Monday, August 1, 2011

இணைமொழிகள்

இணைமொழிகள்

கண்டது கேட்டது

நாம் கண்டது கேட்டது கொண்டு ஒருவரைப் பற்றித் தவறான முடிவுக்கு வரக்கூடாது.

குழலும் யாழும்

இசை மேதைகள் குழலும் யாழும் கொண்டு விழாக்களில் இசை எழுப்பினர்.

தாயும் சேயும்
மருத்துவமனையில் தாயும் சேயும் மிகவும் நலத்துடன் உள்ளனர்.

நன்மை தீமை

ஒருசெயலில் ஈடுபடுமுன்னர் நன்மை தீமையை நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

போரும் பூசலும்

போரும் பூசலும் உள்ள நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள்.

மேள தாளம்

திருமணத்தில் மேள தாளம் இசைத்து மகிழ்வித்தனர்.

No comments:

Post a Comment