கசக்கிப் பிழிந்த வேடன்
சோவென்று பொழிந்தது மழை
சொர்க்கமாக நினைத்தது வயல்
சொல்லிப் பூத்தன பூக்கள்
சொல்லாமல் சென்றன ஈக்கள்!
கொண்டு சென்றன தேனை
குடித்து மிதந்தன காற்றினில்
கூட்டை அடைந்தன ஈக்கள்
கொட்ட மறந்து தூங்கின!
காட்டில் வாழ்ந்த மனிதனோ
கண்ணில் பட்ட தேனடையை
கசக்கிப் பிழிந்தான் கருவுடனே
கதறித் துடித்தன ஈக்கள்!
என்ன மகிழ்ச்சி மனத்தில்
துள்ளிக் குதித்தான் வேடன்
கொண்டு கொடுத்தான் பண்ணையில்
கூலி கொடுத்தார் பண்ணையாரே!
இனிப்பாய் நினைத்தான் வேடன்
இதயம் பிழிந்ததை மறந்தான்
உள்ளம் துடித்த ஈக்களோ
உலகை மறந்தன அப்பொழுதே!
------சிகுரு
No comments:
Post a Comment