பக்குவம் பெற்றிட
வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்
வீரர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்
தம்மிடம் இருப்போரைத் தழுவிச் செல்லும்
தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!
எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்
மாறா மனிதநேயம் இருந்திட வேண்டும்
பணிபல முடித்திடினும் பார்போற்றும் நிலைவந்திடினும்
பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!
உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம் வேண்டும்
தத்துவம் அறிந்திடினும் மனத்தத்துவம் உணர்ந்திடவேண்டும்
உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்தகொள்கைதனை
உள்ளத்தில் வகுத்தொளிவின்றி உயர்ந்து நின்றிடவேண்டும்!.
- கவிமொழி - சி.கு
No comments:
Post a Comment