Saturday, March 6, 2010

பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.


பயிற்சி 03 / 2010.

செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்


கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.


திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.


இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.


மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.


பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________

பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.


அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.


ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.


பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.


பகுதிகளாகப, குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் , ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.

No comments:

Post a Comment