமைப்பு
பொருள்

யார்?
ஒருவரைக் குறிப்பது
எது?
ஒன்றைக் குறிப்பது
யாது?
ஒன்றைக் குறிப்பது
யாவர்?
பலரைக் குறிக்கும் பன்மைச் சொல்
எப்படி?
பொதுவாக வழிமுறைகள்
என்ன?
கருத்தைத் தெரிந்துகொள்ளக் கேட்பது (பேசுவது என்ன? சொல்வது என்ன?)
என்னென்ன?
வகைகளைக் குறிப்பது
எத்தகையன?
பொதுவாகப் பண்பைக் குறிப்பது
எப்படிப்பட்டவை?
பொதுவாகப் பண்பைக் குறிப்பது
எப்போது?
காலத்தைக் குறிப்பது
எங்கே?
இடத்தைக் குறிப்பது


· வினாக்களை அணுகுமுறை

* கேள்வியை (எடு - யார்?) அடிக்கோடு இடுதல் வேண்டும்

(எடு) கோபால் கடைக்குப் போனான். அவன் அங்குப் பொருள்கள் வாங்கினான்.

கேள்வி - கோபால் எங்கே போனான்?

பதில் - கோபால் கடைக்குப் போனான்.
· எழுவாயைப் (கோபால் என்ற பெயரை) பயன்படுத்தவேண்டும்

· கந்தன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினான்.
· வீடு திரும்பியது யார்?
· கந்தன் வீடு திரும்பினான்.
· வீடு திரும்பியது கந்தன்.

· வினாவும் விடையும்

· வினாவைக் கொண்டு பதிலை முடித்தல்

(எடு)மல்லிகா மலர் வாங்கி வந்தாள்?
மல்லிகா என்ன வாங்கி வந்தாள்?
மல்லிகா மலர் வாங்கி வந்தாள்.

· பிழை இன்றி எழுதவேண்டும்

· நீண்ட வாக்கியம் எழுதுவதைத் தவிர்க்கலாம்


· இணைப்புச் சொற்களைப் பயன்படுத்தலாம்

· ஒவ்வொரு வினாவாகப் படித்துப் பதிலைக் காண்பது நல்லது

· அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதவேண்டும்


கீழ்க்காணும் வினாக்களில் வினாப் பகுதியை மட்டும் அடிக்கோடு இட்டு வினாவின் தன்மையைப் புரிந்து கொள்க.

நாம் பிறர் பண்புகளைப் பார்த்துச் செய்யவேண்டியது என்ன?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

நமக்கு எப்போது நம்பிக்கை பிறக்கும்?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
நம்முடைய செயல் சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும்?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
மாதிரிப் பகுதி

கதை எழுத நினைக்கின்ற இளம் எழுத்தாளர்கள் மிகச் சிறந்த கதைகளைப் படித்தால் புதிய சிந்தனைகள் தோன்றும். அவர்கள் கதையை யாருக்காக எழுதுகிறோம் என்பதை முன்கூட்டியே நன்கு யோசிப்பதுடன் சிறந்த சமூக சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். மேலும், இளம் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்தால் சிறந்த கதைக் கருவினை உருவாக்குவதற்குரிய வழிபிறக்கும். இக்கருவினைக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் எளிய நடையில் அமையும்போது அவை படிப்போருக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

வினாக்கள் அமைப்பு முறை

ஏறக்குறைய ஒரு பதிலுக்கு வரும் பலவகைப்பட்ட கேள்விகள்

1. இளம் எழுத்தாளர்கள் செய்யவேண்டியவை எவை?
2. இளம் எழுத்தாளர்களின் கடமை என்ன?
3. ஒருவர் சிறந்த எழுத்தாளராகுவதற்கு எவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்?
4. வளரும் எழுத்தாளர்கள் வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் யாவை?

விடையின் முதல் நிலை

அமைப்பு
இளம் எழுத்தாளர்கள் மிகச் சிறந்த கதைகளைப் படிக்கவேண்டும்
கதையை யாருக்காக எழுதுகிறோம் என்பதை முன்கூட்டியே நன்கு யோசிக்கவேண்டும்
சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்றுப் பார்க்கவேண்டும்
கதைகள் எளிய நடையில் அமைக்கவேண்டும்

விடையின் இரண்டாம் நிலை அமைப்பு
(விடையைத் தொகுத்து எழுதுதல்)

____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

வளரும் எழுத்தாளர்கள் தோல்வி அடைவது ஏன்?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அனுபவித்திருப்பான். இவை மனிதனுக்கு மனிதன் சூழ்நிலையாலும், மனநிலையாலும் மாறுபடும். இவற்றை எல்லாம் தாண்டி எல்லா மனிதர்களுக்கும் ஒரு பொதுவான சுக துக்கங்கள் இருக்கின்றன. இவை கதைகளில் இடம்பெறும்போது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவைகளாக அக்கதைகள் திகழ்கின்றன. இத்தகைய பொதுத் தன்மை வாய்ந்த கதைகள் படிப்பவரின் ஆழ்மனத்தில் ஒருவித விளைவை ஏற்படுத்தும்போது அவை மிகச்சிறந்த கதைகளாகக் காலவெள்ளத்தில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. எனவே, உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய கதா பாத்திரங்களைப் படைத்த கதாசிரியர்கள் மக்களால் போற்றிப் புகழப்படுகிறார்கள்.


ஒருசில கதைகள் மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போவற்கான காரணங்கள் யாவை?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________





சொற்பொருள்
(5 மதிப்பெண்கள்)


பின்வரும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை எழுதவும்

1
வாரிசுகள்



2
சம்பந்தப்பட்ட



3
மாபெரும்



4
அடையக்கூடியதாக



5
சோர்வடையும்




பனுவலும் சொல்லும்
பனுவலில் இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லைப் பொருத்திக் காட்டுக.
இவ்வுலகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகிறது. அவ்வளர்ச்சியின் காரணமாகப் பூமியில் வாழும் மக்களின் வாரிசுகள் இன்று நிலவில் சென்று வாழத்துடிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அங்குச் சுற்றுப்பயணம் சென்று வர நினைப்பவர்கள் தங்களின் பெயர்களைக்கூட முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். இது வியப்பூட்டும் செய்தியாகும். இத்தகைய மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் மனிதர்கள் கடைப்பிடித்து வரும் உயரிய இலக்குகளே ஆகும்.

வாழ்க்கைக்கு இலக்கு மிகவும் அவசியம். நாம் வெற்றி பெறுவதற்கு முதலில் நம் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்மால் அடையக்கூடியதாக இருப்பது நல்லது. நமது இலட்சியம் நடைமுறைக்குச் சாத்தியமாக இல்லாவிட்டால் அதை அடைவது இயலாது. அம்முயற்சியில் ஈடுபடும்போது சலிப்பு ஏற்படுவதோடு மனமும் சோர்வடையும்.

நன்றியுடன்
ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment