Tuesday, September 10, 2013

கதைத் திறனாய்வு 


‘’கருப்பு வெள்ளை’’ என்னும் தலைப்பிலான கதையைப் படித்து திறனாய்வுக் கண்ணோட்டத்தில் கதைக்கரு, நிகழ்ச்சிப் பின்னல், பாத்திரப்படைப்பு, மொழி நயம், ஆசிரியர் சொல்லவிழையும் கருத்து முதலானவற்றை விளக்கி எழுதுக.



இவ்வுலகம் மிகப்பெரியது, மனிதனின் சிந்தையும் விரிந்துகொண்டே வருகிறது.  விரிந்த சிந்தனையில் உள்ள நல்ல பல கருத்துகளைக் காலங்காலமாக மனித இனம் பாதுகாத்துவருவதை நாம் காணலாம். அவை கருத்துப்பெட்டகங்களாக விளங்குகின்றன. அந்தப் பெட்டகங்களுள் ஒன்று கதை. கதை படிப்பதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். படிக்கும் கதையிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை நாம் பெற்றுக்கொள்கிறோம். நமக்குத் தேவையான கருத்துகளை வழங்கும் கதைகளுள் ஒன்றாக இருப்பது  ____________________________ என்ற கதை ஆகும். இக்கதையைத் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதை இப்படைப்பின் நோக்கம் ஆகும்.

கதைக் கரு

சிறுகதை, நாடகம், கவிதை கட்டுரை போன்ற அனைத்திற்கும் கரு மிகவும் முக்கியமானதாகும். கரு இல்லாமல் எழுதும் கதை காலவெள்ளத்தில் அழிந்துபோகும், அது மக்கள் மனத்தில் நிலைத்த இடத்தைப் பெறாது. எனவே கதை எழுதும் ஆசிரியர்கள் கருவை முன்கூட்டியே யோசித்து வைத்துக்கொள்வது ஒரு வழக்கம் ஆகும்.

‘’கருப்பு வெள்ளை’’ என்ற இக்கதை, ‘’மனிதனுக்குப் புறத்தோற்றம் முக்கிய இல்லை. அது கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி உண்மையான அழகு அகத்தில்தான் இருக்கிறது. எனவே, அகத்தைத் தூய்மை நிறைந்ததாக வைத்துக்கொள்வது நமது கடமை’’ என்ற அடிப்படையில் கதை ஆசிரியர் கருவை அமைத்துள்ளார். 







நிகழ்ச்சிப் பின்னல்

நிகழ்ச்சிப்பின்னல் என்பது தனித்தனியே நடைபெறும் கதை நிகழ்ச்சிகளை ஒன்றிணைப்பது ஆகும். கதையின் ஓட்டத்தைப் பின்னிச் செல்வது நிகழ்ச்சி பின்னல் ஆகும். நிகழ்ச்சிப்பின்னல் ஒரு கதையில் சிறப்பாக அமையாவிட்டால் படிக்கும் வாசகர்களிடையே குழப்பம் ஏற்படும்.

இக்கதையில் பன்னிரண்டு வயது ரோஷிணி பள்ளி முடிந்து வீடுதிரும்புகிறான். அவள் கோபமாகக்காணப்பட்டாள். ஏனென்றால் தம் வகுப்புத்  தோழன் முகிலும், தினகரனும் அவளது கருப்பு நிறத்தைக் கேலி செய்ததாகக்கூறினாள். அவள் அவளுடைய தாயர் அவள் வயற்றுக்குள் இருக்கும்போது குங்குமப்பூ சாப்பிடாததைக் காரணம் கூறுகிறாள். அவளுடைய அம்மா சிவப்பாக இருக்கிறாள். எனவே, தந்தையும் தாத்தாவுமே அவளுடைய நிறத்திற்குக் காரணம் என்று நினைக்கிறாள். இதனால், அவர்களை வெறுத்து ஒதுக்குகிறாள். இறுதியில் வேலைக்காரி கூறிய கருத்துகளில் உள்ள உண்மையை உணர்ந்துகொள்கிறாள்  ரோஷினி.  

பாத்திரப்படைப்பு

ராஷிணி

பள்ளியில் படிக்கும் சிறுமி, அறியாமை நிறைந்தவள். மற்றவர்களின் கேலிப்பேச்சுக்கு அஞ்சுபவள். முறைப்படி ஒரு பிரச்சினையைப் பற்றிக் கூறும்போது புரிந்துகொள்ளும் பண்புடையவள், நிறத்தைவிட ஒரு மனிதனுக்குப் பண்பு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தவள். இவளது படைப்பிலிருந்து ஆசிரியர் அறிவுக்கு முதலிடம் கொடுக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.











மொழி நயம்

ஒரு கதையின் வெற்றிக்குக் காரணமாக அமைபனவற்றுள் ஒன்று அதில் அமைந்துள்ள மொழி நயம். இக்கதையில் வாசகர்களை எளிதில் கவரும் வண்ணம் எளிய சொற்களைக் கதை ஆசிரியர் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக










ஆசிரியர் சொல்லவிளையும் கருத்து

இவ்வுலகத்தில் ஒருசிலர் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அது முற்றிலும் தவறான போக்காகும். உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களே, அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்ப நிறம் அமைகிறது. ஆனால், ஒருவரிடம் அமைந்துள்ள அறிவும் பண்பாடும் அவருடைய சூழ்நிலையைப் பொருத்து அமைகிறது. சிறந்த அறிவாளிகளை இவ்வுலம் என்றும் போற்றி வருகிறது. 

அறிவுதான் இவ்வுலகில் முதலிடம் பெறுகிறது. எனவே, நாம் நம்முடைய நிறத்தை நினைத்து வருத்தப்படாமல், அறிவுக்கு முதலிடம் கொடுத்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். அறிவு நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.  இதைத்தான் திருவள்ளுவரும் அறிவு அற்றம் காக்கும் கருவி என்று குறிப்பிடுகிறார். மற்றவர்கள் தோற்றத்தைப் பார்த்துக்கூறும் கருத்துகளை நம்மைப் பாதிக்கலாம். ஆனால் நமது முகத்தோற்றத்தைவிட அகத்தோற்றம் எப்படி இருக்கிறது என்பதுதான் மிகமுக்கியம் என்ற கருத்தையும் ஆசிரியர் வாசகர்களுக்குக் கூறுகிறார்.



எடுத்துக்காட்டுகள்









முதலிய

இப்பகுதியில் சொல்லவேண்டிய கருத்துகள் வாசகர்களிடம் இருக்குமானால் தொகுத்துச் சொல்லலாம்









முடிவுரை

இக்கதை ஆசிரியர் இச்சமூகத்திற்குச் சொல்லவேண்டிய கருத்துகளைச் சுருக்கமாகச் சொல்லியுள்ளார். உலகில் பல பிரச்சினைகள் நிறத்தை வைத்தே நடக்கின்றன. நிறவேறுபாடு பார்ப்பதைத் தவிர்த்தால் உலகம் இன்னும் சிறப்பாக அமையும். எனவே, கதை ஆசிரியர் கூறும் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மாணவப் பருவத்திலேயே இக்கருத்தினை ஊட்டவேண்டும். இனிய எளிய சிறந்த ஒட்டத்தை உடைய இக்கதை மக்கள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.



சிறந்த கதையை எழுதிய கதை ஆசிரியருக்கு நன்றி உரித்தாகுக.

No comments:

Post a Comment