பார் போற்றும் நற்குணம்
பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்
பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்
பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்
பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!
சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்
சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்
பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்
புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!
கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்
காட்டாறு போலது விரிந்திட வேண்டும்
கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்
கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!
- சிகுரு
No comments:
Post a Comment