கவிதை இலக்கியம்
கருப்பொருள் :
உலகமும் உயிரினமும்
சிறப்புக்கரு : உறவும் பண்பும்
வளர்த்த
நரி
அடர்ந்த பெருங் காட்டிலே
அசைந்து திரியும்
விலங்குகள்
கூட்டங் கூட்டமாகச்
செல்லும்
கூடியவை உயிர் வாழுமே!
காட்டில் ஒரு குட்டிநரி
காணாமல் அது போனது
போன வழி மறந்தது
புலம்பி அது தவித்தது!
சிங்கம் ஒன்று பார்த்தது
சினத்தை அது மறந்தது
பாசம் காட்டி நின்றது
பால் கொடுத்து மகிழ்ந்தது!
கொஞ்ச காலம் சென்றது
கொஞ்சும் காலம் மறைந்தது
நரிக்குட்டி அங்கிருந்து
பிரிந்தது
நாடிதன் இனத்தோடு
இணைந்தது!
காலம் விரைந்து சென்றது
கால் வீரம் இழந்தது
படுத்துச் சிங்கம்
இருந்தது
பார்த்து நரிக்கூட்டம்
வந்தது!
வஞ்சகமாய்
வளர்த்தநரி நின்றது
வாழ்வை
முடிக்க நினைத்தது
சீறிப்பாய்ந்து
சிங்கத்தைக் கொன்றது
சில்லறைபோல் உடல்சிதறி மறைந்தது!
புரிந்துணர்வைச்
சோதிக்க எழுத்துத் திறப் பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள கவிதையைப் படித்த பின்னர் அடியில்
கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களுள் ஒன்றினைத் தேர்வு செய்து விடை எழுதுக.
1. `வளர்த்த நரி' என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக.
2.`வளர்த்த நரி' என்னும்
தலைப்பு இக்கவிதைக்குப் பொருந்துமா? காரணத்தை
விளக்குக.
3.`வளர்த்த நரி' என்னும்
தலைப்பில் அமைந்துள்ள கவிதையின் மூலம் ஆசிரியர்
கூறவிரும்பும் கருத்துகளை எழுதுக.
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
கவிதையோடுதொடர்புடைய
தொடர்கள் சில. (கூடுதல் பயிற்சி 1)
1 வளர்த்த
கடா மார்பில் பாய்ந்தது
2 பாம்புக்குப்
பால் வார்த்த மாதிரி
3 பாத்திரம்
அறிந்து பிச்சை போடு
4 பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்
5 வெளுத்ததெல்லாம் பால் அல்ல
6 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
7 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்
8 பாசம் கண்ணை மறைக்கும்
9 எச்சரிக்கை என்றும் காக்கும்
கவிதையைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளில்
உன்னை மிகவும் கவர்ந்த கருத்து மூன்றை எழுதுக.ஏன்? (கூடுதல் பயிற்சி 2)
* சீக்கிரம் புரிந்துகொள்ளமுடிந்தது
* எளிய வார்த்தைகளால் ஆனது
* வாழ்க்கையோடு தொடர்புடையது
* விருப்பத்தோடு படிக்க முடிந்தது
* உண்மையான
வாழ்க்கைக் கதை
* இசை வடிவத்திலும் பாடலாம்
* கருத்து மிகவும் சோகமாக இருந்தது
* மனிதர்களிடமிருக்கும் மிருகக் குணம்
* உள்ளம் உருகும் ஒரு சோகக்கதை
* நல்ல பாடமாக அமைந்துள்ளது
* உலகில் உள்ள ஒருசிலரைப்பற்றிய கவிதை
* மக்களின்உள்ளத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்
* வாழ்க்கையில்
மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
* வாழ்க்கைக்குத்
தேவையான செய்திகளைக் கற்றுக்கொள்ளலாம்
* பிரச்சினையைத்
தீர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்
கவிதையோடுதொடர்புடைய கீழ்க்கண்டகருத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைக்
கவிதையின் கருத்துகளின் மூலம் விளக்குக. (கூடுதல் பயிற்சி 3)
நரிக்கொம்பு
விற்றாலும் விப்போமிங்க நாங்கள்
நரி
போன்ற வஞ்சனைகள் செய்ய மாட்டோம் .. திரைப்படப்பாடல்
வலது
கை கொடுப்பதை இடதுகை அறியாமல் ... கர்ணன் கதை
ஒரு
நரி ஓசையிட ஓசை செல்லும் கடலுக்கு
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு .. குறள்
நன்றி
மறவேல் - ஔவையார்
உடல்
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமந்திரம்
உண்டிகொடுத்தோர்
உயிர்கொடுத்தோரே – மணிமேகலை
ஒருவருடன்நட்புக்கொள்வதற்கு
முன்பு அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்
வீட்டுப்பாடம்
அன்பு,
அறிவு, நட்பு,
புரிந்துகொள், ஏமாறாதே,
ஏமாற்றாதே, ஆகியவற்றில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக்
கவிதை ஒன்று எழுதி அதைத் தட்டச்சு செய்யவும்.
நன்றியுடன்
ஆசிரியர்
சி. குருசாமி
No comments:
Post a Comment