Friday, November 9, 2012


சொல்லாமல் சொல்லுவது

மனிதன் பண்பாட்டின் பொருளை உணர்ந்து கொண்ட நாள்முதல் சொல்லாமல் சொல்லும்  இனிய பழக்கத்தையும் கற்றுக்கொண்டான். இதைத்தான் `சாடை மாடையாக` என்று அழகிய இணைமொழியின் மூலம் ரத்தினச் சுருக்கமாக நம் முன்னோர் கூறினர்.

இதோடு தொடர்புடைய பழமொழி ஒன்றை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்கள் மனம் வளம் பெறும்.

`ஆமை சுடுவது மல்லாக்க அதையும் சொல்லப்போனா பொல்லாப்பு`

கணவன் மனைவியிடம் சொல்லாமல் சொல்வதாக இப்பழமொழி அமைந்துள்ளது. ஊடல் ஏற்பட்ட மனைவி, கணவன் ஆமை என்னும் உயிர்ப்பொருளைச் சமைக்க முற்படும்போது துன்பப்படுவதைக் கண்டாள். அவள் கணவனோடு பேசமாட்டாள். இருப்பினும்  அவள் ஆமையைக் குப்புறப் போட்டுப் பலமுறை தீயில் சுடப்போன கணவன் தோல்வி அடைவதைப் பார்க்கிறாள். அவன் தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி அவனைப் பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி இப்பழமொழியைக் கூறுகிறாள். இப்பழமொழியில் அடங்கியுள்ள உறவு முறைப் பண்பாட்டைப் பாருங்கள் ஆழமான கருத்தை உணருங்கள்.

நன்றியுடன்

சிகு

No comments:

Post a Comment