Thursday, April 15, 2010

பயிற்சி 17 / 2010

· நம்மிடம் பொதுவாக இருக்க வேண்டிய பண்புகள்
· (கட்டுரையில் பொதுவாக அமையும் கருத்துகள்)

ஆழமாகச் சிந்தித்தல்
கடின உழைப்பு
விடாமுயற்சி
சிறந்த பண்புக் கூறுகளைப் பெற்றிருத்தல்
வேற்றுமையில் ஒற்றுமை
ஒற்றுமை உணர்வு
கூட்டுறவே நாட்டுறவு
கூட்டு முயற்சி
தனிநபர் சிந்தனையை வளர்த்தல்
பிறர் உழைப்பைச் சுரண்டாத மனம்
பிறரை வாய்ப்பிருக்கும்போதுகூட அச்சுறுத்தாமல் வாழுதல்
உண்மையான உழைப்பைப் புரிந்துகொள்ளுதல்
பிறருடைய கருத்தையோ முயற்சியையோ தடுக்காமல் இருத்தல்
நல்லவராகவே வாழ முயற்சி செய்தல்
முடிந்தவரை உண்மை பேசுதல்
தவற்றை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை
தெரியாததைத் தெரியாது என்று தைரியமாகக் கூறும் மனம்
தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருத்தல்
இனத்தின் சிறப்புத் தன்மையைப் புரிந்துகொள்வதோடு மற்ற இனத்தினரையும் மதிக்கத் தெரிந்துகொள்ளுதல்
உதவி செய்யும் மனப்பான்மை
அறிவைப் பெருக்கி ஆற்றலை வளர்த்துக்கொள்ளுதல்
பிறர் மனம் புண்படாமல் பேசும் தன்மை
உயர்விலும் பணிவன்பு
கனிவுகொண்ட மனம்
குடும்பத்தினரை மதிக்கும் மனப்பான்மை
செல்வாக்கையும் பதவியையும் பொருட்படுத்தாமல் இருத்தல்
பதவியைப் பிறருக்கு உதவி செய்ய இயற்கை அளித்த நன்கொடையாக நினைத்தல்
தனித்திறன்களை வளர்த்தல்
பொறாமை இல்லாத பண்பை வளர்த்தல்
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்காமல் இருத்தல்
மூத்தோரை மதிக்கும் பண்பைப் பெற்றிருத்தல்
குடும்பப் பாரம்பரியத்தின் சிறப்பினைக் காத்து நிற்றல். அதோடு வழி வழியாகக் காக்கும் திறனை வளர்த்தல்
உதவி செய்தவரை என்றும் மறவாமல் இருத்தல்
உதவி செய்ததைச் சொல்லிக்காட்டாமல் இருத்தல்
மனதாரப் பாராட்டும் பண்பினை வளர்த்தல்
பேராசை இல்லாமல் இருத்தல்
நியாயமான ஆசையையே வளர்த்தல்
கடுஞ்சொல் பேசாமல் இருத்தல்
சினம் கொள்ளாமல் இருத்தல்
ஏட்டிக்குப் போட்டியாகப் பேசாமல் இருத்தல்
வாழ்க்கைப் பண்பாக நடிப்பைக் கொள்ளாமல் இருத்தல்
போலி கௌரவம் இல்லாமல் இருத்தல்
செல்வாக்கும் பணமும் இல்லாமல் இருக்கும்போது இருப்பதுபோல் நடித்தல்
அன்பு உணர்வைக் கொண்டிருத்தல்
தன்மீது நம்பிக்கை வைத்தல்
அறிவைத் தேடிப் பெறவேண்டும் மற்றவர் அறிவுச்சொத்தில் மாற்றம் செய்து தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது.
அறிவுச்சொத்தைப் பயன்படுத்தும்போது நன்றி தெரிவிக்கும் பண்பை வளர்த்துகொள்ளவேண்டும் (கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமானது, மு.வ. புத்தகத்திலிருந்து எடுத்தது)
படைப்பாற்றல் சிந்தனையை வளர்த்தல்
முடிந்தவரை ஒத்துப் போகும் குணத்தைப் பெறுதல்
குடும்பம், சமூகம், நாடு போன்றவற்றில் அக்கறை செலுத்துதல்
ரகசியத்தைக் காப்பாற்றும் மனப்பான்மையை வளர்த்தல்
மன நிறைவுடன் வாழ முயற்சித்தல்
நேரத்தையும் பொருளையும் வீணாக்காமல் இருத்தல்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தல், கஞ்சத்தனத்தை வெறுத்தல்
உரிமை ஆசிரியர் சி. குருசாமி

2 comments:

  1. பிரித்தல் 3
    மூன்று கடல்
    மரம் ஒன்று
    ஆள் பலம்
    வடம் மேற்கு
    தெற்க்கு மலை
    மேலை நாடு
    பெற்று ஓர்
    பல் பசை
    தமிழ் ஆர்வம்
    உயிர் ஓவியம்
    குருதி ஓட்டம்
    வடக்கு மேற்கு
    வடக்கு மொழி
    பல் பொடி
    கற்று ஊன்
    தன் காப்பு
    பணம் பை
    மல்லிகை பூ
    கொடி மலர்
    மரம் பட்டை

    ReplyDelete
  2. வாக்கியம் அமைத்தல்
    .ஆறுவைசு
    ஆறுவைசு என்பது தமிழருக்கு உடைய ஆறு சுவைகள் ஆகும்.
    .முக்கனி
    முக்கனி என்பது மாங்காய், வாழை, பழாப்பலம் ஆகும்.
    .நூற்றாண்டு
    இருபதாம் நூற்றாண்டுகளில் உலகம் மிகவும் வளர்வதற்கு காரணம் விஞ்ஞானமே ஆகும்.
    .பத்தாண்டு
    முதுவுடைய பத்தாண்டு பிறந்தநாளை கொண்டடுவதரர்காக பத்து என்ற எழுது உடைய கேக்கை அவன் அப்பா வாங்கினார்.
    . பணப்பை
    ராமுவுடைய பணப்பை நிறைய பணத்தால் நிரம்பி இருந்ததால் அவன் அதை பத்திரமாக வைத்துக்கொண்டான்.
    .மல்லிகைப்பூ
    மல்லிகைப்பூ நல்ல வாசமுடைய பூ ஆகும்.
    . தற்காப்பு
    தற்காப்பு கலை அறிந்தால் திருடுபவர்களிடமிருந்து தப்பிவிடலாம்.
    .பெற்றோர்
    என் பெற்றோர் என்னை தினமும் பள்ளிக்கு கொண்டு செல்வர்.
    . பற்பசை
    நான் பற்பசை பயன்படுத்தி என் பல்லை விளக்குவேன்.

    ReplyDelete