வற்றாத பண்பு
வற்றாத பண்பு நமக்கு என்றும் வேண்டும்
வளமான வாழ்வினைப் பெற்றிடவேண்டும்
வாழும்முறையினை அறிந்திடவேண்டும்
வயதானபின்னருமது தொடர்ந்திடவேண்டும்!
நெஞ்சம் நல்லுணர்வினைப் பெற்றிடவேண்டும்
நெஞ்சாரப் பிறரை மதித்திடவேண்டும்
பெற்றோரைத் தெய்வமாய்ப் போற்றிடவேண்டும்
மற்றோரை அதுபோல மதித்திட வேண்டும்!!
- கவிமொழி -சிகு
No comments:
Post a Comment